தீர விசாரித்ததால் வந்த தீர்வு இது, தீர்ப்பு அல்ல.. கமல்ஹாசன் அதிரடி..குற்றம் சுமத்தியவர்களுக்கு செம!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நவம்பர் 11ம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.
அதில் அனைவரும் இன்றைய ப்ரோமோவுக்காக ஆர்வத்தோடு காத்திருந்த நிலையில், அதில் கமல்ஹாசன் இன்று போனவாரம் பிரதீப் வெளியேற்றம் தீர விசாரித்ததால் வந்த தீர்வு அது, என்னுடைய தீர்ப்பு அல்ல என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.

அது மட்டும் அல்லாமல் குற்றம் சாட்டியவர்கள் யோக்கியமா என்ற கேள்விக்கு அவர்களுடைய நடத்தை பதில் சொல்லும் என்று ப்ரோமோவில் பேசி இருக்கிறார். என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய கமல்ஹாசன் நிகழ்ச்சிக்காகவே அதிகமான ரசிகர்கள் போன வாரத்தில் இருந்து காத்திருக்கின்றனர். காரணம் போன வாரம் சனிக்கிழமை எபிசோடில் பிரதீப்க்கு எதிர்பாராத விதமாக ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பப்பட்டு இருந்தது. பெரிய அளவில் இணையத்தில் பேசப்பட்டு வருகிறது. பிரதீப் தரப்பில் அதிகமான நடிகர், நடிகைகள், பழைய பிக் பாஸ் போட்டியாளர்கள் போன்றோர் கமல்ஹாசன் மற்றும் விஜய் டிவி செய்தது தவறு என்று கூறி வருகின்றனர்.
அதோடு பிரதீப் மீது தவறு இருந்தாலும் உள்ளே அவரை விட தவறு செய்தவர்கள் இருக்க தானே செய்கிறார்கள். அவர்களுக்கு ரெட் கார்ட் கொடுக்காமல் பிரதீப்க்கு மட்டும் ரெட் கார்ட் கொடுத்தது சரியா என்று பலர் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். இப்படியாக இருக்கும் நிலையில் இந்த வாரம் இது குறித்து கமல் பேச வேண்டும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.
அதில் போன வாரம் பிரதீப் விஷயத்தில் எடுத்த முடிவு "தீர விசாரித்ததாலேயே வந்த தீர்வு இது, தீர்ப்பு அல்ல. குற்றம் செய்தவர்கள் அதற்கான விளைவுகளை அனுபவித்தே ஆக வேண்டும். இது உலக நியதி. அதுபோல குற்றம் சாட்டியவர்கள் ரொம்ப யோக்கியமா? என்ற அந்த கேள்விக்கு அவர்கள் நடத்தை பதில் சொல்லும். அதற்கான விளைவுகளை அவர்கள் அனுபவிப்பார்கள் என்று கூறி இருக்கிறார். இந்த நிலையில் இந்த எபிசோடு பிக் பாஸ் வரலாற்றிலேயே அதிகமான மக்களால் எதிர்பார்க்கப்படும் ஒரு எபிசோடாக இருக்கிறது என்பது பலருடைய கருத்து.
நீ கட்டிப்பிடிக்கும் போது மூடு ஆகிட்டு.. காது கூச வைத்த விக்ரம்.. பூர்ணிமாவின் எதிர்பாராத பதில்
அதுபோல இந்த ப்ரோமோவிற்காக அதிகமான ரசிகர்கள் காத்திருந்ததாகவும் கருத்து கூறி வருகின்றனர்.கடந்த வாரம் வீட்டிற்குள் எழுப்பிய உரிமை குரலுக்கு பதில் சொல்லிய கமல், இந்த வாரம் பல மக்களின் உரிமைக் குரலுக்கு நியாயமான பதிலை எதிர்பார்க்கிறோம் என்றும் பலர் கூறிக் கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் இன்று கமல் எடுக்கும் போகும் முக்கிய முடிவு அவருடைய அரசியல் வாழ்வில் மிக முக்கிய திருப்பத்தை மக்களிடம் ஏற்படுத்தும் என்றும் பலர் கருத்து கூறியிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications