Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடுத்த ஜென்மத்தில் சௌந்தர்யாவாக நான் பிறக்கணும்! ராணவ் இப்படித்தான்! பவித்ரா ஓபன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் ஐந்தாவது இடத்தில் வெற்றி பெற்ற பவித்ரா தான் அடுத்த ஜென்மத்தில் சௌந்தர்யாவாக பிறக்கணும் என்று ஆசைப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார். அதோடு ராணவ் மற்றும் ஜாக்குலின், முத்துக்குமார் போன்ற பலரை பற்றியும் பவித்ரா மனம் திறந்து பேசி இருக்கிறார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி தொடங்கி ஜனவரி 19ஆம் தேதி முடிவுக்கு வந்தது. இந்த நிகழ்ச்சியில் முதல் நாளில் இருந்து கடைசி நாள் வரைக்கும் நடிகை பவித்ரா ஜனனி தாக்கு பிடித்திருந்தார். பிக் பாஸ் வீட்டிற்குள் சிலர் சண்டை போட்டு கண்டன்ட் கொடுத்தால் மட்டும்தான் தாக்கு பிடிக்க முடியும் என்று இல்லாமல் தன்னுடைய எதார்த்தமான நடவடிக்கையாலும், எந்த டாஸ்க்கிலும் விட்டுக் கொடுக்காமல் விளையாடி பவித்ரா தனி வரவேற்பு பெற்று இருக்கிறார்.

bigg boss tamil bigg boss tamil 8 8

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முதல் முறையாக லைவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பவித்ரா பதில் கொடுத்திருக்கிறார். அதில் நான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வந்த ரெண்டு நாட்களாக வீட்டில் தான் இருந்தேன். போன் எடுத்து பார்க்கும்போது வீடியோ எடிட் எல்லாம் பார்த்து நாம் இவ்வளவு பண்ணியிருக்கோமா என்று தோணுச்சு.

வெளியே எல்லோரும் என்னிடம் பேசும் விதம் எனக்கு இப்போ சந்தோஷமா இருக்கு. சிலர் என்னை ஏஞ்சல்னு சொல்றாங்க. அதைக் கேட்கும் போது ஏதோ நாம பண்ணி இருக்கிறோம் என்று மனம்நிறைவா இருக்கு. அதுபோல பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தவர்கள் பற்றி சொல்ல வேண்டும் என்றால் அதில் சௌந்தர்யா ஒரு யூனிக்கான கேரக்டர். உள்ளே இருக்கும்போதே நான் இதை பல இடங்களில் சொன்னேன்.

அடுத்த ஜென்மம்னு ஒன்னு இருந்தால் சவுண்டு உன்ன மாதிரிதான் நான் பிறக்கணும்னு சொல்லி இருக்கிறேன். அவ எதை பத்தியும், யாரை பத்தியும் யோசிக்க மாட்டா. அவளுக்கு என்ன தோணுதோ அதை செஞ்சிடுவா. செஞ்சிட்டு ஆமா நான் இதைத்தான் செஞ்சேன் இப்ப என்ன சொல்றீங்க அதுக்கு? இதுதான் நான் என்கிற மனநிலையில் இருப்பா. அதை பார்க்கவே ஜாலியா இருக்கும்.

இவ என்ன இப்படி தொனுவதை எல்லாம் பேசறா? யாரைப் பற்றியும் யோசிக்க மாட்டேன் என்கிறா என்று நமக்கு தோணும். ஆனால் அதுவும் ஒரு மாதிரி நல்லா தான் இருக்குது என்று நான் சௌந்தர்யாவை நிறைய ரசித்து இருக்கிறேன். அதுபோல ஜாக்குலின் எப்போ எது நடந்தாலும் பாத்துக்கலாம் என்று தைரியமா இருப்பா. அவ ரொம்ப கூலா இருப்பா. தர்ஷா ரொம்ப அப்பாவி. யாராவது கலாய்த்தா கூட அவளுக்கு அது தெரியாது.

அதுபோல பிக் பாஸ் வீட்டிற்குள் நான் ரொம்ப சண்டை போட்டது ராணவ் கூட தான். ஆனால் ராணவ் ரொம்ப ஃபன்னான நபர். ராணவ் இருந்தால் ஜாலியா இருக்கும். சீரியஸா நாம பேசிகிட்டு இருக்கும்போது கூட ராணவ் பார்த்தால் எனக்கு சிரிப்பு வந்துடும். அவர் ஒரு குட் சோல். ரொம்ப ஜாலியா இருப்பார். நல்ல மனிதர் அவரை சுற்றி நடப்பதை தாண்டி அவர் என்ன பண்றார் என்பதில் கவனமாக இருப்பார் என்று பவித்ரா பேசி இருக்கிறார்.பவித்ரா தன்னோடு பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தவர்கள் பற்றி பாராட்டியதற்கு அவருடைய ரசிகர்கள் பவித்ராவை பாராட்டி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+