Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பயில்வான் மனநிலை சரியில்லாதவரா? வெங்கடேஷ் பட் போட்ட வீடியோ.. பிரச்சனைக்கு காரணம் இதுவா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான வெங்கடேஷ் பட் நேற்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயில்வான் ரங்கநாதன் பற்றி ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் தன்னை பயில்வான் ரங்கநாதன் விமர்சித்த போது அவரை தன்னுடைய ரசிகர்கள் சிலர் திட்டி வரும் நிலையில் பயில்வான் ரங்கநாதன் மனநிலை சரியில்லாதவரா? அல்லது பணத்திற்காக இப்படி பேசுகிறாரா? என்று தெரியவில்லை, அவரை யாரும் திட்ட வேண்டாம் என்று அந்த வீடியோவில் வெங்கடேஷ் பட் கூறி இருக்கிறார்.

பயில்வான் ரங்கநாதன் சினிமா பிரமுகராக இருந்தாலும் தான் பத்திரிக்கையாளர் என்ற அடையாளத்தோடு சினிமா நடிகைகள், நடிகர்கள் பற்றியும் அவர்களுடைய அந்தரங்க வாழ்க்கையைப் பற்றியும் பல தகவல்களை youtube சேனல்களில் பேசி வருகிறார். இதற்கு நடிகர்கள், நடிகைகள் கண்டனங்கள் தெரிவித்து வருகிறார்கள். ஆனாலும் தொடர்ச்சியாக பயில்வான் வீடியோக்களில் ட்ரெண்டில் இருக்கும் நடிகைகள் மற்றும் நடிகர்கள் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்.

television venkatesh bhatt bailwan ranganathan

அதுபோல தான் சில மாதங்களுக்கு முன்பு வெங்கடேஷ் பட் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகி டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் இணைந்தது குறித்து பேசி இருக்கிறார். வெங்கடேஷ் பட் கடந்த நான்கு சீசன்களாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார். ஆனால் ஐந்தாவது சீசன் தொடங்கப்படுவதற்கு முன்பே தான் அதிலிருந்து விலகி விட்டதாக அறிவித்திருந்தார்.

அதற்கு காரணம் தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்தியது மீடியா மேஸன்ஸ் நிறுவனம் தான். அந்த நிறுவனம் விஜய் டிவியில் இருந்து விலகி விட்டது அந்த நிறுவனம் எங்கு இருக்கிறதோ அங்கு நான் இருப்பேன் அவர்களுக்கு நான் கொடுக்கும் மரியாதை, விசுவாசம் என்று விளக்கம் கொடுத்திருந்தார். ஆனால் வெங்கடேஷ் பட் கோடிக்கணக்கில் சம்பளம் கேட்டதாகவும் அதற்கு விஜய் டிவி மறுத்துவிட்டதால் தான் வெங்கடேஷ் பட் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டார் என்று பேட்டி ஒன்றில் பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கிறார்.

இந்த வீடியோவிற்கு கீழே வெங்கடேஷ் பட்டின் ரசிகர்கள் பயில்வான் ரங்கநாதனை திட்டி வருகிறார்கள். அதற்கு வெங்கடேஷ் பட் நேற்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் பொது வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம். பயில்வான் ரங்கநாதன் எதற்காக இப்படி எல்லாம் பேசுகிறார் என்று எனக்கு தெரியவில்லை. அவருக்கு மனநிலை சரியில்லாமல் போய்விட்டதா? அல்லது பணத்துக்காக இப்படி பேசுகிறாரா? என்று புரியவில்லை.

எது எப்படியோ நம்மைப் பற்றி ஒருவர் தவறாக பேசி விட்டார் என்றால் அவரைப் பற்றி நாமும் அதேபோல தவறாக பேச வேண்டும் என்று அவசியமில்லை. அதனால் என்னுடைய ரசிகர்கள் தயவு செய்து அவரைப் போலவே நீங்களும் தவறாக பேச வேண்டாம். சாக்கடையில் கல்லை தூக்கி எறிந்தால் அது நம் மீதும் விழ தான் செய்யும். நடக்காதது, இல்லாததை பற்றி தான் அவர் பேசிக் கொண்டிருக்கிறார். அதனால் அதற்காக நாம் ரியாக்ட் செய்து கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.

நாம் நம்முடைய வேலையை பார்த்து போய்விட்டால் இப்படிப்பட்டவர்கள் அடுத்தவர்களைப் பற்றி பேசுவதை குறைத்து விடுவார்கள் என்று அந்த வீடியோவில் வெங்கடேஷ் பட் பேசியிருக்கிறார். இது இணையத்தில் அதிகமான கமெண்ட்களை பெற்று வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+