விவேக் காதலிக்கிறேன்னு சொன்னாரு! பிரம்மிக்க வைத்த சிவாஜி! அந்த சம்பவத்தால் அழுதுட்டேன்! நடிகை மோகினி ஓபன்
சென்னை: 1990-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் மோகினி. ஈரமான ரோஜாவே படத்தில் அவரது கண்கள் பேசிய வசனங்களும், வா வா அன்பே பூஜை உண்டு போன்ற பாடல்களும் ரசிகர்களால் இன்றும் மறக்க முடியாதவை. பரத் என்பவரைத் திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் குடியேறிய அவர், தற்போது தனது சினிமா வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அவரது பேச்சில், மறைந்த நடிகர் விவேக் குறித்து அவர் பகிர்ந்த சுவாரசியமான விஷயம், ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அறிமுகமும், சினிமாப் பயணமும்
ஈரமான ரோஜாவே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த மோகினி, பெரிய குடும்பம், புதிய மனிதன், நான் பேச நினைப்பதெல்லாம் போன்ற பல படங்களில் நடித்துப் பிரபலமானார். படப்பிடிப்புத் தளத்தில் மிகவும் அமைதியான, கூச்ச சுபாவமுள்ள பெண்ணாக இருந்த மோகினி, நடிகை குஷ்பு மூலம் தான் எல்லாரிடமும் பேசத் தொடங்கினாராம். வனஜா கிரிஜா படத்தில் ஒரு மோட்டார் பைக் காட்சியில், குஷ்புவும் இவரும் கீழே விழுந்து மோகினிக்குத் தலையில் அடிபட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும், நடிகர் ராம்கியின் தீவிர ரசிகை தான் என்றும், அவரை நேரில் பார்க்க வேண்டும் என்று நடிகை ஸ்ரீவித்யாவிடம் தான் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
விவேக்கின் நகைச்சுவை
மோகினி, தனது பேட்டியில் நடிகர் விவேக்கைப் பற்றிப் பேசியது ரசிகர்களுக்கு ஒரு பெரிய ஆச்சரியத்தைக் கொடுத்தது. விவேக்கிற்குத் திருமணம் ஆவதற்கு முன்பு, இருவரும் பல படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார்கள். அப்போது ஒருநாள், "நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா?" என்று விவேக் கேட்டாராம். இதைக் கேட்ட மோகினி, பயங்கரமாகச் சிரித்துவிட்டாராம். அதன்பின், தினமும் இதைக் கூறி விவேக் தன்னைக் கிண்டல் செய்ததாகவும், இருவரும் படப்பிடிப்புத் தளத்தில் நிறைய பாடல்களைப் பாடியதாகவும் மோகினி கூறியுள்ளார்.

நடிகர் சிவாஜி கணேசனுடன் சின்ன மருமகள் படத்தில் நடித்த அனுபவத்தையும் மோகினி பகிர்ந்து கொண்டார். படப்பிடிப்புக்குச் செல்லும் முன்பு, எல்லோரும் சிவாஜி சார் இப்படித்தான் இருப்பார் என்று பயமுறுத்திவிட்டார்களாம். ஆனால், முதல் நாள் படப்பிடிப்புக்கு 8:50 மணிக்கே அவர் வந்தபோது, சிவாஜி கணேசன் ஏற்கனவே நாற்காலியில் அமர்ந்திருந்ததைக் கண்டு ஆச்சரியமடைந்தாராம்.
சின்ன மருமகள் படத்தில் வடிவுக்கரசி அம்மாவுடன் சண்டை போடும் காட்சி ஒன்றில், மீனைத் தூக்கிப் போடும் காட்சி வந்தபோது, தனக்கு அழுகையே வந்துவிட்டதாக மோகினி கூறியுள்ளார். "நான் மீனைத் தொட மாட்டேன், என்னை விட்டுவிடுங்கள்" என்று தான் அழுதுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அந்த நேரத்தில், வடிவுக்கரசி அம்மா புடவை கட்டும் விதம் குறித்து நிறைய சொல்லிக் கொடுத்ததாகவும் மோகினி நெகிழ்ந்துள்ளார்.
வாழ்க்கையை மாற்றிய திருமணம்
சினிமா வாழ்க்கைக்குப் பிறகு, கணவர் பரத் வந்த பிறகுதான், தனது வாழ்க்கையில் பெரிய மாற்றம் வந்ததாகவும், எல்லோரிடமும் சகஜமாகப் பேசத் தொடங்கியதாகவும் மோகினி கூறியுள்ளார். தனது முதல் மகன் அமெரிக்காவில் வேலை செய்வதாகவும், இரண்டாவது மகனுக்கு அவரே ஆசிரியராக ஹோம் டியூசன் எடுத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
சினிமா வாழ்க்கைக்குப் பிறகு ஆன்மிகப் பயணத்தில் இணைந்த மோகினி, இப்போது ஒரு கிறிஸ்தவப் போதகராக மாறிப் பல இடங்களில் உரையாற்றி வருகிறார். ஒரு காலத்தில் சினிமாவின் நாயகியாக இருந்த மோகினி, இன்று தனது வாழ்க்கையை ஆன்மிகப் பாதைக்கு மாற்றி, ஆன்மிகச் சொற்பொழிவுகளை நிகழ்த்தி வருகிறார். மோகினியின் இந்த மாற்றம், அவரது ரசிகர்களுக்கு ஒரு புதிய ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது. அவரது வாழ்க்கை, ஒரு நடிகையின் பயணம் மட்டுமல்ல, ஒரு மனிதனின் தனிப்பட்ட வளர்ச்சியையும் காட்டுகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications