கணேஷ் கேள்விக்கு அமிர்தா எடுத்த முடிவு..கலங்கி நிற்கும் எழில்..கோபி சொன்ன வார்த்தை எதிர்பாராத முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் டிசம்பர் 30ம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.

அதில் பாக்கியா வீட்டிற்கு வந்த கணேஷ் அமிர்தா தன்னோடு வரவேண்டும் என்று சொல்ல அதற்கு அமிர்தா அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் கணேஷிடம் கோபி சொன்ன வார்த்தையை கேட்டு மொத்த குடும்பமும் அதிர்ச்சியாகி இருக்கின்றனர். என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

 Baakiyalakshmi Serial December 30th episode Amrithas decision on Ganeshs question

அந்த வகையில் இன்றைய எபிசோட்டில் கணேஷ் வீட்டிற்கு வந்து அமிர்தாவையும் நிலாவையும் என் கூட வாங்க நான் உங்கள நல்லா பார்த்துக்குவேன் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கு அமிர்தா நான் எங்கேயும் வரமாட்டேன் இங்கேதான் இருப்பேன் என்று பாக்யாவை கட்டிப்பிடித்து அழுது கொண்டிருக்கிறார்.

 Baakiyalakshmi Serial December 30th episode Amrithas decision on Ganeshs question

இன்னொரு பக்கம் எழிலும் தலையில் கை வைத்துக் கொண்டு அழுது கொண்டிருக்கிறார். பிறகு கோபி எழிலுக்கு ஆறுதல் சொல்லுகிறார். ஆனால் கணேஷ் பிடிவாதமாக அமிர்தா என்கூட வா என்று கூப்பிட்டுக்கொண்டே இருக்க, பார்க்க உன்னை பார்த்தாலே பயப்படுறாளே போ என்று சொல்கிறார். பிறகு கணேஷ் எழிலிடம் இருக்கும் நிலாவை தூக்க வரும்போது கோபி நிலா எங்க வீட்டு பொண்ணு அமிர்தாவும் எங்க மருமகள் இரண்டு பேரும் இங்கேதான் இருப்பாங்க.

 Baakiyalakshmi Serial December 30th episode Amrithas decision on Ganeshs question

நீ செத்து போனதுக்கு அப்புறம் உன்னை மறந்துட்டு எழிலை கல்யாணம் பண்ணிக்கிட்டு ஒரு வருஷமா இவங்க சந்தோஷமா இருக்காங்க. திடீர்னு நீ உயிரோடு வந்துட்டா எப்படி உன் கூட வருவா? அதெல்லாம் அமிர்தாவையும், நிலாவையும் உன் கூட அனுப்பி வைக்க முடியாது என்று சொல்ல அதற்கு கணேஷ் என் பொண்டாட்டி பிள்ளை என் கூட அனுப்பி வைக்கலைன்னா நான் போலீசை கூப்பிடவேன் என்று சொல்கிறார்.

 Baakiyalakshmi Serial December 30th episode Amrithas decision on Ganeshs question

உடனே போய் கோபி போலீசை கூப்பிடு நான் பேசுகிறேன் என்று அதிரடியாக பேச அனைவரும் அதிர்ச்சியாக இருக்கின்றனர். பிறகு கணேஷின் அப்பா அம்மா என்னுடைய பையன் இடத்திலிருந்து பாருங்க மனசாட்சியே இல்லாமல் பேசுறீங்க என்று கேட்க, கோபி மனசாட்சி இருப்பதால் தான் இவ்வளவு பொறுமையாக பேசிட்டு இருக்கோம்.

 Baakiyalakshmi Serial December 30th episode Amrithas decision on Ganeshs question

உங்க பையனுக்கு புத்திமதி சொல்லி அவனை அழைச்சிட்டு போங்க என்று சொல்கிறார். கடைசியாக ராமமூர்த்தி கணேஷிடம் நீ வா என்று கூப்பிட்டு, நீ வந்த அதிர்ச்சியில் அவள் இருக்கா அதிலிருந்து மீண்டு வரவே எவ்வளவு நாள் ஆகும்னு தெரியல என்று கேட்க, அதற்கு கணேசன் கரெக்ட் நான் வந்து அதிர்ச்சியில் தான் அமிர்தா இருக்கா...

 Baakiyalakshmi Serial December 30th episode Amrithas decision on Ganeshs question

கொஞ்ச நாள் கழிச்சு எல்லாம் சரியாயிடும். அப்புறம் என்கூட வருவா. அதனால நான் இப்போ போறேன். ஒரு வாரம் கழிச்சு வந்து அமிர்தாவையும், நிலாவையும் நான் கூட்டிட்டு போவேன். அதுக்குள்ள அவ மனசு மாறி இருப்பா என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+