Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ajith: "என்னை போன்றவனுடன் வாழ்வது எளிதல்ல!" ஷாலினியின் தியாகம் குறித்து நெகிழ்ந்த அஜித்! ரகசியம் உடைந்தது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் திரையுலகில் தனதுத் தனித்துவமான ஆளுமை, எளிமை, மற்றும் வெளிப்படையாக பேசுவதால் ரசிகர்களின் இதயத்தில் ஒரு தனி இடத்தை பிடித்திருக்கும் நடிகர் அஜித் குமார், சமீபத்தில் அளித்தப் பேட்டியில், தனது வெற்றிக்குப் பின்னால் இருக்கும் ஒரே சக்தி -- தனது மனைவி ஷாலினிதான் என்றுப் பெருமையுடனும், நெகிழ்ச்சியுடனும் பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Ajith Kumar Ajith Shalini

அஜித்தின் ஆழமான வார்த்தைகள்

சினிமா உலகில் 'தல' என அழைக்கப்படும் அஜித், தற்போது தனதுத் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சில விஷயங்களைப் பகிர்ந்து அனைவரையும் கவர்ந்துள்ளார். குறிப்பாக, தனதுக் கடினமானப் பயணத்தில் மனைவி ஷாலினியின் பங்களிப்பை பற்றி அவர் பேசிய வார்த்தைகள், அவரதுப் பந்தத்தின் ஆழத்தை வெளிப்படுத்துகிறது:

"நான் ஷாலினிக்குக் கடமைப்பட்டுள்ளேன். ரேஸிங்கில் பங்கேற்கிறேன்... சண்டை காட்சிகளில் நானே நடிக்கிறேன்... என்னைப் போன்றவனுடன் வாழ்வது எளிதான விஷயமல்ல. ஆனால் ஷாலினி எனக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறார். இவையெல்லாம் அவரின் துணை இன்றி சாத்தியமாகி இருக்காது."

நடிகர் அஜித், சாகசங்களில் ஆர்வம் கொண்டவர். கார் மற்றும் பைக் ரேஸிங், சண்டை காட்சிகளில் துணிச்சலாக டூப் இல்லாமல் நடிப்பது போன்ற விஷயங்களால் அவர் பலமுறை விபத்துக்களைச் சந்தித்துள்ளார். அவருக்கு 129க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் நடந்திருப்பதாகக் கூட சமீபத்தியப் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இவ்வளவுச் சவால்களுக்கு மத்தியில், மன உறுதியோடு அவருக்குத் துணையாக இருக்கும் ஷாலினியின் தியாகத்தை அஜித் ஒருபோதும் மறப்பதில்லை.

அமர்க்களம் காதல்

அஜித் குமார் மற்றும் ஷாலினியின் காதல், 1999ஆம் ஆண்டு வெளியான 'அமர்க்களம்' திரைப்படத்தில் இணைந்து நடித்தபோது மலர்ந்தது. அந்தக் காலத்திலேயே இவர்களின் காதல் வாழ்க்கை ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, 2000ஆம் ஆண்டு, இருவரும் திருமணம் செய்து கொண்டு தங்கள் குடும்ப வாழ்க்கையைத் தொடங்கினர். அஜித்தின் வாழ்க்கையில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்களில், ஷாலினியின் நிதானமான ஆதரவு அவருக்குப் பெரிய பலமாக இருந்தது.

தியாகம்

திருமணத்திற்குப் பிறகு, ஷாலினி தனது வெற்றிகரமான சினிமா வாழ்க்கையிலிருந்து விலகி, முழுமையாகக் குடும்பத்தைப் பராமரிக்க முடிவு செய்தார். ஷாலினியின் இந்தத் தியாகத்தை அஜித் பலமுறைப் பொது மேடைகளில் பெருமையாகக் குறிப்பிட்டு, தனது நன்றி உணர்வை வெளிப்படுத்தி வருகிறார்.

Ajith Kumar Ajith Shalini

அஜித்தின் வேறுபட்ட பார்வைகள்

அஜித், ஷாலினி குறித்து பேசியது மட்டுமின்றி, பொதுவெளியில் தான் வெளிப்படுத்தும் சில விஷயங்களுக்காகவும் சமீபத்தில் பாராட்டுகளைப் பெற்றார். சமீபத்தில் நடந்த கரூர் துயர சம்பவம் மற்றும் திரையரங்கில் முதல் நாள் முதல் காட்சிக் கொண்டாட்டம் குறித்துப் பேசிய அஜித், ரசிகர்கள் மோதிக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், தனது ரசிகர்கள் எப்போதும் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்றும் அறிவுரைகளை வழங்கியிருந்தார். ரசிகர்களை ஒரு நேர்மறையானப் பாதைக்கு வழிநடத்த அவர் எடுக்கும் முயற்சி மிகுந்தப் பாராட்டுகளைப் பெற்றது.

Ajith Kumar Ajith Shalini

மகனின் ஏக்கம்

தனது மகன் ஆத்விக் தன்னை ஏன் பள்ளிக்கு அழைத்துச் செல்ல மறுக்கிறார் என்று அழுது கேட்டதாகவும், ஆனால் ஒரு நடிகர் என்பதால், அவர் காரில் சென்றால் பலர் பைக்கில் போட்டோ எடுப்பதற்காக பாலோ பண்ணுவாங்க என்பதால், பாதுகாப்பு காரணங்களுக்காகவே தவிர்ப்பதாகவும் அவர் உருக்கமாக பேசியது, அஜித்தின் தனிப்பட்ட வாழ்க்கையில் இருக்கும் சவால்களை வெளிப்படுத்தியது.

தன் மனைவியின் உறுதுணையையும், தன்னுடைய ரசிகர்களின் பாதுகாப்பையும் மதித்து வாழும் அஜித்தின் இந்த வெளிப்படையான பேச்சு, சினிமா நட்சத்திரங்களை பற்றிய ரசிகர்களின் பார்வையை மேலும் ஆழப்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+