Bigg Boss 9 Finale: பார்வதி என்ட்ரி.. பிக் பாஸ் 9 ஃபினாலே சூட்டிங் நிறுத்தம்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே தற்போது பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. ஆனால் வெற்றியாளர் யார் என்பதைக் காட்டிலும், ஃபினாலே மேடைக்கு பின்னால் நடக்கும் "ஆஃப்-ஸ்கிரீன் டிராமா" தான் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகிறது. அந்த லிஸ்டில் லேட்டஸ்ட் ஹாட் டாபிக் - ரெட் கார்டு வாங்கி வெளியேறிய பார்வதியின் மர்மமான ரீ-என்ட்ரி!
பிக் பாஸ் அரங்கில் இருந்து கிடைத்த தகவல்படி, ஃபினாலே ஷூட்டிங் மதியம் 4 மணிக்கே தொடங்கியிருக்கிறது. ஆனால் அதே நேரத்தில், "பார்வதி உள்ளே வர்றாரா?" என்ற கேள்விக்கு, உள்ளே இருந்தவர்களுக்கே தெளிவான பதில் இல்லை. காரணம், பார்வதி சுமார் 6 மணி வரைக்கும் ஷூட்டிங்கில் கலந்து கொள்ளாமல், தனியாக காரில் கருப்பு நிற உடையில் அமர்ந்திருந்ததாக சொல்லப்படுகிறது.

இதை பார்க்கும் போது, "இது பிக் பாஸ் வீடா... இல்ல ஏர்போர்ட் பிக்கப் & ட்ராப் கவுண்டரா? உள்ளே போக டைம் ஆகுது, கார்ல வெயிட் பண்ண சொல்லுறாங்க!" என்று சிலர் கலாய்த்து வந்தனர்.
பின்னர் திடீரென பார்வதி உள்ளே சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அவர் ஃபினாலே மேடையில் நீண்ட நேரம் இருப்பாரா என்றால், அதற்கு 'இல்ல' என்ற பதில்தான் அதிகமாக கேட்கிறது. "கொஞ்ச நேரம் வந்துட்டு, காட்சி காட்டிட்டு, கிளம்பிடுவார்" என்றே கூறப்படுகிறது.
இதற்கு பின்னணி என்னன்னா, ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட பிறகு, பார்வதி விஜய் டிவி மற்றும் பிக் பாஸ் நிர்வாகத்தை மறைமுகமாக விமர்சிக்கும் பல பதிவுகளை சமூக வலைதளங்களில் போட்டு வந்தார். நேரடியாக வீடியோ போட்டு குற்றச்சாட்டு வைக்கவில்லை என்றாலும், "எனக்கு அநியாயம் நடந்துடுச்சு" என்ற பாணியில் அவர் போட்ட பதிவுகள் பெரும் பேசுபொருளானது.
அதனால்தான், "இவரை மீண்டும் விஜய் டிவி உள்ளே கூப்பிடவே மாட்டாங்க" என்று சொன்னவர்களே அதிகம். ஆனால் பிக் பாஸ் என்றாலே ட்விஸ்ட் இல்லாம இருக்குமா? பார்வதி மற்றும் கம்ருதீன் இருவரும் பிக் பாஸ் டீமுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகே, இந்த ஃபினாலே ரீ-என்ட்ரி முடிவு எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதாவது, "ரெட் கார்டு - ஃபைனல் டிசிஷன்" என்ற பழைய அர்த்தம், சீசன் 9-ல் "சிட்யூயேஷன் அப்ளை" ஆக மாறிவிட்டது போல.
இதையெல்லாம் பார்த்து ரசிகர்கள் கேட்கும் கேள்வி இதுதான்: "கம்ருதீனை மாதிரி பார்வதியையும் மேடையில் நிற்க வைத்து விஜய் சேதுபதி பேசுவாரா?" ஆனால், இதற்கு இன்னும் தெளிவான பதில் இல்லை. ஷூட்டிங் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதால், "பொறுத்திருந்து பாருங்க" என்றே உள்ளே இருப்பவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
இதற்கிடையில், ரெட் கார்டு விவகாரமே பிக் பாஸ் 9-ன் பெரிய சர்ச்சை. பார்வதி, கம்ருதீன் இருவருக்கும் எதிராக ரசிகர்கள் மற்றும் சில தரப்புகளில் இருந்து கடும் விமர்சனங்கள் வந்ததால்தான், அதிரடியாக ரெட் கார்டு கொடுக்கப்பட்டதாக பேசப்பட்டது. ஆனால் ரெட் கார்டு கொடுத்த பிறகு, அவர்களை முறையாக மேடையில் நிற்க வைத்து வழி அனுப்பவில்லை, விஜய் சேதுபதி தெளிவாக பேசவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தன. இதை சரி செய்ய இப்போ பிக் பாஸ் முடிவு எடுத்து இருக்கிறது.
"அப்போ அநியாயமா போச்சு... இப்போ அந்த அநியாயத்தை 'ஃபினாலே ஸ்பெஷல்'னு சரி பண்ண முயற்சியா?" என்று ரசிகர்கள் கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர்.
அதுபோல பிக்பாஸ் ஷூட்டிங் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பார்வதியை எப்படி உள்ளே அனுப்பப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்புக்கு சிறிது நேரம் ஷூட்டிங் நிறுத்திவிட்டு பார்வதியை உள்ளே அனுப்பி சில கண்டண்ட் மட்டும் பேச வைத்து விட்டு வெளியே அனுப்பி விடுவார்கள் என்று சொல்லப்படுகிறது.
கம்ருதீன் நேற்றே சூட்டிங் வந்து தயாராக இருந்ததால் அவரிடம் எப்படி பேச வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்று எல்லாம் சொல்லிக் கொடுத்திருப்பார்கள். ஆனால் பார்வதி இன்று தான் சூட்டிங்க்கு வந்திருக்கிறார். இதனால் அவரை அதிக நேரம் உள்ளே வைக்க மாட்டார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
-
பரிதாப நிலையில் “எங்கேயும் காதல்” பட பாடகர்.. கேபிஒய் பாலா வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ.. கலங்க வைத்த காட்சி -
நீயா நானாவில் யாமினி சொன்ன காதல் கதை.. கண்கலங்கி நின்ற கோபி நாத்.. கடைசியில் சொன்ன ‘நச்’ அட்வைஸ் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
கண் கலங்க வைத்த நீயா நானா.. இது பலருக்கும் பாடம்.. கடந்து வந்த வலி, கோபிநாத்தை மிரட்டி விட்ட அம்மா! -
சூப்பர் சிங்கர் அருணா கல்யாணத்தில் சுவாரசியம்! ஒன்று சேர்ந்த விஜய் டிவி பிரபலங்கள்.. அதுவும் யாரெல்லாம்னு பாருங்க -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி போட்ட பிளான்.. செக் வைத்த ரோகிணி! அடித்து விரட்டிய மீனா! சந்தோஷத்தில் முத்து -
இதுவும் கடந்து போகும்.. பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவின் மறுபக்கம்.. நீயா நானாவில் கண் கலங்கிய அம்மா -
சிறகடிக்க ஆசை சீரியல் அணிலா ஸ்ரீகுமாருக்கு 3வது கல்யாணம்.. குழந்தைகள் முன்பே நடந்த சம்பவம்! குவியும் வாழ்த்து -
கொலை மிரட்டல் விடுறாங்க.. பயமா இருக்கு.. கமிஷனர் ஆபீஸில் பதறிய வாட்டர் மெலன் திவாகர்! -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு!












Click it and Unblock the Notifications