ஜெயிலுக்கு போகிறாரா ஈஸ்வரி? கோபிக்கு ராதிகா கொடுத்த அதிர்ச்சி.. கமலா எடுத்த முக்கிய முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூன் 21 ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிய ராதிகா இனி உங்க அம்மா நம்ம வீட்டில் இருக்கக் கூடாது என்று மிரட்டுகிறார். அதோடு கமலா ஈஸ்வரி மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கப் போவதாகவும் கூறுகிறார். என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் வீட்டுக்கு வந்த ஈஸ்வரி ஹாஸ்பிடலில் நடந்த விஷயங்களை நினைத்து பார்த்து அழுது கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் கோபி ராதிகாவுக்கு ஒரு ஜூஸ், காபி ஏதாவது வாங்கிட்டு வரட்டுமா? என்று கேட்க கமலா உங்களுக்கு எதுக்கு அந்த கஷ்டம் நானே என் பொண்ணை பாத்துக்கிறேன் என்று கோபத்தில் சொல்கிறார்.

அப்போது மயூ கோபியுடன் கடைக்கு கிளம்ப அதை தடுத்து நிறுத்தும் கமலா மயூவை கூட்டிக்கொண்டு வெளியே போனதும் ராதிகா உங்கம்மா நம்ம குழந்தையை கொன்னுட்டாங்க. அவங்க இந்த அளவுக்கு போவாங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல என்று கதறி அழ, கோபியும் கண்கலங்கி ஆறுதல் சொல்கிறார். மறுநாள் காலையில் பாக்யா ஈஸ்வரியை வந்து பார்க்க ஈஸ்வரி உண்மை எதுவும் சொல்லாமல் மறைத்து விடுகிறார்.
பாக்கியாவை அனுப்பி வைத்துவிட்டு மீண்டும் கண்கலங்கி அழுது கொண்டு இருக்கிறார். அப்போது ராதிகாவை டிஸ்சார்ஜ் செய்து கோபி வீட்டிற்கு அழைத்து வர தயாராக, ராதிகா நான் அம்மாவோட ஊருக்கு போய் ரெஸ்ட் எடுக்க போறேன் என்று அதிர்ச்சி கொடுக்கிறார். கோபி நான் உன்னை அனுப்ப மாட்டேன் என்று சொல்ல, ராதிகா என்னால இனி அந்த வீட்டுக்கு வர முடியாது என்று சொல்லிவிடுகிறார்.
அதற்கு கமலா என் பொண்ணை நான் எங்க ஊருக்கே கூட்டிட்டு போய் பார்த்துகிறேன். மயூவை அங்கேயே ஒரு ஸ்கூல்ல சேர்த்துக்கிறேன் உங்க அம்மா இருக்கிற வீட்டில் என் பொண்ணை இனி இருக்க விடமாட்டேன் என்று சொல்கிறார். கோபி எங்க அம்மா அப்படி எதுவும் பண்ணிருக்க மாட்டாங்க என்று ஈஸ்வரிக்கு சப்போர்ட் செய்து பேச, அதனால் கோபமான ராதிகா என்னால் அந்த வீட்டுக்கு வர முடியாது என்று உறுதியாக சொல்லிவிடுகிறார்.
அதற்கு கமலா ராதிகா அந்த வீட்ல இருக்கணும்னா உங்க அம்மாவை வீட்டை விட்டு வெளியே அனுப்புங்க. இல்லனா நான் போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுத்து அவங்களை உள்ளே தள்ளிடுவேன் என்று மிரட்டுகிறார். அதற்கு கோபி அம்மாவை எப்படி வெளியே அனுப்ப முடியும்? அவர்களிடம் பேசி இதுக்கு ஒரு சொல்யூஷன் தரேன் என்று சொல்ல, ராதிகா அந்த சொல்யூஷன் நான் எதிர்பார்க்கிற மாதிரி இருக்குமா? என்று கேள்வி கேட்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
குலதெய்வ கோவிலில் கணவருடன் மகிழ்ச்சியை பகிர்ந்த மணிமேகலை.. அடடா சூப்பர்! குவியும் வாழ்த்துக்கள் -
Super Singer : சூப்பர் சிங்கர் அருணாவிற்கு கல்யாணம்.. மகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி












Click it and Unblock the Notifications