Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிக் பாஸ்ல சௌந்தர்யா செய்தது ரொம்ப தப்பு.. எப்படி இப்படி பண்ணலாம்? தீபக் மனைவி ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த தீபக்கின் மனைவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது, பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது சௌந்தர்யா தீபக்கை தொட்டது தவறு என்று பேசி இருக்கிறார்.

பெரிய எதிர்பார்ப்போடு கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி ஜனவரி மாதத்தில் தான் முடிவுக்கு வந்தது. இந்த நிகழ்ச்சியில் இதுவரைக்கும் இல்லாத வகையில் அதிகமான விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஆரம்பத்தில் 18 போட்டியாளர்களும் அதை தொடர்ந்து 6 வைல்டு கார்டு போட்டியாளர்களும் அந்த நிகழ்ச்சியில் இருந்தனர்.

bigg boss tamil vijay tv bigg boss tamil 8 8

கடைசியில் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக முத்துக்குமரன் தேர்வு செய்யப்பட்டார். இரண்டாவது இடத்தில் சௌந்தர்யா தேர்வாகி இருந்தார். இதுவரைக்கும் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சிகளை விடவும் இந்த சீசன் ஸ்பெஷலாக இருந்தது. இதுவரைக்கும் ஏழு சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி இருந்தார். ஆனால் எட்டாவது சீசன் தொடங்கப்படுவதற்கு முன்பே தான் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி ரெஸ்ட் எடுக்க போவதாக அறிவித்து இருந்தார்.

அதனால் அடுத்து யார் வர போகிறார்கள் என்று எதிர்பார்ப்போடு இருந்த நிலையில் ரசிகர்கள் கருத்துப்படி விஜய் சேதுபதி அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதுபோல விஜய் சேதுபதி மக்கள் நினைத்த பல விஷயங்களை போட்டியாளர்களிடம் ஒவ்வொரு வாரமும் பேசுவதால் வார இறுதி நாட்கள் அதிகமாக எதிர்பார்க்கப்பட்டது.

அதுபோல இந்த சீசனில் சௌந்தர்யாவிற்கு அதிகமான ரசிகர்கள் உருவாகி இருந்தனர். ஆனால் அது ரசிகர்கள் கிடையாது பி ஆர் சப்போர்ட் தான் என்று சிலர் குற்றச்சாட்டு வைத்தனர். பிக் பாஸ் போட்டியாளர்கள் கூட சௌந்தர்யாவிடமும் விஜய் சேதுபதியிடம் இதே கருத்தை கூறியிருந்தனர். ஆனாலும் சௌந்தர்யா பைனல் நிகழ்ச்சியின் போது தனக்கு டைட்டில் கொடுக்கவில்லை என்றாலும் முத்துக்குமரனுக்கு கொடுத்தது குறித்து பெருந்தன்மையாக பேசியது பலராலும் பாராட்டப்பட்டது.

அதே நேரத்தில் இந்த சீசனில் டைட்டில் வின்னராக தீபக் வருவார் என்று பெரிய அளவில் எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் அவர் நிகழ்ச்சி முடிவடைவதற்கு இரண்டு வாரத்திற்கு முன்பு அதிரடியாக வெளியேற்றப்பட்டார். அது அந்த நேரத்தில் பெரிதாக பேசப்பட்டது. எப்படியோ நிகழ்ச்சி முடிவடைந்து.

இந்த நிலையில் இந்த சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கு பேன்ஸ் மீட்டிங் நடைபெற்று வருகிறது. அதில் தீபக் அவருடைய மனைவியோடு கலந்து கொண்டிருக்கிறார். அப்போது தீபக் மனைவி பேசியது தான் இணையத்தில் அதிகமாக கமாண்டுகள் பெற்று வருகிறது.

அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது சௌந்தர்யா சக போட்டியாளர்களோடு விளையாடிக் கொண்டிருக்கும்போது பிங்க் என்ற நிறத்தை தொடுவதற்காக அங்கு அமர்ந்திருந்த தீபக் போட்டு இருந்த சட்டையை ஓடி சென்று தொட்டு இருந்தார். அது ரொம்ப தவறு என்று அந்த நேரத்தில் தீபக் பேசியிருந்தார். ஒரு ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி அவர்களிடம் அனுமதி கேட்காமல் எப்படி அடுத்தவங்க தொடலாம் என்று தீபக் பேசியது பெரிய அளவில் பேசப்பட்டது. அதற்கு சௌந்தர்யா மன்னிப்பும் கேட்டு இருந்தார்.

இந்த நிலையில் இப்போது நிகழ்ச்சியே முடிவடைந்துவிட்டது. அதற்கு பிறகும் சவுந்தர்யா பிக் பாஸ் நிகழ்ச்சியில் தீபக் அனுமதி இல்லாமல் அவரை தொட்டது தப்பு என்று தீபக் மனைவி பேசி இருக்கிறார். இதற்கு சௌந்தர்யாவின் ரசிகர்கள் அப்படி பார்த்தால் அந்த சம்பவம் நடைபெறும் போது தீபக் சவுந்தர்யா மீது கோபப்படுவதற்கு முக்கிய காரணமே விஷால்தான், வி.ஜே விஷால் அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பில் இருந்து சௌந்தர்யாவின் நடவடிக்கைகள் குறித்து தவறாக பேசிக்கொண்டே இருந்தார். அதனால் தான் தீபக் கூட ஒரு பெண் ஆணை அனுமதி கேட்காமல் தொடுவதும் தப்பு என்று பேசி இருந்தார்.

ஆனால் தீபக் முன்பு விஷால் சௌந்தர்யா ஆண்களிடம் பேசுவது, பழகுவது, அவர்களை தொடுவது குறித்து தவறாக பேசிக் கொண்டிருந்தாரே அப்போது தீபக் ஏன் அமைதியாக இருந்தார் என்று அவருடைய மனைவி கேள்வி கேட்கவில்லையே? அப்போ ஒரு பெண்ணை பற்றி மட்டும் ஆண் தவறாக பேசலாமா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+