பிக் பாஸ் 7: வினுஷா இன்னர் தெரியும் போது பிரதீப் இப்படித்தான் பண்ணுனான்.. அர்ச்சனா சொன்ன பகீர்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் சில வாரங்களுக்கு முன்பு பிரதீப் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டு இருந்தார். இந்த நிலையில் வீட்டிற்குள் அவருக்கு ஆதரவாக அர்ச்சனா சக போட்டியாளர்களிடம் சில கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.
பிரதீப் வெளியேற்றப்பட்ட அடுத்த நாளே விசித்ரா மற்றும் அர்ச்சனா இருவரும் பிரதீப்புக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தனர்.

அப்போது வினுஷாவின் இன்னர் தெரியும்போது பிரதீப் என்ன செய்தார் தெரியுமா என்று அர்ச்சனா சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்து சண்டை சச்சரவுகளும், கலவரங்களுக்கும் பஞ்சமில்லாமல் இருக்கிறது. அதிலும் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த சீசனின் டைட்டில் வின்னர் என்று எதிர்பார்க்கப்பட்ட பிரதீப் உடைய வெளியேற்றம் பெரிய அளவில் ரசிகர்களின் மத்தியில் பேசப்பட்டது.
அதேபோல பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த சிலரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். இப்போதும் கூட பிரதீப்க்கு ரெட் கார்ட் கொடுத்த போட்டியாளர்கள் வெளியே போனால் நம்முடைய நிலைமை என்ன ஆகுமோ என்று கூட அடிக்கடி பேசிக் கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. இந்த நிலையில் பிரதீப்க்கு ஆதரவாக பிரதீப் வெளியேற்றப்பட்ட அடுத்த நாளே தினேஷ், அர்ச்சனா, விசித்திரா மூவரும் குரல் எழுப்பி இருந்தனர்.
தற்போது அதில் அர்ச்சனா பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இத்தனை கேமரா முன்னாடி பிரதீப் இருப்பது பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லி ரெட் கார்டு கொடுத்த ரவீனா, மாயா,பூர்ணிமா போன்றோரை மையப்படுத்தி அர்ச்சனா ரவீனாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அதில் நான் வெளியே இருந்து இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டுதான் வந்திருக்கிறேன்.
அதில் ஒரு முறை வினுஷாவின் இன்னர் வெளியே தெரிந்தது. அப்போ அந்த பக்கமா போன பிரதீப் வினுஷாவின் முடியை அவள் உடையில் போட்டு சரி செய்தபடியே இன்னர் தெரியுது என்று சொல்லிட்டு போனான். அது உங்களுக்கு தெரியுமா? என்று கேட்கிறார். அதற்கு ரவீனா அது எல்லாம் சரி தான், ஆனால் "என்கிட்ட அவன் வாயில வாங்கிப்பியான்னு கேட்டானே.. அதுக்கு என்ன சொல்லுறீங்க..?" என்று கேட்க அப்போது அருகில் இருந்த விசித்திரா அதை ஏன் நீ தப்பான அர்த்தத்தில் யோசிக்கிற என்று கேட்கிறார்.
அப்போது ரவீனா சரி இதை விட்டுருங்க நான் எதுவும் உங்க கிட்ட சொல்லல என்று தன்னுடைய பேச்சிலிருந்து பின் வாங்குகிறார். இப்படியாக அந்த வீடியோ வைரலாகி வருகிறது. எப்படி வினுஷாவின் இன்னரை மறைக்க பிரதீப் சொன்னாரோ, அதுபோலத்தான் ரவீனாவிடமும் அருணாக்கயிறை மறைப்பதற்காக பிரதீப் சொல்லி இருக்கிறார். ஆனால் ரவீனா தான் தவறாக புரிந்து கொண்டு விட்டார் என்ற பிரதீப் ரசிகர்கள் இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications