பிக்பாஸில் உண்மையான ஜென்டில்மேன்...மனம் திறந்த பாவனி.. வாழ்த்தும் ரசிகர்கள்
சென்னை: நடந்து முடிந்த பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் உண்மையான ஜென்டில்மேன் இவர்தான் என்று தன்னுடைய மனதில் இருப்பதை வெளிப்படையாக கூறியுள்ளார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் நடந்த பல நிகழ்வுகளில் இவருடைய உண்மையான முகம் வெளிப்பட்டு இருக்கிறது என்று பாராட்டித் தள்ளியுள்ளார்.

மனம் திறந்த பாவனி
சமீபத்தில்தான் விஜய் டிவியில் பிக்பாஸ் 5வது சீசன் நிகழ்ச்சி முடிவடைந்து இருந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவரும் வெளியே வந்ததும் தங்களுடைய அன்றாட வேலைகளை துவங்க ஆரம்பித்துவிட்டனர். ஒரு சில ரசிகர்கள் உள்ளே நடந்த பல நிகழ்வுகள் பற்றி சமூக வலைத்தளத்தில் இப்ப வரைக்கும் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் இதில் கலந்துகொண்ட போட்டியாளர்களும் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் கூறி வருகின்றனர். அந்த வகையில் பாவனி பிக் பாஸ் வீட்டில் நடந்த பல நிகழ்வுகளைப் பற்றி வெளிப்படையாக கூறியுள்ளார்.

ரசிகர்களின் அபரிமிதமான அன்பு
சீரியலில் கதாநாயகியாக நடித்து தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பலருக்கும் பரிச்சயமான பாவனி சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பே சமூக வலைத்தளத்தில் போட்டோ சூட் மூலம் பிஸியாக இருந்தார். தற்போது மீண்டும் தன்னுடைய பழைய இடத்திற்கு வந்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் 3-வது இடத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவருடைய வெற்றிக்கு காரணமாக அபரிமிதமான ரசிகர்களின் அன்பு தான். இவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என்று தெரிந்ததும் இவருடைய ரசிகர்கள் இவருக்கு ஆர்மி அமைத்து ஆதரவு கொடுத்த தொடங்கிவிட்டனர்.

திருப்புமுனை தந்த நிகழ்ச்சி
பிக்பாஸ் வீட்டிற்குள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தாலும் மனம் தளராமல் தன்னுடைய விளையாட்டில் கவனமாகவும் சிறப்பாகவும் இருந்து வந்த பாவனி, வெளியே வந்த பிறகும் அந்த வீட்டிற்குள் நடந்தது தன்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவு என்றும், தனக்கு ஒரு திருப்புமுனையாக இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது என்றும் கூறியுள்ளார். தன்னுடைய ரசிகர்கள் தன் மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்களா?? என்று புரிந்து கொள்வதற்கு இந்த நிகழ்ச்சி தனக்கு உதவியதாகவும் கூறியிருக்கிறார்.

அவர்தான் அந்த ஜென்டில்மேன்
பிக் பாஸ் வீட்டிற்குள் ஜென்டில்மேன் என்றால் அது சஞ்சீவ் மற்றும் இமான் அண்ணாச்சி தான் என்று கூறியிருக்கிறார். சஞ்சீவ் எல்லா நேரங்களிலும் நியாயமாகவும், பொறுப்பாகவும் நடந்து இருந்தார். அவருடைய விளையாட்டு ரொம்பவும் நேர்மையாக இருந்தது என்று புகழ்ந்து தள்ளியுள்ளார். அதுபோல இமான் அண்ணாச்சி என்னதான் விளையாட்டில் கவனமாக இருந்தாலும் ஒரு சில நேரங்களில் மனக்கசப்பு ஏற்பட்டால் கூட அனைவரிடமும் சாப்பிட்டாச்சா?? என்று பாசத்தோடும் உண்மையாகவும் கேட்டு ஒரு நல்ல கேரக்டராக தான் இந்த வீட்டிற்குள் இருந்தார் என்று தன்னுடைய மனதில் இருக்கும் கருத்துக்களை உதிர்த்து இருக்கிறார்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications