Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பட்டும் திருந்தாத கோபிக்கு இனியா வைத்த குட்டு.. பூமர் பாட்டிக்கு இது தேவைதான்.. எதிர்பாராத முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நவம்பர் 29ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.

அதில் கோபிக்கு பழனிச்சாமியோடு பாக்யாவை சேர்த்து தப்பாக பேசுவதற்கு எழில், செழியன் என எல்லோரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

Baakiyalakshmi Serial November 29th 2023 promo and episode full episode

அதே நேரத்தில் தனக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று நினைத்த இனியா மற்றும் ராதிகா சொன்ன வார்த்தையை கேட்டு கோபி அதிர்ச்சி அடைகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பாக்கியாவை வீட்டில் எல்லாரும் முன்னிலையிலும் கோபி பேசிக் கொண்டிருக்க, அந்த நேரத்தில் ராதிகாவும் இனியாவும் வீட்டிற்கு வருகின்றனர். அப்போது ராதிகாவை பார்த்ததும் கோபி வா ராதிகா நீயே வந்து நியாயத்தை கேளு. என்னை வீட்டை விட்டு போக சொல்லிட்டா. என்னை ஏமாற்றி தான் இந்த வீட்ட புடுங்கினாங்க. இந்த வீட்டை எவ்வளவு கஷ்டப்பட்டு கட்டுனேன் தெரியுமா?

அது மட்டுமல்ல நான் இந்த வீட்டுக்குள்ள வரும்போது பாக்யாவும் பழனிச்சாமியும் தனியா இருந்தாங்க என்று அவர்களைப் பற்றி தப்பாக பேச அதைக் கேட்டு இனியா கோபியை பார்த்து அப்பா நீங்க அம்மாவ பத்தி தப்பா சொன்னீங்கன்னா? நீங்க எப்படி அம்மாவை அப்படி சொல்லலாம் என்று கேட்க, அதற்கு ராமமூர்த்தி பாரு அந்த சின்ன பிள்ளைக்கு தெரிஞ்சது கூட உனக்கு தெரியலையே என்று கோபியை திட்டுகிறார்.

இதைத் தொடர்ந்து ஈஸ்வரி நான்தான் கோபியை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன். அதனால நீ எங்கேயும் போக வேண்டாம் என்று சொல்கிறார். அதோடு பழனிச்சாமி இங்கே இனி வர வேண்டாம் என்று பாக்கியாவிடம் சொல்ல, அதற்கு இனியா, செழியன், எழில், ராமமூர்த்தி என எல்லோரும் பாக்யாவுக்கு ஆதரவாக பேசுகின்றனர். இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ராதிகா எதுவுமே பேசாமல் ரூமிற்கு சென்று தனியாக அமர்ந்து கொள்கிறார்.

அதனால் அதிர்ச்சியான கோபி இவ என்ன என்னை தனியா விட்டுட்டு போயிட்டா என்று புலம்பிய படியே ரூமுக்கு போய் நீ ஏன் வந்துட்ட, வீட்டில் நடக்கிறதை பார்த்தாய் தானே? எனக்கு யாரு இருக்கா நீ தான் எனக்கு சப்போர்ட்டா வந்து பேசணும்? என்று சொல்கிறார். அதற்கு ராதிகா எனக்கு தலைவலி அதனால வந்துட்டேன் என்று சொல்ல விடாப்பிடியாக ராதிகாவை வெளியே கோபி கூட்டிட்டு வருகிறார்.

அதோடு எனக்காக பேசுவதற்கு ராதிகா இருக்கா என்று கோபி கெத்தா பேசிக் கொண்டிருக்க, அப்போது ராதிகா நான் பேசலாமா? நான் பேசறதால உங்களுக்கும் உங்க அம்மாவுக்கும் எந்த பிரச்சனையும் இல்லையா? என்று கேட்டபடி நீங்க என்னை என்ன சொல்லி கல்யாணம் பண்ணுனீங்க கோபி? நாம இந்த வீட்டில் இருக்கிறதே தப்பு. இதுல உங்களுக்கு நான் பஞ்சாயத்து பண்ணி கொடுக்கணுமா என்று திட்டுகிறார்.

இதை எதிர்பார்க்காத கோபி அதிர்ச்சி ஆகிறார். அதோடு ராதிகா நீங்க பிள்ளைங்க பிள்ளைங்க என்று சொல்றீங்க. ஆனா உங்க பிள்ளைங்க எல்லாரும் பாக்யா பக்கம் தான் இருக்காங்க. இப்ப நான் என்ன சொல்லணும் என்று எதிர்பார்க்கிறீங்க? என்று கேட்டு அத்தை நான் பேசினது சரியா என்று கேட்டுக்கொண்டு ரூமிற்கு செல்ல எல்லோரும் கோபியை பார்த்து சிரிக்கின்றனர். அதனால் கோபமான ஈஸ்வரி நல்ல ஆளா தான் நியாயம் கேட்க கூட்டிட்டு வந்திருக்க என்று சொல்ல கோபி எதுவும் சொல்ல முடியாமல் ரூமிற்கு போகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+