கோவிலை சுற்றி வந்த நளினி திடீர் அழுகை... கூடவே வந்த கன்னிகா- சினேகன் செய்த செயல்
சென்னை: நடிகை நளினி, கன்னிகா மற்றும் சிநேகனுடன் மதுரையில் உள்ள கோவில் ஒன்றுக்கு சென்று இருக்கிறார்.
கோவிலை சுற்றி வந்த நளினி திடீரென்று சாமி முன்பு கண் கலங்கி கதறி அழுத்திருக்கிறார்.
கண்கலங்கி அழுத நளினி நளினிக்கு நடிகை கன்னிகா ஆறுதல் கூறிய வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

80ஸ் ரசிகர்களின் மனதை கவர்ந்து இப்ப வரைக்கும் வெள்ளிதிரையிலும், சின்னத்திரையிலும் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை நளினி பலருக்கும் பரீட்சையமானவர்தான். ஆரம்பத்தில் கதாநாயகியாக நடித்து தற்போது சின்னத்திரையில் முக்கியமான கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.அது இல்லாமல் பல பட்டிமன்றங்களிலும் பேச்சாளராக கலந்து கொண்டு பலரை வாய் அடிக்க வைத்திருக்கிறார்
இந்த நிலையில் நடிகை நளினி மதுரையில் உள்ள பதினெட்டாம்படி கருப்பன் கோயிலுக்கு நடிகை கன்னிகா மற்றும் சினேகனுடன் வந்திருக்கிறார்.நடிகை நளினி சில வருடங்களுக்கு முன்புதான் அவருடைய கணவர் ராமராஜனை விவாகரத்து செய்துவிட்டு பிறகு தனியாக தன்னுடைய குழந்தைகளோடு வசித்து வருகிறார் இந்த நிலையில் கோவிலில் பயபக்தியோடு சுற்றி வந்த நளினி திடீரென்று சாமி சிலை முன்பு நின்று கண்கலங்கி அழுது இருக்கிறார்.

தற்போது அந்த வீடியோவை கன்னிகா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இனி மீண்டும் மதுரைக்கு வந்தால் நாம இந்த கோவிலுக்கு போகலாம் என்று சொல்லி உங்களை ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன் அம்மா என்று குறிப்பிட்டு இருக்கிறார்.இந்த நிலையில் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
ஏற்கனவே கன்னிகா நேற்று தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் தன்னுடைய கணவரிடம் சேட்டை செய்து அதை வீடியோவாக வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவிற்கு டார்ச்சர் பண்ணுகிறேன் மன்னிச்சுக்கோங்க என்று ரசிகர்களிடம் மன்னிப்பும் கேட்டு இருந்தார். ரசிகர்கள் பலர் வாழ்க்கை என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும் என்று கன்னிகா மற்றும் சினேகன் தம்பதிகளை வாழ்த்தி இருந்தனர்.












Click it and Unblock the Notifications