இது எங்களுக்கு பிடிக்கல.. ஐஷுவை பற்றி அம்மாவே வெளிப்படையாக வெளியிட்ட பதிவு.. கூடவே சொன்ன அட்வைஸ்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் ஐசு பற்றி அவருடைய அம்மா வெளியிட்ட பதிவுதான் தற்போது இணையத்தில் பேசும் பொருளாக மாறி இருக்கிறது.
ஐசு நிக்சன் உடன் பழகி வரும் விதம் குறித்து அதிகமாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அவருடைய அம்மா இந்த ஐசு எங்களுக்கு பிடிக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.

அதோடு பிக்பாஸ் வீட்டிற்குள் சோகமாக இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அதற்கு விரிவாக கேப்ஷனும் ஐசுவின் அம்மா கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்
பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி சுமார் ஒரு மாதத்திற்கு மேல் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இருந்து சீசனில் காதல் ஜோடியாக நிக்சன் ஐசு இருந்து வருகின்றனர். தற்போது ஐசுவின் அம்மா தன்னுடைய மகள் குறித்து சோசியல் மீடியாவில் வெளியிட்ட பதிவு பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
ஒவ்வொரு சீசனிலும் பிக் பாஸ் வீட்டிற்குள் காதல் உருவாவது சகஜம் தான். முதல் சீசனில் இருந்து நடந்து முடிந்த ஆறாவது சீசன் வரைக்கும் பல காதல் ஜோடிகள் இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் ரொமான்ஸ் செய்து கொண்டிருப்பதும் வெளியே போய் ஆளுக்கு ஒரு திசையாக பிரிந்து போனதும் உண்டு.
அது போல இப்போது 7வது சீசனில் ஆரம்பத்தில் ரவீணா,மணி பழகி வருவது குறித்து இவர்கள் இருவரும் காதலிக்கிறார்களா? என்ற கேள்விகள் பலருக்கும் எழுந்து வந்த நிலையில் இப்போது அவர்களை தாண்டி நிக்சன் ஐசு ஜோடி பெரிய அளவில் சர்ச்சைகளில் சிக்கி கொண்டிருக்கின்றனர். ஐசு இருக்கும் இடத்தையே சுற்றி வரும் நிக்சன் ஆரம்ப காலகட்டத்தில் தனியாக தான் விளையாடிக் கொண்டிருந்தார்.
ஆரம்பத்தில் நிக்சனே மணி மற்றும் ரவீனாவிடம் நீங்கள் இருவரும் பழகிக்கொண்டிருக்கும் விதம் தப்பாக மாறக்கூடும் என்றெல்லாம் அட்வைஸ் செய்தவர் தான். ஆனால் இப்போது ஐசுவுக்கு சாப்பாடு ஊட்டி விடுவது. ட்ரெஸ்ஸை சரி செய்வது, ஒரே பெட்டில் படுத்துக் கொள்வது போன்ற பல வேலைகளை தொடர்ச்சியாக செய்து வருகிறார்.
இதனால் இவர்கள் இருவரும் நடந்து கொள்ளும் விதம் குறித்து வெளியே அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஐசுவின் அம்மா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், எல்லாத்தையும் உணர்ந்து நீயாகவே இரு ஐசு,எங்களுக்கு இந்த ஐசு வேண்டாம். எங்களுடைய ஐசுவை பார்க்க விரும்புகிறோம்.

உண்மையான கண்கள் எது பொய் எது என உணர்வாய் என நம்புகிறேன் என உருக்கமாக பதிவிட்டு இருக்கிறார். தற்போது இந்த பதிவுகள் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications