Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என் கல்யாணத்துக்கு வந்த கார்த்திக் கதறி அழுதாரு.. கணவரோடு நான் காலில் விழுந்தேன்.. நடிகை குஷ்பூ ஓபன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை குஷ்பூ பேட்டி ஒன்றில் நடிகர் கார்த்திக் பற்றி சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதிலும் தன்னுடைய திருமணத்தில் கார்த்திக் காலில் விழுந்ததும் அவர் அழுதது குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

நடிகை குஷ்பூ தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தாலும் வருஷம் 16 திரைப்படத்தின் மூலமாகத்தான் கதாநாயகியாக அறிமுகமானார். அவருடைய முதல் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தது நடிகர் கார்த்திக் தான். இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பல பாடல்கள் இப்போதும் பலருடைய ஃபேவரைட் ஆக இருக்கிறது.

Television Khushboo Karthik

அதிலும் "பூ பூக்கும் மாசம்" என்ற பாடல் சுசிலாவின் குரலில் கேட்கும் ரசிகர்களை கிறங்க வைக்கும்.. அதுபோல அந்த பாடலை பார்க்கும் ரசிகர்களை மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கும் வகையில் குஷ்புவின் பெர்ஃபார்மன்ஸ் அசத்தலாக இருக்கும். அந்த பாடலில் குஷ்பூ மற்றும் கார்த்திக் காதல் கன்னாபின்னாவென வழிந்தோடும். இந்த திரைப்படத்திற்கு பிறகு குஷ்பூ கார்த்திக்கோடு ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

அதேபோல நடிகர் மற்றும் இயக்குனராக இருக்கும் சுந்தர் சி யை 2000 வருஷத்தில் குஷ்பூ திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் குஷ்பூ தன்னுடைய சினிமா அனுபவங்கள் திருமண வாழ்க்கை குறித்து பல விஷயங்களை குஷ்பு மனம் திறந்து பேசியிருக்கிறார்.

அதில் அவர் பேசுகையில் என்னுடைய சினிமா வாழ்க்கையில் எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் கார்த்திக் ஒருவர். அவரோடு நான் முதல் திரைப்படத்தில் நடித்திருந்தேன். அதற்கு பிறகு என்னை எப்போதும் அவர் டார்லிங் என்றுதான் கூப்பிடுவார். நாங்க காதலிக்கிற விஷயத்தை முதல் முறையாக என்னுடைய கணவர் கார்த்திக்கிடம் தான் சொல்லி இருந்தார். கார்த்திக்கிடம் எங்களுடைய திருமண விஷயத்தை சொன்னதுமே அவர் ரொம்பவும் சந்தோஷப்பட்டு எனக்கு போன் பண்ணி ஆனந்தத்தில் கண்ணீர் சிந்தியிருந்தார்.

அதுபோல எங்களுடைய திருமணத்திலும் அவர் கலந்து கொண்டார். அவருடைய காலில் நானும் என்னுடைய கணவரும் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினோம். அப்போது அவர் என்னுடைய தம்பியும் தம்பி மனைவியும் என்று சொல்லி எங்களை ஆசீர்வாதம் செய்து இருந்தார். பிறகு வீட்டிற்கு சென்று போன் பண்ணி கதறி அழுதார். அவருக்கு எங்களுடைய திருமணம் ரொம்பவும் சந்தோஷத்தை கொடுத்து இருந்தது.

நான் எவ்வளவு கஷ்டப்பட்டு இருந்தாலும் இனி வாழ்க்கையில் நன்றாக இருப்பேன் என்று அவர் அந்த நேரத்தில் சொல்லியிருந்தார் என்று கார்த்திக் குறித்து அந்த பேட்டியில் குஷ்பூ பேசி இருக்கிறார். அதுபோல தன்னுடைய திருமண வாழ்க்கை பற்றி பேசுகையில் நாங்கள் எங்களுடைய திருமணத்திற்கு பிறகு அதிகமாக சண்டை போட்டோம். காதலித்து கொண்டிருக்கும் போது கூட அவ்வளவு சண்டை போட்டது கிடையாது.

ஆனால் கல்யாணம் முடிந்து கொஞ்ச நாளிலேயே எங்களுக்குள் அதிகமான சண்டை வந்தது. எப்போதும் சண்டை வரும் போதெல்லாம் அவர் உன்னை நான் கல்யாணம் பண்ணாம இருந்திருந்தா சந்தோசமா இருந்திருக்கலாம் என்று சொல்லுவார். நானும் உங்களை கல்யாணம் பண்ணாம இருந்திருந்தா நிம்மதியா இருந்திருக்கலாம் என்று சொல்லுவேன்.

எவ்வளவு சண்டை போட்டாலும் நான் ஒரு நாள் கூட இவரிடம் கோபித்துக் கொண்டு என்னுடைய அம்மா வீட்டுக்கு போனது கிடையாது. எங்களுடைய சண்டை எல்லாம் கொஞ்ச நேரம் தான். பிறகு சமாதானம் ஆகி விடுவோம் என்று அந்த பேட்டியில் சுந்தர். சி பற்றி குஷ்பூ பேசியிருக்கிறார். இது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+