பாக்கியாவை வீட்டை விட்டு விரட்ட சவால் விடும் ராதிகா.. ஈஸ்வரி கொடுத்த பதிலடி.. பரபரப்பான தருணம்
சென்னை: கோபி ராதிகா செய்தது தவறு என்று எவ்வளவு புரிய வைக்க முயற்சி செய்தாலும் ராதிகா பிடிவாதமாக இருக்கிறார்.
ராதிகாவை செல்வி அவமானப்படுத்த கடைசியில் பாக்கியா பதிலடி கொடுக்கிறார்.
ஈஸ்வரி ராதிகாவை வீட்டை விட்டு வெளியேறுவேன் என்று சபதம் போடுகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஏப்ரல் 24ஆம் தேதிக்கான எபிசோட்டின் ஆரம்பத்தில் கோபி சோகமாக உட்கார்ந்து இருக்க, நான் இது எல்லாம் வேணும்னு பண்ணல. நான் உங்களுக்காகத்தான் எல்லாமே பண்ணுரேன். உங்களை என்ன விட்டு பிரிச்சு கூட்டிட்டு போயிருவாங்களான்னு பயமாக இருக்கு. அதனால்தான் இப்படி இருக்கேன் என்று ராதிகா கூறுகிறார்.

நான் ராஜேஷை எதற்காக டைவர்ஸ் பன்னுனேன்னு உங்களுக்கு தெரியும்.. நீங்க இப்படி எல்லாம் இனி பண்ணாதீங்க கோபி என்று கோபியிடம் கெஞ்சி கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் அமிர்தா, பாக்யாவிடம் நீங்க இந்த வீட்டை விட்டு போய்விடனு மட்டும் நினைச்சுடாதீங்க. உடைஞ்சு போயிருங்க என்று ஆறுதல் கூறிக் கொண்டிருக்கிறார். பிறகு ஜெனி, செல்வி என எல்லோரும் பாக்கியாவிற்கு ஆறுதல் கூறிக் கொண்டிருக்கின்றனர்.
பிறகு செல்வி கோபி மற்றும் ராதிகா மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்க சொல்லி கூறிக் கொண்டிருக்கிறார். அதற்கு ஜெனி அது எப்படி கொடுக்க முடியும் என்று கேட்டு நாம எப்படியாவது பணத்தை அரேஞ்ச் பண்ணி கொடுத்துவிடலாம் என்றாலும் இந்த ராதிகா வீட்டை விட்டு போற மாதிரி தெரியலையே என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். பாக்யா எதுவுமே பேசாமல் அமைதியாக யோசிக்கப்படியே இருக்கிறார்.

அப்போ இந்த பேச்சை இனி விட்டுருவோம் அம்மாவே ரொம்ப வெறுப்புல இருக்காங்க என்று அமிர்தா கூறிக் கொண்டிருக்க, அதே நேரத்தில் கோபி தண்ணி தாகமா இருக்கு என்று சொல்ல, ராதிகா நீங்க பாட்டிலில் எடுத்து குடிக்கலாமே என்று சொல்ல கீழே போகிறதுக்கே ஒரு மாதிரி இருக்கு என்று சொல்ல, நான் போய் தண்ணி எடுத்துட்டு வருகிறேன் என்று ராதிகா கிளம்ப, கோபி வேண்டாம் ஆர்டர் போடலாம் என்று கூறுகிறார். பிறகு ராதிகா கீழே தண்ணி எடுக்க போக, சொல் பேச்சை கேட்காமல் ராதிகா போறா என்ன பஞ்சாயத்து இழுத்துட்டு வரப்போறாளோ என்று கோபி புலம்பிக் கொண்டிருக்கிறார்.
கீழே கிச்சனுக்கு வந்த ராதிகாவை பார்த்து செல்வி, அக்கா உன்னோட கிச்சனுக்கு கண்டவர்கள் எல்லாம் வந்துட்டு இருக்காங்க. நீ ஏதும் பேசாம இருக்க, எங்க வீட்டில் எல்லாம் இப்படி எல்லாம் நடந்துச்சுனா நடக்கிறதே வேற என்று பேச, அதற்கு ராதிகா நீ இங்க வேலைக்காரி தானே, வேலைக்காரங்க வேலை மட்டும் பாக்கணும் குடும்ப பிரச்சனைகளை எல்லாம் தலையிடக்கூடாது. இந்த வீட்டுல தான் வேலைகாரங்களை தலையில் தூக்கி வைத்து ஆடுறாங்க என்று திட்டுகிறார்.
அதற்கு பாக்கியா செல்வி நீ கண்டவங்க கிட்ட எல்லாம் பேசிகிட்டு இருக்காத, ஃப்ரெண்ட், ஃப்ரெண்ட்னு என் கூடயே இருந்தவங்க எல்லாம் எனக்கு துரோகம் தான் பண்ணிகிட்டு இருக்காங்க, நீ நல்ல பிரண்டா தான் இப்ப வரைக்கும் இருந்துகிட்டு இருக்க என்று பேச, பாக்கியா என்னை எப்பவும் விட்டுக் கொடுக்காது என்று செல்வி சொல்ல, ஜெனி சிலர் சண்டை போடுவதற்கு என்று வந்து நிற்கிறார்கள். அவங்க கிட்ட பேச்சு கொடுக்காதிங்க என்று திட்டுகிறார்.
பிறகு தண்ணீர் எடுத்துக் கொண்டு ராதிகா மாடிக்கு மேலே செல்ல அங்கே மாடியில் இருந்து இனியா கீழே இறங்கி வர இருவரும் முறைத்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு வரும் ஈஸ்வரி ராதிகாவை திட்டுகிறார். அதற்கு இப்ப கூட உங்களுக்கு உங்க பையன கேட்க முடியல, இல்லை என்று கேட்க, உன்னை இந்த வீட்டில் இருந்து அனுப்பிட்டு என்னுடைய மகனை இந்த வீட்டில் தங்க வைக்கிறேன் பாரு என்று ஈஸ்வரி சொல்ல, நான் இந்த வீட்டில் இருந்து பாக்கியாவை விரட்டிவிட்டு நான் இங்கேயே இருப்பேன் என்று ராதிகா சொல்கிறார்.
பிறகு எல்லோரும் பாக்கியாவிடம், ஒண்ணுமே பண்ணாதவங்க கூட இப்படி எல்லாம் பேச மாட்டாங்க, இவங்க இப்படி பேசுறாங்கன்னா, நம்ம எந்த அளவுக்கு பேசணும் என்று பேசி கொண்டிருக்கின்றனர். அதற்கு பாக்கியா நான் எதற்கு சொல்லணும். எனக்கு செய்யதுக்கு ஆயிரம் வேலை இருக்கு நான் கண்டவங்களுக்கு பதில் சொல்லிக்கிட்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறுகிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.
-
இதுவும் கடந்து போகும்.. பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவின் மறுபக்கம்.. நீயா நானாவில் கண் கலங்கிய அம்மா -
நீயா நானாவில் யாமினி சொன்ன காதல் கதை.. கண்கலங்கி நின்ற கோபி நாத்.. கடைசியில் சொன்ன ‘நச்’ அட்வைஸ் -
சித்திரை திருநாளில் கிடைத்த பரிசு.. இரண்டு வருடம் கழித்து பிறந்த குழந்தை.. பிரதீப் ஆண்டனி நெகிழ்ச்சி பதிவு -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications