Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விவாகரத்து வதந்திக்கு மத்தியில் துபாயில் நடந்த சம்பவம்.. ஐஸ்வர்யா ராய் பெயர் மாறி இருக்கு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை ஐஸ்வர்யா ராய் அவருடைய கணவர் அபிஷேக் பச்சனை விவாகரத்து செய்யப் போகிறார் என்ற வதந்திகள் பரவி வரும் நிலையில், துபாய் நிகழ்ச்சி ஒன்றில் ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்ட போது அவருடைய பெயரில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் இணையத்தில் அதிகமாக பேசப்படுகிறது.

சமீபத்தில் பல பிரபலங்கள் அடுத்தடுத்து விவாகரத்து செய்தியை அறிவித்து வருகிறார்கள். அதிலும் இந்த ஜோடி எல்லாம் பிரியவே மாட்டார்கள் என்று நினைத்தவர்கள் எல்லாம் தாங்கள் பிரிய போகிறோம் என்று அதிரடியாக அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைக்கிறார்கள். அதிலும் ஒரு சிலர் மனம் ஒத்து பிரிய போகிறோம் என்று ஜோடியாகவே சோசியல் மீடியாவில் போஸ்ட் போட்டு விடுகிறார்கள்.

aishwarya rai

ஏற்கனவே தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா சில வருடங்களுக்கு முன்பு நாங்கள் இருவரும் பிரிய போகிறோம் என்று ஒரு போஸ்ட் போட்டிருந்தனர். அதற்குப் பிறகு இருவரும் நீதிமன்றத்தில் விவாகரத்துக்கு அப்ளை செய்திருந்தனர். இவர்களுடைய வழக்கு இரண்டு வருடங்களாக நடைபெற்று இருந்த நிலையில் தற்போது இருவரும் பரஸ்பரமாக பிரிவதற்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்திருக்கிறது. இவர்களுடைய திருமணமும் செல்லாது என்று அறிவித்திருக்கிறார்கள்.

தனுஷ் போலவே ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி தம்பதியினரும் பிரிவதை அறிவித்திருந்தனர். அவர்களைத் தொடர்ந்து ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தியும் பிரிவதை அறிவித்திருந்தார்கள். இதில் ஜெயம் ரவி தான் ஆர்த்தி இடம் இருந்து விலகுகிறேன் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் அவருடைய மனைவி ஆர்த்தி விவாகரத்து தனக்கு விருப்பமில்லாமல் ஜெயம் ரவியாக எடுத்த முடிவு என்று கூறியிருக்கிறார்.

aishwarya rai

இந்த பஞ்சாயத்துக்கு மத்தியில் சில வருடங்களாகவே அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் தம்பதி பிரிந்து விட்டதாக செய்திகள் வலம் வருகிறது. 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் கதாநாயகியில் ஒருவரான ஐஸ்வர்யா ராய் காதலித்து அபிஷேக் பச்சனை திருமணம் செய்திருந்த நிலையில் இவர்கள் இருவரும் எதற்காக பிரிய போகிறார்கள் என்பது பலருடைய கேள்வியாக இருந்தது.

ஆனால் சில இடங்களில் இதை மறுப்பு தெரிவித்து ஐஸ்வர்யா மற்றும் அபிஷேக் பச்சன் தனித்தனியாக கருத்து தெரிவித்திருந்தார்கள். ஆனால் இவர்கள் இருவரும் நடந்து கொள்ளும் விதத்தை வைத்து இவர்கள் பிரிந்து இருப்பதாகவே பல செய்திகள் வலம் வருகிறது. இந்த நிலையில் இந்த வதந்திகளுக்கு மேலும் வலு கொடுக்கும் வகையில் சமீபத்தில் துபாயில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராய் பெயருக்கு பின்னால் இருக்கும் பச்சன் பெயர் இல்லாமல் ஐஸ்வர்யா ராய் என்ற பெயர் மட்டும் இடம் பெற்று இருக்கிறது.

aishwarya rai

இதனால் பரவி வரும் வதந்திகள் எல்லாம் உண்மைதானா? அதனால் தான் ஐஸ்வர்யா ராய் "பச்சன்" என்ற குடும்ப பெயர் இல்லாமல் வெறும் ஐஸ்வர்யா ராய் மட்டும் இருக்கிறதா? என்று பல கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதுபோல அந்த நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராய் தன்னுடைய மகளோடு கலந்து கொண்டு இருக்கிறார். அதற்கு பிறகு அபிஷேக் பச்சன் தன்னுடைய அம்மா மற்றும் அப்பாவோடு அந்த நிகழ்ச்சியில் தனியாக கலந்து கொண்டிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+