உலகத்தின் பார்வையில் மறைத்த முகத்தை கண்டுபிடித்த போட்டியாளர்கள்...இன்று சம்பவம் இருக்கு
சென்னை: பிக்பாஸ் கொடுத்திருக்கும் டாஸ்க்கில் போட்டியாளர்களுக்கும் இன்று பஞ்சாயத்து தொடங்க போகிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
மீண்டும் வாயால் வடை சுடும் டாஸ்க்கா?? என்று ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

ஏற்ற இறக்கத்தோடு இருக்கும் சீசன்
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இது வரைக்கும் எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த சீசனில் அதிகமான போட்டியாளர்கள் அறிமுகமாகி இருந்தனர். ஆனால் தற்போது போட்டியாளர்கள் 6 பேர் தான் இருக்கின்றனர். இவர்களில் யார் ஜெயிக்கிறார்கள் என்று ஆர்வம் அதிகமாக ரசிகர்களிடம் இருந்து வருகிறது. இதற்கு முந்தைய சீசன்களில் இவர்தான் ஜெயிப்பார் என்று ஆரம்பத்திலிருந்தே குறிப்பிட்டு ஒரு போட்டியாளரை ரசிகர்கள் கூறி வந்தனர். ஆனால் இந்த சீசனில் அப்படி யாரையும் குறிப்பிட்டு கூற முடியவில்லை. ஒவ்வொருநாளும் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டு வருகிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ரசிகர்கள் எதிர்பார்க்கும் டாஸ்க்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதற்கு முந்தைய சீசன்களை விட இந்த சீசன் பல நேரங்களில் சுவாரஸ்யம் குறைவாகி விட்டது என்று ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இதற்கு காரணம் எந்த சீசனிலும் இல்லாத இந்த சீசனில் பல டாஸ்க்குகள் வாயால் வடை சுடுவதாக இருக்கிறது என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். பிசிகல் டாஸ்க் இருந்தால்தான் நிகழ்ச்சிக்கு சுவாரசியம் இருக்கும் என்று பலர் கருத்து தெரிவித்து கொண்டிருக்கின்றனர். எப்படியோ நிகழ்ச்சி முடிவடையும் கடைசி வாரத்தில் இருக்கும் நிலையில் தற்போது கூட பிக் பாஸ் அப்படித்தான் ஒரு டாஸ்க் வைத்துள்ளது.

ரசிகர்களின் கருத்து கணிப்பு
ஏற்கனவே அமீர் இந்த சீசனின் இறுதிப் போட்டிக்கு செல்லும் முதல் போட்டியாளராக நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து இந்த வாரத்தில் இரண்டாவது போட்டியாளர் யாரென்று தேர்ந்தெடுக்கும் பொறுப்பை போட்டியாளர்களிடம் பிக்பாஸ் ஒப்படைத்துள்ளது. இதைப்பார்த்து நெட்டிசன்கள் வகைவகையாக கலாய்த்து வருகின்றனர். சும்மாவே சிம்பத்தி காரணமாக ஒவ்வொரு டாஸ்க்கிலும் ஜெயித்து வரும் தாமரைச்செல்வி தான் இந்த டாஸ்க்கில் ஜெயிக்க போகிறார் என்று ஒரு சில ரசிகர்கள் அடித்துக் கூறி வருகின்றனர். ஒரு சிலர் பலருக்கும் பிடித்து இருக்கும் ராஜு இதை தட்டி செல்ல வாய்ப்புள்ளது என்று கூறி வருகின்றனர்.

கருத்து போட்டி போடும் ரசிகர்கள்
ஏற்கனவே ராஜுவை டைட்டில் ஜெயிக்க வைக்க ஒரு கூட்டம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் அது நடந்தால் நிகழ்ச்சிக்கு சுவாரசியம் குறைந்துவிடும் என்று இன்னொரு தரப்பு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.பாவனி நேரடியாக இரண்டாவது இடத்திற்கு வந்தால் விளையாட்டுக்கு விறுவிறுப்பு ஏற்படும் என்று அவருடைய தீவிரமான விசிறிகள் கொளுத்திப் போட்டு வருகின்றனர். எப்போதுமே ஜாலியாக அனைவரை வைத்துக் கொண்டிருக்கும் பிரியங்கா மட்டும் சளைத்தவரல்ல, அவருக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று பிரியங்காவின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தை அலறவிட்டு வருகிறனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications