பழனிச்சாமி பற்றி வெளிவந்த உண்மை..பாக்யாவிற்கு கிடைத்த அதிர்ச்சி..மயூ சொன்ன வார்த்தை..!
சென்னை: தன்னிடம் பிரச்சனை செய்த ராதிகாவிற்கு பாக்கியா அட்வைஸ் கொடுக்கிறார்.
பழனிச்சாமி பாக்கியாவிடம் பொய் சொல்லிவிட்டு கடைசியில் மாட்டிக்கொள்கிறார்.
மயூவை பாராட்டும் பாக்யாவிற்கு கடைசியில் அதிர்ச்சி காத்திருக்கிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் ஜூன் 2ம் தேதிக்கான எபிசோட் ஆரம்பத்தில் பாக்யாவிடம் சண்டை இட்டுக் கொண்டிருக்க நீங்க கேட்கிற கேள்வி எல்லாத்துக்கும் என்னால பதில் கொடுக்க முடியும். ஆனா அதை நான் பண்ண மாட்டேன். அதற்கு காரணம் நீங்க பண்ற எதையுமே நான் ஒரு விஷயமா மதிக்கிறது கிடையாது என்று பாக்கியா கூறுகிறார்.
பிறகு நான் குழந்தைகளை வைத்து கேம் விளையாடுறேன்னு சொல்றீங்க ஆனா இன்னைக்கு நடந்தது யோசித்து பாருங்கள். மயூ ரொம்ப நல்ல பொண்ணு ஆனா அவ வருத்தப்படுற மாதிரி நீங்க நடத்துக்காதிங்க என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
பிறகு ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸில் பழனிச்சாமி தேன் மிட்டாய் நானே செய்தது என்று கொடுக்க, பாக்யாவும் லோகிதாவும் சாப்பிட்டு சூப்பரா இருக்கிறது என்று கூறி இருக்கின்றனர். அப்போது பழனிச்சாமி பாக்கெட்டில் இருந்து கீழே விழுந்த ஒரு பில்லை பார்த்து லோகிதா இது ஸ்வீட் கடையில் தேன்குழல் மிட்டாய் வாங்கியதற்கான பில் என்று சொல்ல பழனிச்சாமி மாட்டிக்கொள்கிறார்.

அடுத்ததாக பாக்கியாவும் லோகிதாவும் பழனிச்சாமியின் அம்மாவை பார்க்க அவருடைய வீட்டுக்கு போகின்றனர். அப்போது பழனிச்சாமியின் அம்மா சாப்பாடு நான் சாப்பிட மாட்டேன் அது உப்பு சப்பு இல்லாமல் இருக்கு என்று அடம் பிடித்துக் கொண்டிருக்க, நான் சமைத்து தருகிறேன் என்று பாக்யா சமைத்துக் கொடுக்க அதை பழனிச்சாமி அம்மா பாராட்டி சாப்பிடுகிறார்.
அதே நேரத்தில் வீட்டில் செழியன் ஜெனி இடம் பேசிக் கொண்டிருக்க அப்போது ஆபீஸில் இருந்து போன் வருகிறது. நீங்க அந்த லேடி கிளைன்டிடம் சரியாக கம்யூனிகேஷன் செய்யவில்லை என்று புகார் வருகிறது என்று சொல்ல, ஜெனி நமக்கு வேலை முக்கியம் அவங்க உன்கிட்ட எப்படி வேணாலும் பழகட்டும் நீ உன்னுடைய வேலையில் கவனமா இரு என்று அட்வைஸ் கொடுக்கிறார்.

அடுத்ததாக பாக்யா வீட்டிற்கு வந்ததும் மயூ குடிக்க தண்ணி கேட்டு வந்து நிற்க, ஜெனி தண்ணீர் பிடித்துக் கொடுக்க, பாக்யா நீ சாப்டியா என்று கேட்க பிரட் ஜாம் வச்சுட்டு போயிருக்காங்க என்று சொல்ல, உனக்கு அது பத்துமா? அப்புறம் அதை சாப்பிடு என்று சொல்லி ஸ்னாக்ஸ் எடுத்து பாக்கியா கொடுக்கிறார்.
பிறகு மயூ உங்ககிட்ட நான் ஒன்னு சொல்லணும் என்று சொல்லி, நீங்க ரொம்ப நல்ல ஆன்ட்டி என்று சொல்ல, பாக்கியாவும் நீயும் ரொம்ப நல்ல பொண்ணு என்று மயூவை கொஞ்சி கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
கொலை மிரட்டல் விடுறாங்க.. பயமா இருக்கு.. கமிஷனர் ஆபீஸில் பதறிய வாட்டர் மெலன் திவாகர்! -
சிறகடிக்க ஆசை சீரியல் அணிலா ஸ்ரீகுமாருக்கு 3வது கல்யாணம்.. குழந்தைகள் முன்பே நடந்த சம்பவம்! குவியும் வாழ்த்து -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி












Click it and Unblock the Notifications