அதிர்ச்சி! பாக்கியலட்சுமி சீரியல் கம்பம் மீனாவுக்கு ஏற்பட்ட திடீர் விபத்து.. பரிதாப நிலையில் வைத்த வேண்டுகோள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் செல்வி கேரக்டரில் நடிகை கம்பம் மீனா நடித்து வருகிறார். இவர் இந்த சீரியலில் மட்டுமல்லாமல் பல சீரியல் நடித்து வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு விபத்து ஏற்பட்டு விட்டது என்பது பற்றி உருக்கமாக பதிவு வெளியிட்டிருக்கிறார்.
கம்பம் மீனா சில மாதங்களுக்கு முன்புதான் அவருடைய அக்கா மகன் இறந்து போய்விட்ட சோகத்தை ரசிகர்களிடம் பகிர்ந்து இருந்த நிலையில் இப்போது அவருடைய கை எலும்பு உடைந்து கட்டு போட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்ததும் ரசிகர்கள் கம்பம் மீனாவிற்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் அந்த கேரக்டர்களின் படியே பிரபலமடைந்து வருகின்றனர். அதில் கதாநாயகியாக பாக்கியா இருந்தாலும் கதாநாயகிக்கு துணையாக இருந்து வரும் செல்வி கேரக்டரும் அதிகமாக இப்போது ரசிகர்களிடம் பிரபலம் அடைந்து இருக்கிறார்.

ஆரம்பத்தில் இவர் பாக்கியலட்சுமி சீரியலில் அறிமுகமாகும் போது இவருடைய குரலை வைத்தும், இவருடைய உடல் மொழியை வைத்து பலர் கலாய்த்து வந்தனர். ஆனால் இப்போது அதிகமானோர் இவருடைய கேரக்டரை பாராட்டி வருகின்றனர். தன்னுடைய நடிப்பால் பலரையும் கவர்ந்திருக்கிறார் இவர் சீரியல் மட்டும் அல்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்
கம்பம் மீனா பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது திருமணம் செய்து வைத்து விட்டார்களாம். பிறகு இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி இருக்கிறார். பிறகு குடும்ப சூழ்நிலையால் இவர் எல்ஐசி ஏஜெண்டாக வேலை செய்து இருக்கிறார். அப்போதுதான் இவருக்கு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான தெக்கத்தி பொண்ணு எனும் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த சீரியலின் மூலமாக இவர் பிரபலமடைந்திருக்கிறார்.
அதற்குப் பிறகு தமிழில் 75க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதில் சிலம்பாட்டம், வெடிகுண்டு முருகேசன், மாயாண்டி குடும்பத்தார், முண்டாசுப்பட்டி, களவாணி, சகுனி போன்ற திரைப்படங்களும் இருக்கிறது. இந்த நிலையில் வெள்ளி திரையிலும் சின்ன திரையிலும் கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் நடித்து வரும் கம்பம் மீனா தன்னுடைய குடும்ப புகைப்படத்தையும் அடிக்கடி இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் இன்று தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் நடிகை கம்பம் மீனா தனக்கு விபத்து ஏற்பட்டு விட்டது. ஆனால் கெட்டதிலும் நல்லது என்று சொல்ற மாதிரிதான் உயிருக்கு எதுவும் ஆபத்து இல்லை என்று சொல்கிற மாதிரி கையில பெரிய கட்டு போட்டு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதோடு ரசிகர்கள் தொடர்ச்சியாக கம்பம் மீனாவிற்கு ஆறுதல் கூறி அவர் சீக்கிரமாக பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்று கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications