Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bigg Boss Dinesh Arrested : பிக் பாஸ் பிரபலம் தினேஷ் நெல்லையில் அதிரடி கைது! காரணம் இதுதானாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பெரிய அளவில் பெயர் வாங்கிய தினேஷ் இன்று நெல்லையில் பணகுடி போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

Bigg Boss

காதலித்து திருமணம்

நடிகர் தினேஷ் சின்னத்திரை ரசிகர்களுக்கு நன்கு பரீட்சையமானவர் தான். இவர் பல சீரியல்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அதிலும் இவர் கதாநாயகனாக நடித்த 'பிரிவோம் சந்திப்போம்' சீரியலில் இவருடன் நடித்த நடிகை ரச்சிதாவை தான் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு பல வருடங்கள் இந்த தம்பதி மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். ஆனால் சமீபத்தில் இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

விவாகரத்து

இருவரும் விவாகரத்திற்கு அப்ளை செய்திருக்கின்றனர். அதேபோல ரச்சிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது தினேஷ் அவருக்கு அதிகமாக சப்போர்ட் செய்து வந்தார். பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் ரச்சிதா எப்படியாவது டைட்டில் ஜெயிக்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால் நிகழ்ச்சி முடிவடைவதற்கு சில வாரங்களுக்கு முன்பு அவர்கள் எலிமினேஷன் செய்யப்பட்டார்.

ரச்சிதாவை தொடர்ந்து பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் தினேஷ் கலந்துகொண்டு இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்று ரச்சிதாவின் ஆசையை நிறைவேற்றுவேன், நாங்கள் மீண்டும் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்று நம்பிக்கையோடு இருந்தார் ஆனால் ரச்சிதா அவரோடு சேர்ந்து வாழ்வதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். இந்த பஞ்சாயத்து ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும் இப்போது தினேஷுக்கு இன்னொரு பஞ்சாயத்து வந்திருக்கிறது.

தினேஷ் கைது

நடிகர் தினேஷ் மீது கருணாநிதி என்பவர் புகார் கொடுத்து இருக்கிறார். தன் மகளிடம் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்காமல் அலைக்கழித்ததுடன் பணத்தை திருப்பி கேட்ட போது தன்னை தாக்கியதாகவும் அவர் கூறியிருக்கிறார். நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தண்டார்குளத்தை சேர்ந்த கருணாநிதி என்பவர் அளித்த புகாரில் "சீரியல் நடிகர் தினேஷ் தன்னுடைய மகளுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக மூன்று லட்சம் வாங்கி மோசடி செய்து விட்டார் என்றும், 2022ல் கொடுத்த பணத்தை கேட்ட போதெல்லாம் ஏமாற்றி வந்ததாகவும் ஒரு கட்டத்தில் பணத்தை கேட்டு போன தன்னை தாக்கியதாகவும் புகார் கொடுத்து இருந்த நிலையில் அவரை ( தினேஷ்) நெல்லை மாவட்டம் பணகுடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+