இன்று வறுபட போவது உறுதி.. கமல் பேசும் போது அதை மட்டும் கவனிச்சிங்களா? மாஸான பெர்பாமன்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த வாரம் நடைபெற்ற பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்ல 69 ஆவது நாளில் முதல் பிரமோவில் கமல் வந்துவிட்டார்.

இந்த வாரம் நடைபெற்ற சூழ்ச்சி நேர்மையை கையில் எடுத்து பஞ்சாயத்தை தொடங்க இருக்கிறார்.

இன்றைய பிரமோவை பார்த்த ரசிகர்கள் பலர் இன்று அப்படியே குறும்படத்தையும் போட்டு விட்டால் நன்றாக இருக்கும் என்று பலர் கருத்து கூறி வருகிறார்கள்.

இது எதிர்பார்த்த பிரச்சினை தான்

இது எதிர்பார்த்த பிரச்சினை தான்

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி இன்று 69 நாள் தொடங்கி இருக்கிறது இன்று சனிக்கிழமை என்பதால் வழக்கம்போல கமல் இந்த வார பஞ்சாயத்துக்களை பேசுவதற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்த விக்ரமன் மற்றும் ஜனனி பிரச்சனையை கமல் கையில் எடுத்திருக்கிறார். இதைப்பற்றி ஏற்கனவே ரசிகர்களுக்கு தெரிந்திருந்தாலும் போட்டியாளர்களுக்கு ஒரு குறும்படம் போடலாம் என பலருடைய கருத்தாக இருந்து வருகிறது.

பொய் சாட்சிகள்

பொய் சாட்சிகள்

இந்த வாரம் நடைபெற்று வந்த சொர்க்கவாசிகள் மற்றும் நகரவாசிகள் டாஸ்க்கில் நகரவாசிகள் அணியில் இருந்த விக்கிரமன் சொர்க்கத்திற்குள் சென்று மீண்டும் முதல் ஆளாக கோட்டை தொட்டு வெளியே வந்து விட்டார். ஆனால் அவரை தடுக்க வந்த தனலட்சுமி,விக்ரமன் மற்றும் ஜனனி இருவரும் ஒரே நேரத்தில் வெளியேறும் போது ஜனனிதான் முதலில் கோட்டை தொட்டு வெளியே வந்தார் என்று கூறியிருக்கிறார். அது மட்டும் அல்லாமல் ஜனனி தான் முதலில் வெளியே வந்து கையை வைத்தாள் அதை நானும் பார்த்தேன் என்று அசீம் வேற ஆஜராகி இருக்கிறார்.

விக்ரமனின் பெருந்தன்மை

விக்ரமனின் பெருந்தன்மை

விக்ரமன் எவ்வளவோ சொல்லி பார்க்கிறார் நான் தான் முதலில் கோட்டைத் தொட்டேன் என்று ஆனாலும் மொத்த போட்டியாளர்களும் விக்கிரமனுக்கு எதிராக பேச, கடைசியில் நான் மீண்டும் நகரவாசியாகவே இருந்து விடுகிறேன் ஜனனி வேணுமென்றால் சொர்க்கவாசியாக மாறட்டும் என்று விக்ரமன் விட்டுக் கொடுக்க ஜனனி சொர்க்கவாசியாக மாறி இருக்கிறார். கடைசியில் அடுத்த வாரம் நாமினேஷன் ஃப்ரீ சோனுக்கு ஜனனியும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் ரசிகர்கள் பலர் இது விக்ரமனுக்கு கொடுக்க வேண்டியது. அதை கொடுக்காமல் ஏமாற்றி விட்டார்கள் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இன்று தரமான சம்பவம் இருக்கு

இன்று தரமான சம்பவம் இருக்கு

இதைக் குறித்து இன்றைய எபிசோடுக்காண முதல் பிரமோவில் கமல் பேசி இருக்கிறார். நேர்மையாக தீவிரமாக விளையாடிய சில பேர் வெளியே இருக்கிறார்கள். சில நேரம் நேர்மையான போராட்டங்களில் சூழ்ச்சி வீழ்த்தி விடுகிறது. ஆனால் சூழ்ச்சி எது? நேர்மை எது? என பிரித்து பார்க்க வேண்டியது நம்முடைய கடமை இல்லையா? பிருச்சிடலாமா என கேட்டிருக்கிறார். இதில் கமல் பேசும்போது நேர்மையைப் பற்றி பேசும்போது விக்ரமனையும் சூழ்ச்சி என பேசும்போது ஜனனியையும் கேமரா ஃபோக்கஸ் செய்கிறது. இதை பார்த்ததும் ரசிகர்கள் ஓகே ஆண்டவர் இன்று தரமான சம்பவம் பண்ண காத்திருக்கிறார் என்று கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+