Barathi Kannamma Serial: பாரதி வாழக்கையில் இப்படி விளையாடறாங்களே...!
சென்னை: விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் மூணு பெண்கள் விளையாடறாங்களே... என்னத்த சொல்ல?
கட்டின பொண்டாட்டி கருப்பு கண்ணம்மா உண்மை நிலை புரியாமல் அவனுக்கு விளையாட்டு காட்டுகிறாள். கண்ணம்மாவின் தங்கச்சி அஞ்சலி பாரதி, கண்ணம்மாவோடு சந்தோஷமாக இருக்க கூடாதுன்னு விளையாட்டு காட்டறா.
கூட படிச்ச வெண்பா பாரதியைத் தான் அடையணும்னு பாரதிக்கு விளையாட்டு காட்டறதோடு, கண்ணம்மாவுக்கு சேர்த்து கண்ணாமூச்சு விளையாட்டு காண்பிக்கறா.
பாரதி விரும்பி
கருப்பு கண்ணம்மாவை பாரதியின் அம்மாவே வெறுக்க பாரதி அவங்களை எதிர்த்து கண்ணம்மாவை கல்யாணம் செய்துக்கறான் பாரதி. அதற்கு முன்பே தனக்கு குழந்தை பிறக்காது என்கிற உண்மையையும், தாம்பத்ய வாழ்வில் எந்த குறையும் இருக்காது என்கிற உண்மையையும் கண்ணம்மாவின் அப்பாவிடம் சொல்லி சொல்ல சொல்றான். அவர் சொல்லாமல் விட்டுவிடுகிறார்.
குழந்தை பிறக்கும்
நமக்கு குழந்தை பிறந்தால் என்னை அப்படி பார்த்துக்கோங்க.. இப்படி பார்த்துக்கோங்க பாரதி மாமான்னு கண்ணம்மா சொல்லும்போது எல்லாம் பாரதிக்கு நெஞ்சு வலிக்கிறது. போதா குறைக்கு கர்ப்பிணி விளையாட்டு வேற விளையாடுகிறாள். வயிற்றில் துணி மூட்டையைக் கட்டிக்கொண்டு. பாரதி குற்ற உணர்ச்சியில் தவிச்சு போகிறான்.
பாரதி அஞ்சலி
கண்ணம்மாவின் தங்கை அஞ்சலியை பாரதியின் தம்பிக்கு பெண் பார்க்கப் போகையில் அவளுக்கு தம்பி அகிலனைப் பிடிக்காமல் பாரதியைப் பிடித்துப் போகிறது. அன்றிலிருந்து பாரதி கண்ணம்மா ரெண்டு பேரும் சந்தோஷமாக இருக்கக் கூடாது என்று அவளும் தன் பங்குக்கு பாரதியிடம் விளையாட்டு காண்பிக்கிறாள்.
பாரதி வெண்பா
மெடிக்கல் காலேஜில் உடன் படித்த வெண்பா பாரதியை காதலிச்சது பாரதிக்குத் தெரியாது . அவன் வேறு பெண்ணை காதலிக்க அவளை சாகடிக்க நினைச்ச வெண்பா கார் விபத்தை ஏற்படுத்துகிறான். அதில் பாரதிக்கும் அடிபட்டுவிட, நன்றாக இருக்கும் அவனுக்கு குழந்தை பிறக்காது என்று சொல்லிவிடுகிறாள். அப்போதுதான் அவன் வெண்பாவுக்காக காத்து இருப்பானாம்.
ஏன் இப்படி?
பாரதிக்கு குழந்தை பிறக்கும் என்று வெண்பாவுக்கு தெரியும். பிறக்காது என்று பாரதி நினைச்சுகிட்டு இருக்கான். ரெண்டு பேரும் சேர கூடாது என்று அஞ்சலி நினைக்கிறாள். பாரதியை அடையணும்னு வெண்பா நினைக்கிறாள். இப்படி போகுது பாரதியின் இல் வாழ்க்கை.