பாக்கியலட்சுமி: குடித்துவிட்டு பிரச்சனை செய்த கோபி.. வீட்டை விட்டு கிளம்பிய ஈஸ்வரி.. இனி நடப்பது?
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் கோபி குடித்துவிட்டு பாக்கியாவிடமிருந்து தன்னுடைய குடும்பத்தை பிரித்துக் காட்டுவேன் என்று நண்பரிடம் சபதம் போடுகிறார்.
அதே நேரத்தில் வீட்டிற்கு வந்த கோபி ராதிகாவின் அம்மாவை பார்த்து பயந்து போய் கத்தி பிரச்சனை செய்கிறார்.

இந்த நிலையில் திடீரென்று பாக்கியலட்சுமி வீட்டில் இருந்து ஈஸ்வரி பெட்டி படுக்கையோடு கிளம்பி போகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் ஜூலை 14ஆம் தேதிக்கான எபிசோட்டின் ஆரம்பத்தில் பாக்யா வீட்டை விட்டு துரத்தியதால் கோபி பாரிலிருந்து குடித்துக் கொண்டு தன்னுடைய நண்பரிடம் பாக்யாவை தன்னுடைய குடும்பத்தில் இருந்து பிரிக்காமல் விடமாட்டேன் என்று சவால் விடுகிறார்.

பிறகு தன்னுடைய காரை எடுத்து வீட்டிற்கு வரும் போது பழக்க தோஷத்தில் பாக்யாவின் வீட்டு முன்பு காரை நிறுத்திவிட்டு நான் வரதுக்கு முன்னாடி கதவை பூட்டிட்டாங்க என்று வாசலில் நின்று புலம்பியபடி இருக்கிறார். பிறகு சுவற்றில் மாட்டப்பட்டிருந்த பாக்கியலட்சுமி என்ற போரை பார்த்ததும் கோபமாகி திட்டுகிறார். பிறகு கழட்டி வீச பார்க்கும்போது வேணாம் இதை பாத்தா கூட்டமா எல்லாரும் சேர்ந்து அடிப்பாங்க என்று அங்கிருந்து கிளம்புகிறார்.

அப்படியே நல்லவேளை நாம இங்கே நிக்கிறதை ராதிகா பாக்கல என்று உளறியப்படியே ராதிகா வீட்டு கதவை தட்ட, கோபியின் மாமியார் மாமியார் வீட்டு கதவை திறக்க கோபிக்கு போதையில் அடையாளம் தெரியாமல் மேடம் நான் தெரியாம இங்க வந்துட்டேன். நான் எங்க வீட்டுக்கு போயிடுதேன் என்று வீட்டை விட்டு வெளியே கிளம்ப, அப்போது ராதிகா வர ராதிகா எதுக்கு இங்க வந்தா என்று யோசிக்கிறார்.

பிறகு ராதிகாவை பார்த்து பயந்த கோபியை ராதிகா திட்டுகிறார். எதற்காக குடிச்சிட்டு வந்தீங்க என்று கேட்க, பாக்கியா என்னுடைய வீட்டில் இருந்து என்னை துரத்திட்டா அதனாலதான் குடிச்சேன் என்று சமாளிக்கிறார். பிறகு விடிந்ததும் ஈஸ்வரி நான் காசிக்கு கிளம்ப போகிறேன் என்று அனைவரையும் கவனமாக இருக்கும்படி சொல்லி பீல் பண்ணி பேசிக் கொண்டிருக்கிறார்.

அப்போது தன்னுடைய கணவரை விட்டுட்டு போகிறது தான் எனக்கு ரொம்பவே கஷ்டமா இருக்கு என்று ஈஸ்வரி சொல்ல, இவர்களின் பாசத்தை பார்த்து எல்லோரும் ஆச்சரியப்படுவதோடு ஈஸ்வரியை கிண்டல் செய்து கொண்டிருக்கின்றனர். பிறகு வாசலுக்கு சென்று அனுப்பி வைக்கின்றனர். அதைத்தொடர்ந்து விடிந்ததும் கோபி எழுந்திருக்க ராதிகா வந்து காபி தரவா என்று நக்கலாக கேட்க கோபியும் காபி கேட்டு அவமானப்படுகிறார்.
பிறகு ராதிகா கண்டபடி கோபியை திட்டி கொண்டு இருக்க, ராதிகாவின் அம்மா ராதிகா வெளியே கூப்பிட்டு சமாதானப்படுத்துகிறார். குடிக்கிறது தப்புதான் ஆனால் அதை பொறுமையா சொல்லலாம் தானே என்று சொல்லிக் கொண்டிருக்க, ராதிகா கோபத்தோடு அங்கிருந்து கிளம்புகிறார். அந்த இடத்தில் ராதிகாவின் அம்மா யோசித்தப்படியே நிற்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications