பாக்கியலட்சுமி: வசமாக சிக்கிய கோபி.. செம கேள்வி கேட்ட பாக்கியா.. ஈஸ்வரிக்கு விழுந்த அடி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் டிசம்பர் 31ஆம் தேதிக்கான எபிசோடில் கோபி, ஈஸ்வரி மற்றும் ராதிகா இருவருக்கும் இடையே மாட்டிக்கொண்டு முழிக்கிறார். கடைசியில் கோபி எடுத்த முடிவால் ஈஸ்வரி அதிர்ச்சியில் இருக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் கோபி ராதிகாவிடம் வீட்டை விட்டு போக வேண்டாம் என்று சொன்னாலும் ராதிகா வீட்டை கிளம்புவதில் உறுதியாக இருக்கிறார். அப்போது எந்த இடத்தில் இருக்க போற என்று கோபி கேட்க, என்னுடைய ஆபீஸ் பக்கத்துல தான் போகப் போறேன் என்று சொல்லிவிட்டு ராதிகா கிளம்பி விடுகிறார்.

அடுத்ததாக கோபி மீண்டும் பாக்யா வீட்டிற்கு வருகிறார். அப்போது ஈஸ்வரி, ராதிகா சின்ன பொண்ணு வச்சிருக்கா. வேலைக்கு போறா.. உன்னை அவ எப்படி பார்த்துக்க முடியும்? 24 மணி நேரமும் ஒரு ஆளு உன் கூட இருக்கணும். அதனால தான் நான் உன்னை இங்க கூட்டிட்டு வந்தேன். அவ போனா போகட்டும் விடு.. என்று சொல்ல, இனியா ஆமா டாடி நாங்க எல்லாரும் உங்களுக்கு இருக்கிறோம் நீங்க கவலைப்படாதீங்க என்று ஆறுதல் சொல்கிறார்.
அப்போது பாக்கியா அவங்க போறேன்னு சொன்ன உடனே நீங்களும் போகட்டும்னு வந்துட்டீங்களா? அவங்க மனசு உடைஞ்சிருக்கு. இந்த நேரத்துல நீங்க அவங்களுக்கு ஆறுதலா இருந்திருக்கணும். இங்க வந்திருக்கக் கூடாது என்று கோபியிடம் சொல்கிறார்.

அதோடு இந்த மாதிரி உங்க பசங்க பண்ணுனா உங்களால பாத்துட்டு சும்மா இருக்க முடியுமா? என்று கோபியிடம் கேட்க, கோபி பதில் எதுவும் சொல்ல முடியாமல் நிற்கிறார். மேலும் பேசிய பாக்கியா செழியன் ஜெனியையும் எழில் அமிர்தாவையும் சரியா பாத்துக்கலன்னா உங்களுக்கு எப்படி இருக்கும்? இனியாவை கல்யாணம் பண்ணிக்க போறவர் இது மாதிரி பண்ணா நீங்க பாத்துட்டு சும்மா இருப்பீங்களா? என்று கேட்க கோபி அதிர்ச்சியாகி நிற்கிறார்.

பாக்கியா பேசிக் கொண்டே இருப்பதை பார்த்ததும் ஈஸ்வரி அவா ஏதாவது பேசிட்டே இருப்பா நீ உள்ள வா என்று கோபியை கூப்பிடுகிறார். ஆனால் கோபி பாக்கியா பேசியதெல்லாம் நினைத்து பார்த்த நான் ராதிகாவை பார்க்க போறேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
மறுபக்கத்தில் ராதிகாவும் மயூவும் சோகமாக புது வீட்டில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். அங்கு கோபி வருகிறார். கோபியை பார்த்ததும் ஓடி சென்று அவரைக் கட்டி அணைத்து ஏன் என்ன பாக்க வரல நான் உங்களை ரொம்ப மிஸ் பண்னேன் டாடி என்று மயூ கேட்கிறார்.

கோபி மயூக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது ஈஸ்வரி போன் செய்கிறார். நீ அந்த வீட்டுக்கு போயிட்டா அம்மாவை மறந்துவிடு.. என்று ஈஸ்வரி கோபமாக பேசுகிறார். இதைக் கேட்டு கோபி அதிர்ச்சியாகி நிற்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
Super Singer : சூப்பர் சிங்கர் அருணாவிற்கு கல்யாணம்.. மகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள்












Click it and Unblock the Notifications