Nidhhi Agerwal: சிம்பு பட நடிகையிடம் அத்துமீறிய ரசிகர்கள்.. நிதி அகர்வாலுக்காக வழக்கு பதிவு செய்த போலீஸ்
சென்னை: ஹைதராபாத்தில் நடிகை நிதி அகர்வாலை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு அநாகரிகமாக நடந்து கொண்ட விவாகரம் சோசியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
நடிகர் பிரபாஸ் நடித்த தி ராஜா சாப் படத்தின் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி ஹைதராபாத்தில் உள்ள தனியார் மாலில் நடைபெற்றது. அதில் படத்தில் நடித்த பலரும் கலந்து கொண்டனர். அப்போது நடிகை நிதி அகர்வாலும் கலந்து கொண்டார். நிகழ்ச்சி தொடங்கியது முதலே பாதுகாப்பு தடுப்புகளை மீறி ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்தது.

அதிலும் ஒருவரை ஒருவர் முண்டி அடித்துக் கொண்டு நிகழ்ச்சி நடக்கும் இடத்தை சூழ்ந்து கொண்டு இருந்தனர். அந்த நேரத்தில் நிகழ்ச்சி முடிவடைந்ததும் நடிகை நிதி அகர்வால் தன்னுடைய காரை நோக்கி சென்று கொண்டிருக்கும்போது அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். அப்போது அவர் அங்கிருந்து வெளியே செல்லும்போது சிலர் அவருடைய உடைய பிடித்து இழுத்து அவரை அங்கே இங்கே நகர முடியாமல் தடுத்துக் கொண்டிருந்தனர்.
அந்த சூழ்நிலையில் நிதி அகர்வால் சிக்கி திணறிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த சில பாதுகாவலர்கள் வந்து அவரை ரசிகர்களிடமிருந்து மீட்டு காரில் ஏற்றி வைத்தனர். காருக்குள் வந்த பிறகும் தனக்கு நடந்த அதிர்ச்சி சூழலில் இருந்து நிதி அகர்வால் வெளியே வர முடியாத வகையில் இருந்தார்.
இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி ஒரு நடிகையிடம் ரசிகர்கள் என்கிற போர்வையில் சிலர் இப்படி அத்துமீறி நடந்து கொள்கிறார்கள் என்று கண்டனம் தெரிவித்து வந்தனர். தமிழ் நடிகைகள், பாடகிகள் கூட சிலர் கண்டனம் தெரிந்திருந்தனர். குறிப்பாக பாடகி சின்மயியும் இதுபோன்று அத்துமீறி நடந்து கொண்ட ரசிகர்களை கழுதைப்புலிகள் என்று திட்டி பதிவு வெளியிட்டிருந்தார்.
சோசியல் மீடியாவில் இந்த செய்தி பெறும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளோ, திட்டமிடுதலோ இல்லாததை இதற்கு காரணம் என்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் நிதி அகர்வால் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் ஹைதராபாத் கூட்ட நெரிசல் விவாகாரம் தொடர்பாக தனியார் மால் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது குக்கட்பல்வி ஹவுசிங் போர்டு காவல் நிலைய காவலர்கள் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications