பாக்கியலட்சுமி: பட்டும் திருந்தாத ஈஸ்வரி கூட்டிய புது பிரச்சனை.. அவமானப்படும் எழில்.. மனம் மாறிய இனியா

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஆகஸ்ட் 8ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் ஏற்கனவே ஈஸ்வரியால் வீட்டில் பல பிரச்சனைகள் வந்தது ஆனாலும் அதிலும் திருந்தாமல் தான் சொல்வது தான் சரி என்று கோபியோடு அவருடைய வீட்டிற்கு சென்று பிறகு போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் சென்று விட்டு வந்திருக்கிறார். ஆனாலும் பாக்கியா வீட்டிற்கு வந்த பிறகு மீண்டும் பழைய வில்லியாக மாறி இருக்கிறார்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பாக்கியா கிச்சனில் வேலை செய்து கொண்டிருக்க அங்கு வரும் இனியா நானும் எதுவும் ஹெல்ப் பண்ணவா? என்று கேட்க, அங்கு வரும் அமிர்தா ஜெனி ஈஸ்வரி செல்வி என ஒவ்வொருவரும் வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இனியாவை மட்டும் பாக்கியா எந்த வேலையும் பார்க்க வேண்டாம் என்று சொல்ல, செல்வி என்ன பாப்பா உன்னுடைய போன் எதுவும் ரிப்பேர் ஆகிவிட்டதா? அதனால் தான் இந்த பக்கமா வந்திருக்கியா என்று கேட்க,

Baakiyalakshmi Serial

அதற்கு இனியா இல்ல எனக்கு எல்லோரும் வேலை பார்க்கும்போது நான் சும்மா இருக்க ஒரு மாதிரி வருத்தமா இருக்கு என்று பீல் பண்ண, செல்வி இனியாவால் வந்த பிரச்சனையை நினைத்து இப்போ வருத்தப்படுகிறார் போல என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். மறு பக்கத்தில் எழில் தன்னுடைய நண்பரோடு ஒரு புரொடியூஸரை பார்க்க போக அவர் நீங்கே இதுவரைக்கும் என்னவெல்லாம் செய்தீர்கள் என்று கேட்டதும், எழில் தான் செய்த ப்ராஜெக்ட் எல்லாவற்றையும் சொல்கிறார்.

இதைக்கேட்ட ப்ரொடியூசர் உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதை நீங்கள் சரியாக பயன்படுத்தவில்லை என்று சொல்ல, அதற்கு எழில் எனக்கு அந்த நேரத்தில் வீட்டில் பிரச்சனை இருந்ததால் தான் பழைய ப்ரொடியூசரிடம் என்னால் கதை சொல்ல முடியாமல் போய்விட்டது என்று சொன்னதும் அதற்கு அவர் நான் உண்மையான உழைப்போடு முன்னேற வேண்டும் என்று வேகத்தில் இருப்பவர்களுக்கு மட்டும்தான் வாய்ப்பு கொடுப்பேன் உங்களைப் போல சோம்பேறிகளுக்கு நானும் வாய்ப்பு தர மாட்டேன் என்று எழிலை அசிங்கப்படுத்தி அனுப்புகிறார்.

Baakiyalakshmi Serial

மறுபக்கத்தில் வீட்டிற்கு வந்த செழியன் பாக்யாவிடம் பணக்கட்டை கொடுத்து வீட்டு செலவுக்கு வைத்துக் கொள்ளுமாறு சொல்கிறார். ஆனால் பாக்கியா வேண்டாம் என்று சொல்ல செழியன் கட்டாயப்படுத்துகிறார். ஈஸ்வரியும் ஜெனியும் பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என்று கட்டாயப்படுத்த பாக்யா வாங்குகிறார். அந்த நேரத்தில் எழில் வீட்டிற்கு வர இதை பார்த்து கண்கலங்குகிறார்.

அப்போது ஈஸ்வரி வீட்டில் இரண்டு பேரும் காசு கொடுக்கிறேன் என்று சொன்னீர்கள். ஆனால் செழியன் மட்டும் தான் கொடுக்கிறான் என்று எழிலை நடு வீட்டில் வைத்து அசிங்கப்படுத்தி பேசுகிறார். இதனால் எழில் எதுவுமே பேச முடியாமல் அழுது கொண்டே மாடிக்கு சென்று விடுகிறார். ஈஸ்வரிக்காக தான் தனக்கு கிடைத்த வாய்ப்பை கூட எழில் சரியாக பயன்படுத்தவில்லை.

Baakiyalakshmi Serial

தனக்கு கதை சொல்ல வர சொல்லி ப்ரொடியூசர் சொல்லி இருந்த நாளில்தான் ஈஸ்வரியை தேடி போலீஸ் வீட்டிற்கு வந்தது. அதனால் தான் எழிலால் கதை சொல்ல போக முடியவில்லை. ஆனால் இன்று அதே ஈஸ்வரியே எழிலை அவமானப்படுத்தி பேசுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+