பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. இப்போ முடிவு இல்லையாமே! இனி நடக்கப்போவது இதுதானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராமமூர்த்தி கேரக்டர் இறப்பது போன்ற காட்சிகள் வந்திருக்கும் நிலையில் அதைத்தொடர்ந்து சீரியல் விரைவில் முடிவுக்கு வருவதாக இந்த சீரியலில் நடித்து வந்த நடிகர் ரோசரி கூறியிருந்த நிலையில் இந்த சீரியல் இப்போதைக்கு முடிவுவில்லை என்றும் அடுத்த வருடம் தான் முடிய போகிறது என்றும் கூறப்படுகிறது.

இந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. காரணம் இதுவரைக்கும் இந்த சீரியலில் பில்லர் போல முக்கிய கேரக்டரில் இருந்து வந்த ராமமூர்த்தி கேரக்டர் நேற்று இறந்து போயிருக்கிறார். இனி கதை எப்படி போகும் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்.

television baakiyalakshmi serial vijay tv

அதே நேரத்தில் ராமமூர்த்தி கேரக்டரில் நடித்த நடிகர் ரோசரி தன்னிடம் இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வரப்போகிறது என்று கூறியதாக பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இது நேற்றிலிருந்து இணையத்தில் அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. பாக்யாவுக்கு பக்கபலமாக இருந்து வந்த ராமமூர்த்தி தான் பாக்யாவின் பிரச்சனைகளுக்கு காரணமாக இருந்தவர் என்பது யாராலும் மறுக்க முடியாது.

பாக்யாவை பிடிக்கவில்லை என்ற போது அவரை வலுக்கட்டாயமாக கோபிக்கு ராமமூர்த்தி தான் கல்யாணம் செய்து வைத்திருந்தார். அதோடு தன்னுடைய மனைவியான ஈஸ்வரி பாக்யாவை ஆரம்பத்தில் அதிகமாக அவமானப்படுத்தினாலும் தன்னுடைய மனைவியை எதிர்த்து பெரியதாக தன்னுடைய மருமகளுக்காக ராமமூர்த்தி எந்த முடிவும் எடுத்ததில்லை. இவ இப்படிதான் பேசிக்கிட்டு இருப்பா என்று உப்புக்கு சப்பாகத் தான் பாக்யாவுக்கு சப்போர்ட் செய்து கொண்டிருந்தார்.

ஆனால் தற்போது கோபியின் சுயநலத்தை பற்றி தெரிந்து கொண்ட ஈஸ்வரியும் பாக்யாவை புரிந்து கொண்டு அவர் மீது பாசமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் யாரும் எதிர் பார்க்காத வகையில் ராமமூர்த்தியின் இறப்பு வந்திருக்கிறது. ஏற்கனவே இது போலத்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலும் பாண்டியனின் அம்மாவின் இறப்பு வந்தது. அப்போது கூட சீரியல் சீக்கிரமாக முடிவுக்கு வந்துவிடும் என்று சொல்லி இருந்த நிலையில் அதற்கு பிறகு ஒரு வருடங்களுக்கு மேலாக அந்த சீரியல் ஓடிவிட்டது.

அதுபோல இந்த சீரியலில் இதுவரைக்கும் பாக்கியாவிற்க்கு பக்கபலமாக இருந்த எழில் இப்போது வீட்டை விட்டு போயிருக்கிறார். இனி எழில் பல பிரச்சனைகளை தாண்டி ஒரு இயக்குனராக சாதித்து மீண்டும் வீட்டிற்கு வர வேண்டும். அதுபோல பாக்கியா தன்னுடைய பிசினஸில் சாதிக்க வேண்டும். ஏற்கனவே கோபி பாக்கியா மீது கோபி கொலவெறியில் இருக்கிறார். இப்போது அப்பாவின் இறப்பிற்கு காரணமும் பாக்கியா தான் என்று கூறி பாக்யாவை பழி வாங்குவதற்காக அடுத்த பிரச்சனையை தொடங்குவார்.

ஏற்கனவே பாக்கியா ரெஸ்டாரண்ட் நடத்தும் கடையின் ஓனரிடம் கோபி இந்த ரெஸ்டாரண்டை நீங்களே எடுத்து நடத்தலாம் என்று முதல் நாளே மனதை மாற்றி இருக்கிறார். அதோடு அவருடைய போன் நம்பரையும் வைத்து வாங்கி வைத்திருப்பதால் கோபியால் இனி பாக்யாவிற்கு பிரச்சனை வரும் என்று தெரிகிறது. அதே நேரத்தில் இப்போதைக்கு இந்த சீரியலில் முடிவு இல்லை என்று கூறப்படுகிறது.

அதிலும் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரைக்கும் இந்த சீரியல் ஒளிபரப்பாகும் என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த வாரம் முழுக்க ராமமூர்த்தியின் இறுதி சடங்குகள் கோபி வந்து பிரச்சனை செய்வது போன்ற பரபரப்பான காட்சிகள் தான் இருக்கப் போகிறது. அதற்கு பிறகு என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+