பிக் பாஸ் சீசன் 5 தமிழ்ல அந்த கேஷ் பாக்ஸ் எடுத்துட்டு போகப் போவது இவர்தான்..அதிர்ச்சியில் ரசிகர்கள்
சென்னை: பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் 5 லட்சத்தை எடுத்துக் கொண்டு செல்லும் போட்டியாளர் யார் என்று ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
5 லட்சத்திற்கு போட்டி போட்டுக்கொண்டிருக்கும் போட்டியாளரை பார்த்ததும் இவரா? ?என்று ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ரசிகர்களே திணறுகின்றனர்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் தற்போது முடிவடையும் தருணத்தில் கடைசி கட்டத்தில் நெருங்கி விட்டதால் இந்த சீசனில் யார் வெற்றி பெறுவார்கள். யார் இரண்டாவது வருவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்த சீசனில் எந்த சீசனிலும் இல்லாத வகையில் இவர் தான் வெற்றி பெறுவார் என்று யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாத வகையில் தான் ஒவ்வொரு நாளும் விளையாட்டு போய்க்கொண்டிருக்கிறது. கடந்த சீசனில் ரசிகர்கள் ஆரிதான் ஜெயிப்பார் என்று அடித்துக் கூறி வந்தனர். ஆனால் அப்படி இப்போது கூறும் முடியவில்லை என்று பலர் திணறி வருகின்றனர்.

தொடரும் கருத்துக்கணிப்புகள்
ரசிகர்களின் கருத்தை தான் சஞ்சீவ் மனைவி பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும்போது ஏற்கனவே கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது போட்டியாளர்கள் யார் ஜெயிப்பார்கள் என்று கருத்துக்கள் தோன்றிக் கொண்டிருக்கிறது. இதனால் அடுத்த வாரம் கிடைக்கும் ஐந்து லட்சம் இருக்கும் கேஸ் பேக்கை யார் தூக்கிக் கொண்டு வெளியேறப் போகிறது என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் ஏற்கனவே சஞ்சீவ் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது அவர் கருத்து கணிப்பை தொடங்கியிருந்தார். அதுபோல தற்போது ரசிகர்களும் தொடங்கி இருக்கிறார்கள்.

அடிக்கடி மாறும் மாற்றங்கள்
பிக் பாஸ் 5 வது சீசனில் ஆரம்பத்திலிருந்து ராஜு மற்றும் பிரியங்காவிற்கு அதிகமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இவர்களைத் தொடர்ந்து பாவனிக்கும், தாமரைக்கும் ரசிகர்கள் அதிகமாகத்தான் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்களில் யார் டைட்டில் ஜெயிப்பது என்று யாராலும் எதிர்பார்க்க முடியாத வகையில் இருந்தாலும் ரசிகர்கள் பலர் ராஜூ தான் ஜெயிப்பார் என்று கூறப்பட்டு வருகின்றனர். அடுத்ததாக பிரியங்கா வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5 லட்சத்தோடு கிளம்பும் போட்டியாளர்
மூன்றாவது நான்காவது இடங்களில் இருக்கும் தாமரை மற்றும் பாவனி இருவரும் இந்த கேஸ் பேக்கை பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பிருக்கிறது என்று ரசிகர்கள் கூறிக் கொண்டிருந்தாலும், நிரூப் இந்த வார எலிமினேஷனில் இருந்து தப்பித்துக் கொண்டால் அவரும் இந்த பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேற வாய்ப்புள்ளது என்று கூறி வருகின்றனர். அதிகமான வாய்ப்புகள் நிரூப் மற்றும் தாமரை இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதற்கு வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது என்று ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications