கோபியிடம் பேசிய கணேஷ்.. பாக்கியாவிற்கு உதவ வந்த பழனிச்சாமி.. இனி ராதிகா நிலைமை அவ்வளவுதானா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அக்டோபர் 31ஆம் தேதிக்கான எபிசோட் வெளியாகி இருக்கிறது.
அதில் கணேஷ் வீட்டிற்கே வந்து கோபியிடம் நிலாவின் அப்பா என்று சொல்ல அதைக் கேட்டு பாக்கியா அதிர்ச்சியடைகிறார்.

அதே நேரத்தில் செழியன் பற்றிய உண்மைகளை பாக்யா பழனிச்சாமியிடம் சொல்லி உதவி கேட்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் கோவிலில் அன்னதானம் நல்லபடியாக முடிந்ததும் நிர்வாகிகள் பாக்கியாவை அவரிடம் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு பழனிச்சாமி வர அவர் நான் தான் பாக்கியாவிற்க்கு ரெக்கமண்ட் செய்தேன் என்பதை சொல்ல வேண்டாமென்று சைகை காட்ட அதை புரிந்து கொள்ளாத நிர்வாகிகள் உண்மையை உளறி விடுகிறார்கள்.
அதைத் தொடர்ந்து பாக்கியா பழனிச்சாமிக்கு நன்றி சொல்லிவிட்டு டல்லாகவே இருப்பதை பார்த்து என்ன ஆச்சு என்று பழனிச்சாமி விசாரிக்கிறார். அப்போது செழியன் பிரச்சனை பற்றி பாக்கியா பேசுகிறார். அந்த பொண்ணு மாலினி கிட்ட செழியன் மாட்டிகிட்டு இருக்கிறதா சொல்லுறான். ஆனா எந்த தப்புமே நான் பண்ணல என்று சொல்லுறான் என்று பாக்யா பீல் பண்ண அதற்கு பழனிச்சாமி நீங்க செழியன் கிட்ட ஒரு முறை பேசுங்க என்று அட்வைஸ் பண்ணி அனுப்புகிறார்.
அதை தொடர்ந்து கோபி தனியாக இருக்கும்போது ராதிகா அந்த பக்கமாக வர கோபி எதுக்காக என்கூட இப்போ பேச மாட்டேங்குற என்று ரொமான்ஸாக பேச, அதற்கு ராதிகா போன முறை இந்த வீட்டில் இருந்து அவமானப்பட்டு தான் போனேன். இந்த முறை உங்க அம்மா என்னை எப்படி எல்லாம் பேசுனாங்க அதுக்காகத்தான் நான் வந்து இருக்கிறேன் என்று சொல்லி பேசிக் கொண்டிருக்கிறார்.
அந்த நேரத்தில் இனியா நிலா பாப்பாவை தூக்கிக் கொண்டு வர கோபி நிலாவே வைத்துக் கொண்டு கொஞ்சிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு எதார்த்தமாக பாக்கியா வருகிறார். பாக்யாவை பார்த்ததும் கோபி இனியா அப்படியே அப்பா மாதிரி. அவாகிட்ட எல்லா திறமையும் இருக்கு என்று ராதிகாவிடம் பெருமையாக சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அதற்கு பாக்கியா எதுவுமே சொல்லாமல் அந்த இடத்தை விட்டு போய்விடுகிறார். அதைத் தொடர்ந்து கோபி வீட்டு வாசலில் நின்று கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் கணேஷ் வீட்டுக்குள் வருகிறார் அதை பார்த்ததும் யார் என்று கோபி கேட்க அதற்கு நிலா பாப்பா அப்பா என்று சொல்ல, அதற்கு கோபி எழிலா அவன் வெளியே போய் இருக்கான். வாங்க வீட்டுக்குள்ள போகலாம் என்று கணேசை வீட்டுக்குள் கூட்டிட்டு வர அந்த நேரத்தில் வீட்டுக்குள் இருந்து வெளியே வரும் பாக்கியா கணேசனை கண்டதும் அதிர்ச்சி ஆகிறார்.
கூடவே எழில் இப்போ வீட்டில் இல்ல. அவன் வர லேட் ஆகும். நீ கிளம்பு என்று அனுப்பிவிட்டு வாசலில் சென்று தயவு செய்து இங்கே இருந்து போயிரு. நான் உங்க அம்மா அப்பா கிட்ட பேசுகிறேன். உனக்கு போன் பண்ணுறேன் என்று சொல்லி அனுப்புகிறார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் கோபி என்ன ஆச்சு என்று கேட்க, அதற்கு நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் பசங்க விஷயமா நாளைக்கு வாக்கிங் போவீங்க தானே அப்போ சொல்லவா? என்று கேட்க, அதற்கு கோபியும் சரி என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது பின்பக்கத்தில் ராதிகா வந்து இவர்கள் பேசுவதை கேட்டு முறைத்த வண்ணமாக நிற்கிறார்.
ராதிகாவை பார்த்ததும் பாக்கியா அங்கிருந்து கிளம்பி போய்விட அப்போது ராதிகா என்ன அவங்க பேச வந்தாங்க என்று கேட்க, அதற்கு கோபி தனக்கு தெரியாது ஏதோ பசங்க விஷயமா பேசணும்னு சொன்னா என்று சொல்கிறார். அதைத்தொடர்ந்து பாக்யா கணேஷ் அம்மாவிற்கு ஃபோன் செய்து நலம் விசாரித்தபடி பேசிக் கொண்டிருக்கிறார்.

அப்போது அவர்கள் நாங்க எங்க பையனுடைய வாழ்க்கையை தான் இனி பார்க்க முடியும். எவ்வளவோ சொல்லிட்டேன் ஆனா அவன் மனசு மாற மாட்டேன் என்கிறான். கணேஷ் அமிர்தாவோட வாழ்வது தப்பில்லையே என்று அவர்கள் கேட்க, அதை கேட்டு பாக்கியா அதிர்ச்சியாகி உங்ககிட்ட நான் நேரில் வந்து பேசுகிறேன் என்று போனை வைக்கிறார்.
அதை தொடர்ந்து பாக்கியா கிச்சனில் வேலை செய்து கொண்டிருக்கிறார். அப்போது ராதிகா வந்து கோபி கிட்ட என்ன பேசினீங்க என்று சண்டைக்கு நிற்கிறார். அப்போது பாக்கியா அது பசங்க விஷயம் உங்க கிட்ட சொல்ல முடியாது என்று சொல்ல, அந்த நேரத்தில் ராதிகா பாக்கியாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். எப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி சதி! உண்மைகளை உளறிய மனோஜ், ஜெயிலுக்கு போகும் விஜயா! மீனா செய்த செயல் -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம்












Click it and Unblock the Notifications