திருமணத்திற்கு பிறகு கண்ணீரோடு தீபிகா வெளியிட்ட பதிவு.. ரசிகர்களுக்கு வைத்த வேண்டுகோள்
சென்னை: கனா காணும் காலங்கள் சீரியல் நடிகை தீபிகாவிற்கு சமீபத்தில் தான் திருமணம் முடித்தது.
அந்த சீரியலில் அவரோடு நடித்த நடிகர் ராஜா வெற்றி பிரபுவை தான் தீபிகா திருமணம் செய்து இருக்கிறார்.
இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு இவர் வெளியிட்ட வீடியோ ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து இருப்பது குறித்து கண்ணீரோடு பதிவு வெளியிட்டிருக்கிறார்.

டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் கனா காணும் காலங்கள் சீரியல் ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடைந்து கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் அதன் கேரக்டர்களின் படியே ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடைந்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்த சீரியலில் அபி கேரக்டரில் நடிகை தீபிகா நடித்து வருகிறார். இவர் சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி போட்டோ ஷூட் ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து வரும் தீபிகாவிற்கு அதிகமான ரசிகர்கள் பாலோவர்ஸ்களாக இருக்கின்றனர். இந்த நிலையில் அவரோடு கௌதம் கேரக்டரில் நடிக்கும் ராஜா வெற்றி பிரபுவை சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து இருந்தார்.

அடிக்கடி லைவில் வந்து பேசும் தீபிகா தன்னுடைய காதல் விஷயங்களை கூறி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார். தான் ஆறு வருடங்களாக நண்பராக பழகி வந்த தன்னுடைய நண்பரை தன்னுடைய வீட்டில் உள்ளவர்களின் சம்மதத்தோடு விரைவில் திருமணம் செய்யப் போகிறேன் என்று இவர் கூறியிருந்தார். ஆனால் யார் அந்த நண்பர் என்பதை கூறாமல் இருந்த நிலையில் தன்னுடைய நிச்சயதார்த்த நாள் அன்று, அது ராஜா வெற்றி பிரபு தான் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் இவர்களுடைய திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதற்கு பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். ரசிகர்கள் வாழ்த்து கூறி வந்தனர். இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு ஹனிமூன் சென்றிருந்த தீபிகா மற்றும் ராஜ வெற்றி பிரபு அங்கிருந்தும் லைவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தனர்.

வாழ்வில் வரும் சோகம், சந்தோசங்களை instagram-யில் பகிர்ந்து கொள்ளும் பிரபலங்களில் தீபிகாவும் ஒருவர். தன்னுடைய ரீல்ஸ் வீடியோ ட்ரெண்டிங்கில் இடம் பிடித்திருப்பதை குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பதிவு வெளியிட்ட தீபிகா கண் கலங்கி படி ஆனந்த கண்ணீர் விட்டிருக்கும் இமேஜ்களை அதில் பகிர்ந்து இருக்கிறார்.
அதோடு தான் இந்த பதிவு வெளியிட்டது விளம்பரத்திற்காக அல்ல. என்னுடைய அன்பை வெளிக்காட்டுவதற்காக, என்னுடைய பதிவை படித்த ரசிகர்களுக்கும் நன்றி என்று கூறியிருக்கிறார்.அது மட்டும் அல்லாமல் தன்னுடைய திருமண புகைப்படம் ஒன்றை இன்னொரு பதிவாகவும் பதிவிட்டு இருக்கிறார். அதில் தனக்கு ஒரே பெண்மை பீலிங்காக இருக்கிறது என்று உருக்கமாக அவர் தன்னுடைய பீலிங்கை பகிர்ந்து இருக்கிறார்.
-
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்!












Click it and Unblock the Notifications