திருமணமான ஒரே மாதத்தில் வீட்டில் பங்க்ஷன்.. மகிழ்ச்சியை பகிர்ந்த கீர்த்தி சுரேஷ்.. குவியும் வாழ்த்து
சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய 15 வருட காதலரான ஆண்டனி தட்டிலை சமீபத்தில் கோவாவில் திருமணம் செய்து இருந்த நிலையில் திருமணம் ஆன ஒரு மாதத்தில் அவருக்கு மருதாணி நிகழ்ச்சி நடைபெற்றிருக்கிறது. அப்போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார்.
திருமணத்தைப் போலவே மருதாணி பங்க்ஷனையும் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய கணவரோடு கோவாவில் தான் கொண்டாடி இருக்கிறார். அப்போது வித்தியாசமான பல போட்டோக்களை எடுத்து குவித்து இருக்கிறார்.

அதில் ஒரு புகைப்படத்தில் கைகளில் வைக்கப்பட்ட மருதாணி மட்டும் போக்கஸ் செய்யப்பட்டு இருக்கிறது. அதுபோல இன்னொரு போட்டோவில் கைகளில் மருதாணி வைத்துக்கொண்டு சங்கீத் நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடி இருக்கிறார். அவரோடு அவருடைய கணவர் ஆண்டனி தட்டிலும் செம டான்ஸ் போட்டு இருக்கிறார்.

இதைப் பார்க்கும் ரசிகர்கள் பாலிவுட்டுக்கு சென்ற கீர்த்தி சுரேஷுக்கு அங்கு எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி கிடைக்காததால் மீண்டும் தமிழ் பொண்ணாக மாறிவிட்டாரா? என்று கமெண்ட் கொடுத்திருக்கிறார்கள். அதுபோல கீர்த்தி சுரேஷின் கணவர் ஆண்டனி தட்டில் ஹீரோ போல இருக்கிறார் என்றும் அவரோடு சேர்ந்து ஒரு படம் பண்ணுங்க என்றும் ரசிகர்கள் கமெண்ட் கொடுத்து இருக்கிறார்கள்.

கீர்த்தி சுரேஷ் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அதுபோல ஹிந்தியிலும் நடிக்க தொடங்கி இருந்தார். சினிமாவில் அறிமுகம் ஆகி பத்து ஆண்டுகள் நிறைவு செய்ததை சமீபத்தில் தான் கீர்த்தி சுரேஷ் கொண்டாடி இருந்தார். குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் மூன்று படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ் 2013 ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி வெளிவந்த மலையாள படமான கீதாஞ்சலி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

அந்த படத்தை பிரியதர்ஷன் இயக்கி மோகன்லால் கதாநாயகனாக நடித்திருந்தார். அதுதான் கீர்த்தி சுரேஷின் முதல் படம். முதல் படத்திலேயே கீர்த்தி சுரேஷ் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். அதற்கு பிறகு தமிழில் இவர் நடிப்பில் வெளிவந்த ரஜினி முருகன் பலருக்கும் இவரை பிரபலப்படுத்தியது. ஆனால் அதற்கு முன்பு 2015ல் இது என்ன மாயம் என்ற படத்தில் மூலமாகத்தான் தமிழில் கீர்த்தி சுரேஷ் அறிமுகமானார்.

ரஜினி முருகன் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த நேரத்தில் 2016 ஆம் ஆண்டு " நேனு சைலஜா" படம் மூலம் தெலுங்கிலும் அறிமுகமானார். நடிகை சாவித்திரியின் பயோபிக் படமான மகா நடிகை படத்தில் சாவித்திரி கதாபாத்திரத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது சுரேஷுக்கு கொடுக்கப்பட்டது.
ஆனால் இத்தனை வருடங்களாக சினிமாவில் இருக்கும் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய காதலை ரகசியமாக வைத்திருந்த நிலையில் திருமணத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு அதை ரசிகர்களிடம் பகிர்ந்து இருந்தார். ஆனால் திருமணத்திற்கு பிறகு தன்னுடைய கணவரோடு எடுக்கும் அதிகமான புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டு கொண்டிருக்கிறார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களும் தெரிவித்து வருகிறார்கள்.
-
கரூரில் 'ஜனநாயகன்' ஷூட்டிங்?.. சிபிஐ அடுத்த ஆக்சன் என்ன? மாரிதாஸ் வைத்த பாயிண்ட்.. கவனிச்சீங்களா? -
நக்கீரன் கோபால் அப்பவே சொன்னாரே.. கரூரில் நடந்தது உண்மையில் என்ன? ட்ரோன் காட்சிகள் உண்மையா? -
பாஜகவுடன் உறவு.. புஸ்ஸி ஆனந்தை கோர்த்துவிட்ட ஆதவ் அர்ஜுனா.. சங்கடத்தில் சென்னை தவெக நிர்வாகிகள்! -
சிபிஐயிடம் வசமாக சிக்கிய விஜய்? பிரசார வாகனம் 20 மீட்டர் தள்ளிப்போனது ஏன்? கரூர் நெரிசலில் ட்விஸ்ட் -
தவெக இஃப்தார் விருந்து நிகழ்ச்சி.. இன்று நாள் முழுவதும் நோன்பு வைக்கும் விஜய் -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே -
கோமா நிலையில் தவெக.. வசமாக சிக்கிக் கொண்ட விஜய்.. சொல்லி கொடுத்து ஆடுவதால் வந்த வினை! -
விஜய், திரிஷா பிரச்சனையில் குஷ்பு உடைத்த ரகசியம்.. எனக்கு நல்லாவே தெரியும்.. ஓபனாக சொன்ன வார்த்தை! -
வதந்திகளை நம்பாதீங்க.. மதசார்பில் உறுதி! இப்தார் விழாவில் பாஜக கூட்டணிக்கு ரெட் சிக்னல் போட்ட விஜய் -
நெக்ஸ்ட் சிஎம் விஜய்? டெல்லிக்கு போன நேரத்தில் வெளியான கருத்து கணிப்பு! ப்ளான் பண்ணி பண்ணிய பனையூர்! -
Vijay: விஜய் கொண்டு போன கத்தரிக்கோலுக்கு பின்னாடி இப்படி ஒரு ஜாதகம்? பிரபலம் விளக்கம் -
சிம்பு விஜய்யை காலி பண்ணி இருப்பாரு.. ரஜினி ஒரு வார்த்தை சொன்னால் வேற மாதிரி ஆகிடும்..! பிரபலம் ஆதங்கம்












Click it and Unblock the Notifications