ஜெனி வீட்டிற்கு வந்து மாலினி கொடுத்த அதிர்ச்சி.. ஆனால் பாக்யா இப்படி சொல்லிட்டாங்களே! கோர்ட்டில் குழப்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் மார்ச் ஐந்தாம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். ஜெனியின் வீட்டிற்கு வந்து மீண்டும் மாலினி செழியன் பற்றி பேச அதனால் ஜெனி குழப்பம் அடைந்து தான் செழியனை பிரியும் முடிவில் உறுதியாக இருப்பதாக கோர்ட்டில் கூறுகிறார்.

அதே நேரத்தில் பாக்கியா ஜெனிக்கு சில வாய்ஸ் மெசேஜை whatsapp ல் அனுப்புகிறார். இதனால் ஜெனி பாக்யாவிடம் சில விஷயங்களை பேச அதை கேட்டு செழியன் அதிர்ச்சி அடைகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

Baakiyalakshmi Serial march 5th episode and promo full update

இந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பாக்யா சில வாட்ஸப் மெசேஜ்களை அனுப்பி கொண்டிருக்கிறார். அதில் விவாகரத்து விஷயத்தில் யார் என்ன சொன்னாலும் நீ யோசித்து பொறுமையா முடிவெடு. கோர்ட்டில் இன்னும் கொஞ்சம் நேரம் வேணும்னு சொல்லு என அட்வைஸ் செய்கிறார். அதோடு நீயும் நானும் அம்மா பொண்ணு மாதிரி இருந்தோம். ஃப்ரெண்ட்ஸ் மாதிரி இருந்தோம்.

ஆனா இன்னைக்கு பேசலாமா வேண்டாமானு யோசிக்கிற மாதிரி ஆகிடுச்சு என்று தன்னுடைய வருத்தத்தை ரெக்கார்ட் செய்து அனுப்பி கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் ஜெனியின் வீட்டிற்கு வர அதனால் ஜெனியின் அப்பா ஜோசப் ஜெனியை வந்து பார்க்கும்படி கூப்பிடுகிறார். முதலில் யாரென்று தெரியாமல் வர மறுக்கும் ஜெனி பிறகு அப்பாவின் கட்டாயத்தினால் வெளியே வந்து பார்க்க அங்கு மாலினி நிற்பதை பார்த்ததும் கோபத்தில் ரூமுக்குள் போகிறார்.

Baakiyalakshmi Serial march 5th episode and promo full update

ஆனால் மாலினி நான் சொல்ல வந்ததை சொல்லிட்டு போகிறேன் என்று தன் மீது தப்பில்லை என்பது போல செழியன் தான் தன்னை ஏமாற்றிவிட்டார். எனக்கு ஆரம்பத்திலேயே செழியனுக்கு திருமணம் முடிந்தது தெரியாது தெரிந்திருந்தால் விலகி இருப்பேன் இப்போ உங்க வாழ்க்கையும் போயிடுச்சு என் வாழ்க்கையும் போயிடுச்சு என்று நடிக்கிறார். இந்த நாள் கோபமான ஜெனி மீண்டும் தன்னுடைய ரூமிற்கு வந்து விடுகிறார்.

Baakiyalakshmi Serial march 5th episode and promo full update

அடுத்த கட்டத்தில் கோர்ட்டில் இந்த முறையும் கவுன்சிலிங் போட்டு இருக்கிறது என்று வக்கீல் சொல்ல அதனால் ஜெனியின் அப்பா ஜோசப் கோபப்படுகிறார். பிறகு ஜெனி கவுன்சிலிங்கில் நான் இவரை பிரிவதில் உறுதியாக இருக்கிறேன் என்று சொல்லிவிடுகிறார். ஆனால் செழியன் நான் தெரியாம தப்பு பண்ணிட்டேன். இனி அப்படி பண்ண மாட்டேன் என்று மன்னிப்பு கேட்டு நான் ஜெனியோடு வாழ வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கிறார்.

Baakiyalakshmi Serial march 5th episode and promo full update

இதனால் கோர்ட்டில் இன்னும் இரண்டு வாரம் டைம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி அனுப்புகிறார்கள். வெளியே வந்ததும் பாக்யா ஜெனி இடம் பேசுகிறார். அப்போது ஜெனி நீங்க அனுப்பின மெசேஜை நான் கேட்டேன். எனக்கு உங்களை எப்போதும் பிடிக்கும் ஆன்ட்டி. ஆனால் செழியன் பண்ண தப்பை என்னால மன்னிக்க முடியாது என்று சொல்ல ஜோசப் ஜெனியை அங்கிருந்து கூட்டிக்கொண்டு போய்விடுகிறார்.

Baakiyalakshmi Serial march 5th episode and promo full update

பிறகு பாக்கியாவும் செழியனும் காரில் வரும்போது நானும் இந்த பிரச்சனையை தீர்த்து வைத்து விடலாம் என எவ்வளவோ முயற்சி பண்ணுனேன். ஆனால் ஆரம்பிச்ச இடத்திலேயே நிற்கிறது என்று பாக்யா வருத்தப்படுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+