பண பிரச்சனையில் சிக்கும் கோபி.. அவமானப்படுத்தும் ராதிகா.. மனம் தடுமாறும் பாக்கியா.. திடீர் திருப்பம்
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் இனியா நான் சொல்வதை தான் படிக்க வேண்டும் என்று கோபி பிரச்சனை செய்கிறார்.
ஆனால் அதை கண்டு கொள்ளாத பாக்கியா இனியா ஆசைப்பட்ட படிப்பை படிக்க வைக்க வேண்டும் என்று காலேஜுக்கு கூட்டிட்டு போகிறார்.
இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலின் ஜூலை 26 ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோட்டின் ஆரம்பத்தில் கோபி இனியாவை பிபிஏ கோசில் சேர்க்கப் போவதாக அப்ளிகேஷன் உடன் வீட்டிற்கு வந்த நிலையில் இனி நான் விஸ்காம் தான் படிக்கப் போகிறேன் என்று சொல்ல, கோபி இல்ல உனக்கு அதெல்லாம் செட் ஆகாது என்று இனியாவின் முடிவை மாற்ற முயற்சி செய்கிறார்.
அதற்கு பாக்யா அதான் இனியா விஸ்காம் படிக்க போறதா சொல்றால்லா. அது அவள் முடவு எடுத்தது. அதை படிக்கிறதுல உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்க, கோபி எல்லாரையும் திட்டுகிறார். அதற்கு எழில் இனியா அவளுக்கு பிடித்தது தான் படிப்பா என்று சொல்ல, அதற்கு கோபி நீ விஸ்காம் படித்து இன்னைக்கு வேலை வெட்டி இல்லாம இருக்கிற மாதிரி இனியாவும் வேலை கிடைக்காமல் இருக்கணுமா என்று கேள்வி கேட்கிறார்.
அதற்கு பாக்யா அதான் இனியா விஸ்காம் படிக்க போறதா சொல்றால்லா. அது அவள் முடிவு எடுத்தது. அதை படிக்கிறதுல உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்க, கோபி எல்லாரையும் திட்டுகிறார். அதற்கு எழில் இனியா அவளுக்கு பிடித்தது தான் படிப்பா என்று சொல்ல, அதற்கு கோபி நீ விஸ்காம் படித்து இன்னைக்கு வேலை வெட்டி இல்லாம இருக்கிற மாதிரி இனியாவும் வேலை கிடைக்காமல் இருக்கணுமா என்று கேள்வி கேட்கிறார்.
அதே நேரத்தில் போன் கால் வர பாக்கியா வெளியே போன் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது கோபி இடியட் இடியட் என்று திட்ட, பாக்கியா என்ன சொன்னீங்க என கேட்க? உன்ன தான் திட்டிக்கிட்டு இருந்தேன். குழந்தைங்க ஆசைப்படுவது என்பதற்காக எல்லாவற்றையும் செய்யக்கூடாது. அவங்களுக்கு பியூச்சருக்கு எது சரின்னு தோணுதோ அதைத்தான் செய்யணும் படிப்பு பற்றி உனக்கு என்ன தெரியும். முன்ன பின்ன காலேஜ் பக்கம் போயிருக்கியா. காலேஜ் பஸ் ஆவது பார்த்து இருக்கியா? என்று அவமானப்படுத்தி பேசுகிறார்.
பாக்கியாவை பற்றி கோபி பேசிக்கொண்டே இருக்க பாக்கியா மனதிற்குள் யோசித்துக் கொண்டிருக்கிறார். பிறகு இனியாவோட ஃபியூச்சர் மட்டும் கெட்டுப் போனால் உங்க யாரையும் சும்மா விட மாட்டேன் என்று சொல்ல, அந்த நேரத்தில் ராதிகா போன் பண்ண, கோபி ஃபோனை கட் பண்ணி விடுகிறார்.
வீட்டிற்கு வந்த கோபியிடம் ராதிகா கோபத்தை காட்டுகிறார். அதற்கு என்னவென்று கோபி விசாரிக்க, உங்களால பாக்கியாவை மறக்க முடியாமல் அவகிட்ட பேசாமல் இருக்க முடியலையா? என்று கேட்க அதற்கு கோபி அப்ளிகேஷனை காட்டி நான் இனியாவை பிபிஏ படிக்க வைக்க ஆசைப்பட்டா, அவங்க விஸ்காம் படிக்க வைக்க முடிவெடுத்துட்டாங்க. அதுதான் அவகிட்ட புடிச்சு திட்டிக்கொண்டு இருந்தேன் என்று சொல்ல, ராதிகா சாரி தெரியாம தப்பா நினைச்சுட்டேன் என்று மன்னிப்பு கேட்கிறார்.
அடுத்த நாள் காலையில் இனியா காலேஜ் செல்வதற்கு ரெடியாக இருக்க, பாக்கியா இனியாவை கூட்டிட்டு காலேஜுக்கு கிளம்பி போகிறார். அப்போது செழியன் பணம் இருக்கா? நான் வேண்டுமென்றால் கொடுக்கட்டுமா? என்று கேட்க, எல்லோரும் ஆச்சரியப்படுகின்றனர். ஆனால் பாக்கியா அதெல்லாம் வேண்டாம் பணம் இருக்கு நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
அதே நேரத்தில் கோபி இனியாவுக்கு அட்மிஷன் போடணும் பீஸ் கட்ட பணம் வேண்டுமே என்று அக்கவுண்டை பார்க்க அவர் அக்கவுண்டில் ஒரு லட்சம் ரூபாய் தான் இருக்கிறது. ஆனால் பீஸ் ஒன்றரை லட்சம் ரூபாய் என்பதால் ஆபீஸ்க்கு போன் செய்து விசாரிக்க, ஐம்பதாயிரம் ட்ரான்ஸ்பர் செய்ய சொல்ல ஆபீஸ் அக்கவுண்டில் பணம் இல்லை என்று சொல்கின்றனர்.
இதனால் ராதிகாவிடம் கேட்கலாம் என்று கோபி ராதிகாவிடம் பேச போக, அவர் நீங்க பணம் கட்டுவதை, நான் வேண்டாம்னு சொல்ல மாட்டேன். இதையெல்லாம் தடுக்க மாட்டேன் என்று சொல்லி அங்கிருந்து கிளம்பி விடுகிறார். இதனால் கோபி உதவி கேட்க வரதுக்கு முன்னாடியே இவ பாட்டுக்கு ஒரு பதில் சொல்லிட்டு போறாளே. இப்ப பணத்துக்கு என்ன பண்றது என்று புலம்பி கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு?












Click it and Unblock the Notifications