இதற்கெல்லாம் தனி தில்லு வேணும்.. நடித்த சீரியலை போஸ்ட் போட்டு வெளிப்படையாக கலாய்த்த ரேஷ்மா
சென்னை: நடிகை ரேஷ்மா பசிபுலேட்டி ஜீ தமிழில் சீதாராமன் மற்றும் விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் நடிக்கும் சீரியல் முடிவடைய இருக்கும் நிலையில் அந்த சீரியலை குறித்து வெளிப்படையாக போஸ்ட் போட்டு கலாய்த்து இருக்கிறார்.
ஆரம்பத்தில் ஒரு சில சேனல்களில் மட்டும் சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்த நிலையில் சின்னத்திரையில் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பை பார்த்து புதியது புதியதாக சேனல்கள் தொடங்கப்பட்டு அதில் பல சீரியல்களும் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழ் சீரியல்கள் மட்டுமல்லாமல் பிற மொழி சீரியல்களையும் மொழிபெயர்ப்பு செய்து தமிழ் சேனல்களில் ஒளிபரப்ப அதுவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

ஆனாலும் சமீபத்தில் சின்ன திரையில் எல்லா சீரியல்களிலும் ஒரே கதை தான் பட்டி டிங்கரிங் செய்து ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். கதாநாயகி ஏழ்மையான குடும்பத்தில் இருப்பார். கதாநாயகன் பணக்காரராக இருப்பார். ஆனால் கதாநாயகன் வீட்டில் அவரை கல்யாணம் செய்வேன் என்று ஒரு அத்தை மகளோ மாமன் மகளோ அல்லது தோழியோ கூட இருப்பார். ஆனால் எதிர்பார்க்காதபடி கதாநாயகிக்கும் கதாநாயகனுக்கும் திருமணம் நடக்கும்.
அதுவும் இவர்கள் இருவரும் விருப்பப்பட்டு திருமணம் செய்ய மாட்டார்கள். கட்டாயத்தின் பேரில் தான் திருமணம் நடக்கும். ஆனால் திருமணத்திற்கு பிறகு கதாநாயகி கதாநாயகனை புரிந்து கொண்டு அவரோடு வாழ்க்கையை தொடங்க நினைப்பார். ஆனால் அங்கிருக்கும் வில்லி இவர்கள் இருவரையும் சேர விட மாட்டார். இதுதான் பல சீரியல்களின் கதையாக இருக்கிறது.

இதற்கு கொஞ்சம் மாற்றாக யோசித்தால் கதாநாயகனின் அம்மா தான் கதாநாயகிக்கு எதிரியாகவும் சில சீரியல்களில் இருக்கிறார்கள். இப்படித்தான் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் சீரியலும் இருக்கிறது. இந்த சீரியலில் ஹீரோவுக்கும் ஹீரோயினிக்கும் யாரும் எதிர்பார்க்காத வகையில் திருமணம் நடைபெறுகிறது. ஆனால் திருமணத்திற்கு பிறகு கதாநாயகி அவருடைய கணவரோடு சேர்ந்து வாழ வேண்டும் என்று நினைக்கிறார்.
ஆனால் ஹீரோவின் சித்தி இவர்கள் இருவரும் சேரக்கூடாது என்று பிளான் போட்டு அவர்களை பிரித்துக் கொண்டிருக்கிறார். இந்த கதையை பாராட்டி ரசிக்கும் ரசிகர்களும் இருக்கிறார்கள், கழுவி ஊத்தும் ரசிகர்களும் இருக்கிறார்கள். எது எப்படியோ இந்த சீரியல் ஒரு வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால் இப்போது இந்த சீரியல் முடிவுக்கு வந்திருக்கிறது.
இது குறித்து இந்த சீரியலில் வில்லியாக நடிக்கும் நடிகை ரேஷ்மா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கலாய்த்து போஸ்ட் போட்டு இருக்கிறார். அதில், "கடைசி வரைக்கும் சீரியலின் கதையை சொல்லாமலேயே சீரியலை முடித்து விட்டார்கள். எது எப்படியோ நீங்க இந்த சீரியலை பார்த்ததற்கு நன்றி மக்களே" என்று குறிப்பிட்டு இருக்கிறார். இது இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
-
சின்னத்திரை பிரபலம் வீட்டு பங்க்ஷனில் நடிகர் ராமராஜன்.. நெகிழ வைத்த காட்சி! வியந்து போன மதுரை -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி












Click it and Unblock the Notifications