தப்பான வழியில் போகும் செழியன்.. எழில் சொன்ன செய்தி.. அதிர்ச்சியில் பாக்கியா.. பரபரப்பான திருப்பம்
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் மாலினியால் குடிக்க தொடங்குகிறார்.
அதைத் தொடர்ந்து பாக்கியா செழியனை வார்னிங் செய்து, புதிய சமையல் காண்ட்ராக்ட்க்கு பழனிச்சாமி இடம் ஓகே சொல்கிறார்.
இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூன் 26 ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.

செழியன் மாலினியை பார்க்க போன இடத்தில் வீட்டில் நடந்த பிரச்சனைகளை சொல்லி வருத்தப்பட்டு இப்ப இருக்கிற டென்ஷனுக்கு சரக்கடிக்கலாம் போல இருக்கு என்று சொல்ல, உடனே மாலினி சரக்கு கொண்டுட்டு வந்து குடிக்க சொல்கிறார். செழியன் குடிக்க மறுத்து பிறகு குடிக்கிறார்.
பிறகு மாலினி தனது வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகளை பற்றி பேசிக்கொண்டு உங்களை ரொம்ப புடிச்சிருக்கு என்று சொல்லி கையை பிடிக்க அங்கிருந்து கிளம்பி விடுகிறார். வீட்டிற்கு வந்த செழியன் கதவை தட்ட கதவை திறந்த பாக்கியா செழியன் குடித்து இருப்பதை தெரிந்து செழியனை திட்டுகிறார்.

அதற்கு செழியன் இனி நான் குடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்கிறார். அடுத்த நாள் காலையில் பாக்யா பழனிசாமி வீட்டிற்கு வந்து அவர் சொன்ன சமையல் ஆர்டரை எடுத்து செய்வதாக சொல்ல, பழனிச்சாமி என்னாச்சு நேத்து தானே நீங்க முடியாதுன்னு சொன்னீங்க என்று கேட்க, வீட்டில் கோபி பணம் கேட்டு பிரச்சினை செய்தது எல்லா விஷயத்தையும் சொல்கிறார்.
அதற்கு பழனிச்சாமி எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்க எனக்கு பணம் எல்லாம் வேண்டாம் அங்கு சமையல் ஆர்டர் மூலம் கிடைக்கும் பணமே போதும் என்று சொல்கிறார். இதைத்தொடர்ந்து எழில் வேகமாக வெளியே கிளம்பி கொண்டு இருக்க அப்போது அமிர்தா என்ன இன்னைக்கும் ரொம்ப ஸ்மார்ட்டா இருக்கீங்க என்று கேட்க, பழனிச்சாமி சார் சொன்ன தயாரிப்பாளர் சந்திக்க போவதாக சொல்கிறார். அவர் மட்டும் படம் பண்ண ஒத்துக்கிட்டா ஒரு அளவுக்கு பணம் கிடைக்கும் அதை வைத்து வீட்டு பிரச்சனையை சமாளிக்கலாம் என சொல்கிறார்.

இதைத்தொடர்ந்து பாக்கியா தன்னுடன் சமைப்பவர்களை வீட்டிற்கு அழைத்து இந்த சமையல் ஆர்டர் பற்றி பேச ஒரு நாளைக்கு 5000 பேருக்கு சமைக்கனுமா? அதெல்லாம் ரொம்ப கஷ்டம் இந்த ஆர்டர் வேணாம்னு சொல்லிடுங்க என்று சொல்ல பாக்கியா அதிர்ச்சடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications