Bigg Boss Dinesh Arrested : பிக் பாஸ் பிரபலம் தினேஷ் நெல்லையில் அதிரடி கைது! காரணம் இதுதானாம்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பெரிய அளவில் பெயர் வாங்கிய தினேஷ் இன்று நெல்லையில் பணகுடி போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

காதலித்து திருமணம்
நடிகர் தினேஷ் சின்னத்திரை ரசிகர்களுக்கு நன்கு பரீட்சையமானவர் தான். இவர் பல சீரியல்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அதிலும் இவர் கதாநாயகனாக நடித்த 'பிரிவோம் சந்திப்போம்' சீரியலில் இவருடன் நடித்த நடிகை ரச்சிதாவை தான் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு பல வருடங்கள் இந்த தம்பதி மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். ஆனால் சமீபத்தில் இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
விவாகரத்து
இருவரும் விவாகரத்திற்கு அப்ளை செய்திருக்கின்றனர். அதேபோல ரச்சிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது தினேஷ் அவருக்கு அதிகமாக சப்போர்ட் செய்து வந்தார். பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் ரச்சிதா எப்படியாவது டைட்டில் ஜெயிக்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால் நிகழ்ச்சி முடிவடைவதற்கு சில வாரங்களுக்கு முன்பு அவர்கள் எலிமினேஷன் செய்யப்பட்டார்.
ரச்சிதாவை தொடர்ந்து பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் தினேஷ் கலந்துகொண்டு இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்று ரச்சிதாவின் ஆசையை நிறைவேற்றுவேன், நாங்கள் மீண்டும் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்று நம்பிக்கையோடு இருந்தார் ஆனால் ரச்சிதா அவரோடு சேர்ந்து வாழ்வதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். இந்த பஞ்சாயத்து ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும் இப்போது தினேஷுக்கு இன்னொரு பஞ்சாயத்து வந்திருக்கிறது.
தினேஷ் கைது
நடிகர் தினேஷ் மீது கருணாநிதி என்பவர் புகார் கொடுத்து இருக்கிறார். தன் மகளிடம் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்காமல் அலைக்கழித்ததுடன் பணத்தை திருப்பி கேட்ட போது தன்னை தாக்கியதாகவும் அவர் கூறியிருக்கிறார். நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தண்டார்குளத்தை சேர்ந்த கருணாநிதி என்பவர் அளித்த புகாரில் "சீரியல் நடிகர் தினேஷ் தன்னுடைய மகளுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக மூன்று லட்சம் வாங்கி மோசடி செய்து விட்டார் என்றும், 2022ல் கொடுத்த பணத்தை கேட்ட போதெல்லாம் ஏமாற்றி வந்ததாகவும் ஒரு கட்டத்தில் பணத்தை கேட்டு போன தன்னை தாக்கியதாகவும் புகார் கொடுத்து இருந்த நிலையில் அவரை ( தினேஷ்) நெல்லை மாவட்டம் பணகுடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சிறகடிக்க ஆசை அப்டேட்: விஜயாவை கலங்க வைத்த ரோகிணி.. மீனாவிடம் போட்ட சபதம்.. அண்ணாமலை கொடுத்த அதிர்ச்சி -
சின்ன மருமகள் சீரியல் நடிகைக்கு வந்த பிரச்சனை..! ஏமாற்றிவிட்டார், ஆதாரத்தை வெளியிட போகிறேன்.. மிரட்டும் நபர்! -
சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணாவிற்க்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.. உருக்கமான பதிவு! குவியும் கமெண்ட்ஸ் -
‘சிங்கிள் பசங்க’ நிகழ்ச்சியில் இருந்து விலக காரணம் இதுதான்.. ஒபனாக பேசிய ஸ்ருதிஹா! இவ்வளவு விஷயம் நடந்ததா? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள்












Click it and Unblock the Notifications