நடிகை மகாலட்சுமியின் கணவருக்கு ஏற்பட்ட மோசமான உடல்நல பிரச்சனை.. ICUவில் அனுமதி.. அதிர்ச்சி காரணம்
சென்னை: சீரியல் நடிகையான மகாலட்சுமியின் கணவர் ரவீந்தர் தனக்கு கடந்த வாரத்தில் ஏற்பட்ட திடீர் உடல்நல பிரச்சினை காரணமாக தான் ICUவில் ஒரு வாரமாக தங்கி இருந்ததாக வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதோடு அதற்கு என்ன காரணம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியை ரிவ்யூ செய்து வரும் ரவீந்தர் தனக்கு நுரையீரலில் ஏற்பட்ட தொற்று காரணமாக தான் ஒரு வாரமாக மருத்துவமனையில் இருந்தேன் என்றும் மூக்கில் டியூப் போடு அவர் வீடியோ வெளியிட்டு இருந்த நிலையில் இணையத்தில் அது வைரல் ஆகி வருகிறது. ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு ரவீந்தர் பண மோசடி செய்து விட்டார் என்று அவர் மீது கொடுத்த கம்ப்ளைன்ட் காரணமாக ஜெயிலுக்கு போயிட்டு வந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதைத்தொடர்ந்து இப்போது உடல்நல பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருக்கும் ரவீந்தர் விரைவில் உடல்நிலை சரியாக வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். ஆனாலும் இந்த நேரத்திலும் ரவீந்தர் செய்த சில செயல்கள் ரசிகர்களின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி இன்னும் ஒரு சில நாட்களில் முடிவுக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை ரிவ்யூ செய்து வரும் தயாரிப்பாளர் ரவீந்தர் வெளியிட்ட வீடியோ தான் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதாவது ரவீந்தர் தனக்கு கடந்த வாரத்தில் நுரையீரலில் ஏற்பட்ட தொற்று காரணமாக மூச்சு விடுவதற்கு கஷ்டமாக இருந்ததாகவும் அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் அங்கு ஒரு வாரமாக தான் ISUவில் இருந்ததாகவும் வெண்டிலேட்டர் உதவியோடு தான் தன்னால் சுவாசிக்கவே முடிந்தது என்றும் கூறியிருக்கிறார்.

அதோடு மருத்துவமனையில் இருந்து வெளியே வந்திருக்கும் போது அவர் வழக்கம் போல தன்னுடைய பிக் பாஸ் ரியூவை தொடங்கி இருக்கிறார். ஆனால் மூக்கில் அவரால் இயல்பாக மூச்சுவிட முடியாமல் இருக்கும் நிலையில் டியூப் மூலமாகத்தான் மூச்சு விட முடிகிறது. இந்த நிலையிலும் பிரபல சேனல் ஒன்றில் அவர் ரிவ்யூ கொடுத்திருக்கிறார். இதனால் அதிகமானோர் அவரைத் திட்டி வருகின்றனர்.
அதே நேரத்தில் சீரியல் நடிகையான மகாலட்சுமியை கடந்த வருடத்தில் தான் ரவீந்தர் காதலித்து திருமணம் செய்து கொண்டிருந்தார். இருவருக்கும் இரண்டாவது திருமணம் என்றாலும் பல ரசிகர்கள் மகாலட்சுமி ரவீந்தரை பணத்திற்காக தான் திருமணம் செய்து கொண்டார் என்று குற்றம் சாட்டி வந்தனர். ஆனால் அதை எல்லாம் கண்டுகொள்ளாத மகாலட்சுமி தன்னுடைய வாழ்க்கையில் அடுத்தடுத்து நகர்ந்து கொண்டே இருக்கிறார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரவீந்தர் ஒருவரிடம் படம் எடுக்க போவதாக மோசடி செய்து விட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருந்த நிலையில் அதன் காரணமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு இப்போது ஜாமினில் வெளியே வந்திருக்கிறார். இந்த நிலையில் உடல் நிலையில் இவருக்கு பிரச்சனை ஏற்பட்டிருக்கும் நிலையில் பலர் இவருக்கு அட்வைஸ் கொடுத்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications