கண்ணம்மா கொடுக்கும் வார்னிங்..ஊர்காரர்களின் பதில்..பாரதியின் இறுதி முடிவு..எதிர்பாராத சீரியல் முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

கண்ணம்மாவை ஊருக்கு கூட்டி சென்று விட வேண்டும் என வந்த பாரதி இப்போது இந்த ஊருக்கு மருத்துவமனை வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறார்.

பாரதியிடம் லட்சுமி உண்ணாவிரதம் இருக்க வேண்டாம் சாப்பிட்டு விடுங்கள் என்று கெஞ்சி கொண்டிருக்கிறார்.

பாரதியின் தன்னம்பிக்கை

பாரதியின் தன்னம்பிக்கை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோட்டில் ஆரம்பத்தில் பாரதி கண்ணம்மாவிடம் சென்று இந்த ஊருக்கு ஹாஸ்பிடல் வரும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன். உண்ணாவிரதம் முடிந்த பிறகு நான் சாப்பிடும் சாப்பாடு உன் கையால் செய்ததாக இருந்தால் ரொம்ப சந்தோஷப்படுவேன் என பேச்சு கொடுக்க கண்ணம்மா பதில் எதுவும் சொல்லாமல் கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருக்கிறார். இந்த ஊர்காரர்கள் இப்போது நான் இங்கே இருக்க வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது இந்த ஊருக்கு மருத்துவமனை வந்து அவர்களே இங்கே இருங்கள் என்று என்னை சொல்வார்கள் என்று பாரதி கூறிக் கொண்டிருக்க கண்ணம்மா எதுவும் பேசாமல் இருக்கும்போது பாரதி அங்கிருந்து திரும்பி விடுகிறார்.

லட்சுமியின் வேண்டுகோள்

லட்சுமியின் வேண்டுகோள்

அடுத்ததாக உண்ணாவிரதத்தை பற்றி தெரிந்து கொண்ட லட்சுமி அங்கிருந்த அழகு சுந்தரம் தாத்தாவிடம் போன் வாங்கி அதில் பாரதியிடம் நீங்க இப்படி பட்டினியா இருந்தா உங்க உடம்புக்கு ஏதாவது ஆகிடும் இப்படி எல்லாம் பண்றீங்க, என கேட்க பாரதி எனக்கு ஒன்றும் ஆகாது நீ கவலைப்படாத நான் ரொம்பவே ஸ்ட்ராங்காக இருக்கிறேன் என்று சொல்ல, நீங்க மட்டும் சொல்லுவீங்களா, நேரத்துக்கு சாப்பிட்டால் தான் நல்லா இருக்க முடியும் என்று வயிற்றில் புண்ணு வந்துவிடும் அதனால் சாப்பிட்டு விடுங்கள் டாடி என்று கெஞ்ச பாரதி லட்சுமிக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருக்கும்போது கண்ணம்மா வந்து விட போனை கட் செய்து விடுகிறார்.

வெறுப்பேத்தும் கண்ணம்மா

வெறுப்பேத்தும் கண்ணம்மா

இரவு பாரதியும் கணபதியும் கட்டிலில் அமர்ந்திருக்கும் போது கண்ணம்மா ஹோட்டலில் இருந்து பிரியாணி வாங்கி வந்து நிலா சோறு சாப்பிடலாம் என குழந்தைகள் மற்றும் தாமரையை வெளியே உட்கார வைத்து பிரியாணி சாப்பிட்டு வெறுப்பேற்றுகிறார். பாரதி சாப்பிடாமல் இருப்பதை பார்த்து லட்சுமி எனக்கு சாப்பாடு வேண்டாம் என பாதியில் எனக்கு வயிறு சரியில்லை என சொல்லி எழுந்து விடுகிறார். இவர்கள் சாப்பிடுவதை பார்த்து கணபதி பசியால் துடித்துக் கொண்டிருக்க பாரதி சிரித்தபடியே இருக்கிறார்.

ஊர்க்காரர்களிடம் அசிங்கப்படும் பாரதி

ஊர்க்காரர்களிடம் அசிங்கப்படும் பாரதி

அடுத்ததாக காலையில் ஊர் பெரியவர்கள் நீங்க இன்னும் போகலையா? என கேட்க, பாரதி நான் போக மாட்டேன் என்னை போக சொல்ல உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. நான் முறைப்படி யாரு இடம் அனுமதி வாங்க வேண்டுமோ, அவர்களிடம் வாங்கிக் கொண்டுதான் இந்த ஊருக்குள்ள வந்து இருக்கேன் என சொல்கிறார். கணபதி இடம் நீயாவது எடுத்து சொல்லலாம் என கேட்க, அவர் வாய் திறக்காமல் இருக்கும் போது அனைவரும் வாயை திறந்து பேசு என சொல்ல வாயிலிருந்து பன் வந்து விழுகிறது. இதனால் ஊர் மக்கள் பொய்யாக உண்ணாவிரதம் இருப்பதாக நினைத்து இருவரையும் திட்டி செல்கின்றனர்.

கணபதி கூறிய உண்மை

கணபதி கூறிய உண்மை

கணபதியின் செயலை பார்த்து பாரதி கணபதியை தீட்டியதால் கணபதி அந்த இடத்தை விட்டு விலகி தனியாக போய் இருக்கிறார். அப்போது அங்கே வரும் கண்ணம்மா கணபதியிடம் இப்படி எல்லாம் பண்றது நல்லா இல்லை. ஒழுங்கா ஊரு போய் பிழைக்கிற வேலையை பாருங்க என எச்சரிக்கிறார். அதற்கு சத்தியமா பாரதி இன்னும் பச்ச தண்ணி கூட குடிக்கல என்ற உண்மையை கூறுகிறார். பிறகு பாரதியிடம் கணபதி நான் ஊரு பக்கம் போறேன் என சொல்ல பாரதி அவரை தடுத்து நிறுத்தி கூடவே இருக்குமாறு கூறுகிறார். அழைத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+