போட்டியில் கோபிக்கு கிடைத்த அதிர்ச்சி.. செழியனுக்கு அதிர்ச்சி கொடுத்த இனியா.. பதறும் பாக்கியா

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூலை 23ஆம் தேதி என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் இனியா செழியனிடம் ஏமாற்றிவிட்டு பப்புக்கு போயிருக்கும் நிலையில் இனியாவை தேடிப்போன செழியனுக்கு அதிர்ச்சி கிடைத்திருக்கிறது. மறுபக்கத்தில் பாக்கியா மற்றும் கோபிக்கு இடையே சமையல் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது பற்றி பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பாக்யாவிற்கும் கோபிக்கும் இடையே இறுதிப்போட்டி விறுவிறுப்பாக நடக்க நடுவர்கள் என்ன சமைக்கிறீங்க போட்டியில் ஜெயிப்பீங்களா? என்று கேட்க, பாக்யா நான் இந்த போட்டியில் 100 சதவீதம் சமைப்பேன் என்று தான் சமைக்கும் டிஷ் பற்றி சொல்கிறார். கோபியும் நானும் ஜெயிப்பேன் என்று சொல்கிறார். ஆனால் அவர் சமைக்கும் டிஷ் பெயர் கூட அவருக்கு சரியாக சொல்ல தெரியவில்லை.

Baakiyalakshmi Serial

இதை பார்த்த செல்வியும் ஈஸ்வரியும் கோபியை திட்டிக் கொண்டிருக்கின்றனர். அப்போது கோபி தன்னுடைய செஃப் இடம் நல்லபடியா செய்து முடித்து விடுங்கள் இல்லைனனா மானம் மரியாதை எல்லாம் போயிடும் என்று சொல்கிறார். இதற்கிடையே பாக்கியா போனை எடுத்து பார்த்து சமைத்துக் கொண்டு இருக்க செல்வி என்னக்கா சமையல் மறந்து போச்சா வீடியோ பார்த்து சமைக்கிறியா என்று கேட்க இல்ல இனியா இன்னும் போனை எடுக்கல செழியனுக்கு போன் போட்டா அவனும் எடுக்கல அதான் பயமா இருக்கு என்று சொல்ல ஈஸ்வரி இனியாவை பற்றி யோசிக்காமல் நீ சமைக்கிறது மட்டும் பாரு என்று சொல்கிறார்.

ஆனாலும் பாக்கியா ஒரு நிமிஷம் நான் இனியாவுக்கு போன் பண்ணி பாத்துட்டு வந்துருவேன் என்று சொல்லி தனியாக சென்று போன் செய்ய இனியா அப்போதும் எடுக்காமல் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கிறார். உடனே செழியனுக்கு போன் செய்து விசாரிக்க நான் இனியா பிரண்டு வீட்டுக்கு வெளியேதாமா இருக்கேன் இனியாவை கூப்பிட போறேன் என்று சொல்லி ஃபோனை வைக்கிறார்.

Baakiyalakshmi Serial

பிறகு செழியன் இனியா பிரண்ட் பிரியா வீட்டு கதவை தட்ட வீட்டுக்குள் இருந்து வந்த வேலைக்காரி வீட்ல யாரும் இல்ல. நான் இந்த வீட்ல தான் வேலை செய்கிறேன். நான் வரும்போது யாரும் வீட்ல இல்ல பூட்டி இருந்தது என்கிட்ட இருக்கிற சாவியை வைத்து திறந்து தான் வீட்டிற்குள் வந்தேன் என்று சொல்லி வீட்டை பூட்டிக்கொண்டு அவர் கிளம்ப செழியன் ஒன்றும் புரியாமல் நிற்கிறார்.

என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி கொண்டு இருக்க அம்மாவுக்கு போன் செய்து விடலாமா? என்று போனை எடுத்து பிறகு வேண்டாம் அவங்க பயந்துடுவாங்க என்று முடிவை மாற்றிக் கொள்கிறார். மறுபக்கத்தில் சீனியர்ஸ் இனியா நம்பரை கேட்டு பப்பில் தகராறு நடக்க இனியாவின் பிரெண்ட்ஸ் தர முடியாது என்று சொல்ல, அவர்களுக்குள் சண்டை உருவாகிறது.

அந்த நேரத்தில் இனியா பாக்யாவிற்கு போன் செய்ய வெளியே வந்ததும் இவர்களை பார்த்து பிரித்து விட முயற்சி செய்ய பவுன்சர்ஸ் வந்து சண்டையை பிடிக்கின்றனர். பப் ஓனர் போலீசுக்கு தகவல் கொடுக்க இவர்கள் எல்லோரும் வேண்டாம் என்று அழுகின்றனர். அடுத்ததாக கோபியின் செஃப் செய்த கேக் கருகி போய்விட கோபி டென்ஷனாக இருக்கிறார். அதற்கு நடுவர்கள் ஏதாவது புது டிஷ் பண்ணுங்க என்று கூல் செய்கின்றனர்.

Baakiyalakshmi Serial

ஆனால் பாக்கியா டிஷ் செய்து முடித்து ஒரு பௌலில் மாற்றி அதை ஃப்ரிட்ஜில் வைக்க சொல்லிவிட்டு திரும்பவும் செழியனுக்கு போன் செய்து இனியா பற்றி விசாரிக்க செழியன் இனியா வந்துவிட்டதாகவும் ஒரு ரெஸ்டாரண்டில் சாப்பிட்டுக் கொண்டிருப்பதாகவும் பொய் சொல்லி சமாளிக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+