மாத்திரை போட்டு..ஆபாச வீடியோவை காட்டி அந்த மாதிரி..! சம்யுக்தா உடைத்த ரகசியங்கள்
சென்னை: நடிகை சம்யுக்தா தன்னுடைய கணவர் விஷ்ணுகாந்த் தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக குற்றச்சாட்டு வைத்திருக்கிறார்.
தினமும் ஆபாச வீடியோவை காட்டி அந்த மாதிரி பண்ணனும் என்று சொல்லி தன்னை அடித்ததாக சம்யுக்தா கூறி இருக்கிறார்.
என்னுடைய வலிகளை புரிந்து கொள்ளாமல் முரட்டுத்தனமாக விஷ்ணுகாந்த் நடந்து கொள்வார் என்றும் கூறியிருக்கிறார்.

சின்னத்திரை நடிகர்களான விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா குடும்ப பிரச்சனை சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை வைத்துக் கொண்டிருக்கும் இந்த நிலையில் இன்று சம்யுக்தா தன்னுடைய கணவர் மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார்.
சம்யுக்தா திருமணத்திற்கு பிறகு தினமும் விஷ்ணுகாந்த் தன்னைச் செக்ஸ் டார்ச்சர் செய்து துன்புறுத்தி இருக்கிறார் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். மேலும் அதில் பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் தான் காதலிக்கும் போது விஷ்ணுகாந்த் சிப்பிக்குள் முத்து சீரியலில் நடித்தது போன்று தான் இருந்தார். நானும் அதே போல தானே இருக்கிறார் என்று ஏற்றுக் கொண்டேன்.
ஆனால் அவரைப் பற்றி போகப் போக புரிந்து கொண்டேன் ஆனாலும் அவர் என்னை காதலிக்கிறார். அதனால் என்னை இப்படி நடந்து கொள்கிறார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவர் என்னை ரொம்ப மோசமாகத்தான் நடத்திக் கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளும் செக்ஸ் விஷயத்தில் என்னை உடலளவிலும் மனதளவிலும் பாடாய்படுத்தி எடுத்து இருந்தார்.
ஆபாச வீடியோக்களை பார்த்து அந்த மாதிரி பண்ண வேண்டும் என்று சொல்வார். எனக்கு அது பிடிக்கவில்லை என்று சொன்னால் அப்போ நாம பண்ணுறதை வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு அதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கூறுவார். நான் அதற்கும் சம்மதிக்கவில்லை.

செக்ஸ் நேரத்தில் என்னை அடித்து இருக்கிறார். அது கோபமான அடியாக இல்லாவிட்டாலும் அது எனக்கு ரொம்பவே வலிக்கும். எனக்கு வலிக்கிற மாதிரி தான் அடிப்பாரு. நான் வலியில் கத்தினால் கூட என்னுடைய வாயை பொத்திக்கொண்டு என்னுடைய கஷ்டத்தை புரிந்து கொள்ளாமல் அவருடைய சந்தோஷத்தை மட்டும் தான் அனுபவித்துக் கொண்டிருப்பார்.
என்னால் 15 நாட்கள் கூட அந்த வீட்டில் அவரோடு எனக்கு பிடிக்க முடியவில்லை .அந்த அளவிற்கு எனக்கு கஷ்டம் கொடுத்திருக்கிறார். எனக்கு பிறப்புறுப்பில் அலர்ஜி ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்று வந்திருந்தோம். ஆனாலும் அன்னைக்கு கூட என்னை விடாமல் வேற மாதிரி ட்ரை பண்ணுவோம் என்று தொந்தரவு செய்தார்.
எங்களுக்கு ஃபர்ஸ்ட் நைட் முடிந்து அடுத்த நாளில் இரண்டு நாட்களுக்கு எனக்கு காய்ச்சல் வந்துவிட்டது. அந்த அளவிற்கு கடுமையாக தான் நடந்து கொண்டார். காய்ச்சல் நேரத்திலும் என்னுடைய வலியை அவர் புரிந்து கொள்ளவில்லை. இந்த உண்மையை நான் சொல்லி விடுவேன் என்று தான் என் பாஸ்ட் லைப் எல்லாம் இப்போ அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்று சம்யுக்தா கண்கலங்கியபடி கூறியிருக்கிறார்.
-
சிறகடிக்க ஆசை: விஜயாவுக்கு கிடைத்த அதிர்ச்சி.. மீனாவுக்கு தெரிய வந்த பெரிய உண்மை.. கோபத்தில் ஸ்ருதி, ரவி -
விஜய்க்கு புது நெருக்கடி.. கமிஷனர் ஆஃபீஸில் பிக் பாஸ் ஜூலி கொடுத்த புகார்.. தவெக நிர்வாகிகளுக்கு சிக்கல் -
என் வாழ்க்கையில் இப்படி எல்லாம் நடக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை.. விஜய் சேதுபதி உருக்கம் -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்?












Click it and Unblock the Notifications