இவர் மட்டும் இல்லாவிட்டால்.. பாரதிராஜா பற்றி நெகிழ்ந்த ராதிகா.. அடடே! கடைசியில் சொன்னது தான் ஹைலைட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை வரலட்சுமி சரத்குமாரின் திருமணம் விரைவில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த நிலையில் சரத்குமார் மற்றும் ராதிகா, வரலட்சுமி திருமணத்திற்காக பல பிரபலங்களுக்கு இன்விடேஷன் கொடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் இயக்குனர் பாரதிராஜாவிற்கு இன்விடேஷன் கொடுத்ததும் ராதிகா, பாரதிராஜாவின் தோளில் சாய்ந்து புகைப்படம் ஒன்றை எடுத்து தன்னுடைய instagram பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அது பல்வேறு கருத்துக்களை பெற்று வருகிறது.

நடிகை வரலட்சுமி சரத்குமாரின் திருமணம் அடுத்த மாதத்தில் நடைபெற இருக்கும் நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், முதலமைச்சர் மு க ஸ்டாலின், கனிமொழி, பிரபு உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு ராதிகா சரத்குமார் மற்றும் வரலட்சுமி சரத்குமார், வரலட்சுமியின் அம்மா சாயா என எல்லோரும் சென்று திருமண பத்திரிகைகளை வணங்கி வருகிறார்கள்.

வரலட்சுமி சரத்குமாருக்கு சமீபத்தில் தான் நிக்கோலாய் சச்தேவ் என்பவரோடு என்கேஜ்மென்ட் நடைபெற்றது. அதற்கு பிறகு இவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வரலட்சுமி அடிக்கடி வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். அதிலும் வெளிநாட்டு சுற்றுலா போகும் இடங்கள் எல்லாம் புகைப்படங்களை எடுத்து குவித்துக் கொண்டிருக்கும் வரலட்சுமியின் திருமணம் அடுத்த மாதத்தில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில் ராதிகா சரத்குமார் தன்னை சினிமா உலகில் அறிமுகப்படுத்திய பாரதிராஜாவை நேரில் சந்தித்து அவருக்கு இன்விடேஷன் கொடுத்து இருக்கிறார் அப்போது. ராதிகா பாரதிராஜாவின் தோளில் சாய்ந்து புகைப்படம் ஒன்றை எடுத்து இருக்கிறார். அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ராதிகா, "இயக்குனர் இமயம் பாரதிராஜா இல்லாவிட்டால் என் வாழ்க்கையில் இந்த பயணம் இருந்திருக்காது. எப்போதுமே அவரை என் இதயத்தில் மிகுந்த மரியாதையுடன், அன்புடனும் இருப்பார். என் இனிய தமிழ் இயக்குனர் பாரதிராஜா.. என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

பாரதிராஜா இயக்கிய கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் நடிகை ராதிகா தமிழில் அறிமுகமாகியிருந்த நிலையில் இன்று வரையிலும் அதே சிரிப்புடன் தமிழ் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தில் அமர்ந்திருக்கிறார். பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் ராதிகாவிற்காக போடப்பட்ட "கோவில் மணி ஓசை தன்னை" என்ற பாடலை ராதிகா தன்னுடைய புகைப்படத்திற்கு பயன்படுத்தி இருக்கும் நிலையில் ரசிகர்கள் கமெண்ட்களை குவித்து வருகிறார்கள்.

வெள்ளித்திரை, சின்னத்திரை என்று கலக்கிக் கொண்டிருக்கும் ராதிகா அரசியலையும் விட்டு வைக்காமல் அதிலும் காலடி எடுத்து வைத்திருந்தார். ஆனாலும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட ராதிகா மூன்றாவது இடத்தை பிடித்திருந்த நிலையில் தான் தோற்றுப் போய் விட்டோம் என்று உடைந்து போய் இருக்காமல் அடுத்தடுத்து தன்னுடைய வேலைகளில் கவனம் செலுத்தி வருவதை குறித்தும் பலர் பாராட்டி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+