Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது.. 34 வயதில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை வீட்டில் நடந்த அகால மரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் செல்வி கேரக்டரில் நடிகை கம்பம் மீனா நடித்து வருகிறார். இவர் அதே சேனலில் விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலும் ஐஸ்வர்யாவின் சித்தியாக கஸ்தூரி கேரக்டரிலும் நடித்து வருகிறார்.

சீரியலில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை கம்பம் மீனா இன்று தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தன்னுடைய அக்காள் மகனின் மரணம் குறித்து உருக்கமான பதிவு வெளியிட்டு இருக்கிறார்.

Baakiyalakshmi serial actresses kampam meena sad post

சில நாட்களுக்கு முன்பு தன்னோடு பேசிய தன்னுடைய அக்காள் மகன் இன்று உலகத்தில் இல்லை என்பதை வேதனையோடு அவர் தெரிவித்திருக்கும் நிலையில் அதற்கு அதிகமானோர் வருத்தங்களை தெரிவித்து ஆறுதல் கூறி வருகிறார்கள்.

விஜய் டிவியில் டிஆர்பியில் பாக்கியலட்சுமி சீரியல் மற்றும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் முக்கிய இடத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இன்னும் ஒரு சில நாட்களில் முடிவுக்கு வர இருக்கிறது. அதே நேரத்தில் இந்த சீரியல் இனி இரண்டாவது பாகம் தொடங்கப்பட இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த இரண்டு சீரியல்களிலும் நடிகை கம்பம் மீனா நடித்து வருகிறார்.

பாக்கியலட்சுமி சீரியலில் செல்வி கேரக்டரில் பாக்யாவிற்கு தோள் கொடுக்கும் தோழியாக இவர் இருக்கும் நிலையில் தன்னுடைய குடிகார கணவரின் கொடுமை குறித்து அடிக்கடி பேசி பலருடைய அனுதாபங்களையும், அதே நேரத்தில் பாக்யாவுக்காக இவர் செய்யும் செயல்களை பற்றி பலர் பாராட்டியும் வருகிறார்கள். அதேபோல பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலும் கஸ்தூரி கேரக்டரில் ரசிகர்கள் சொல்ல நினைப்பதை எல்லாம் இவரே சொல்லி விடுகிறார்.

கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரையும் அடிக்கடி இவர் லெப்ட் ரைட் வாங்கிக்கொண்டு பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தை கலாய்க்கும் முக்கிய கேரக்டராக இவர் இருந்து வருவதாலேயே இவரை அதிகமானோருக்கு பிடிக்கும். ஆரம்பத்தில் இவர் சீரியலில் நடிக்க தொடங்கிய போது இவருடைய குரலை பார்த்து பலர் கலாய்த்தனர். ஆனால் இப்போது இவருடைய நடிப்புக்கு ஒரு நாள் அவர் டப்பிங் பேசாமல் வேறு ஒரு நபர் வைத்து டப்பிங் பேசப்பட்ட நிலையில் அது இவருக்கு செட்டாகவில்லை என்று ரசிகர்கள் கருத்து கூறி வந்தனர்.

அந்த அளவிற்கு இப்போது ரசிகர்களின் மத்தியில் அவர் பிரபலம் அடைந்திருக்கிறார். இந்த நிலையில் இன்று தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் தன்னுடைய அக்காள் மகன் அகால மரணம் அடைந்தது குறித்து கண்ணீரோடு பதிவு வெளியிட்டிருக்கிறார்.

Baakiyalakshmi serial actresses kampam meena sad post

அதில் "என்னடா அவசரம் நீ தானடா காரியக்காரன்...தீஷிகனுக்கு ஐந்து வயது ஆகட்டும். அவனை எப்படி கொண்டு வரேன் பாரு சித்தினு சொல்லி 4 நாள் தான்டா ஆகுது.. நீ அடுத்த தடவை வரும்போது நான் எப்படி இருக்கேன் பாரு சித்தின்னு சொன்னியே... நாலே நாள்ல என்ன வர வச்சுட்டியே பாண்டி.. ஐயோ என்னடா இது காலகொடுமை... இப்படி 34 வயசிலேயே எமனுக்கு பலி கொடுத்துட்டமேடா பாண்டி..

நா வந்துட்டு இருக்கேன் டா வாசல்ல வந்து என்னையே வா சித்தின்னு சொல்லுவியே... பாண்டி" என்று கண்ணீரோடு அவருடைய அக்காள் மகனின் புகைப்படத்தை கம்பம் மீனா வெளியிட்டு இருக்கிறார். இதற்கு அதிகமானோர் தங்களுடைய ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள். அத்தோடு அவர் எதனால் மரணம் அடைந்தார் என்று பலரும் கேட்டு வருகின்றனர்.

ஆனால் எப்போதும் கமெண்ட்களுக்கு உடனுக்குடன் பதில் கொடுக்கும் கம்பம் மீனா தற்போது இந்த பதிவுகளுக்கு வரும் கமெண்ட்களுக்கு இன்னும் பதில் கொடுக்கவில்லை. ஆனாலும் தன்னுடைய அக்கா மகன் மீது இவர் வைத்திருக்கும் பாசத்திற்கு பலர் ஆறுதல்கள் கூறி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+