பிக் பாஸ் Freeze taskல் வீட்டிற்கு வந்த தீபக் மனைவி கேட்ட கேள்வியால் அதிர்ச்சியில் அருண்! செம சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சியில் இன்று ஃப்ரீஸ் டாஸ்க் தொடங்கி இருக்கிறது. அதில் தீபத்தின் மனைவி மற்றும் மகன் வந்திருக்கின்றனர். அவர்கள் அருணிடம் தீபக் பற்றி பேசியது குறித்து கேள்வி கேட்டிருக்கிறார்கள்.

பிக் பாஸ் தமிழ் சீசன் எட்டாவது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி தொடங்கப்பட்டது. இன்னும் சில நாட்களில் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வர இருக்கிறது. இறுதி கட்டத்தை இந்த நிகழ்ச்சி எட்டி இருக்கும் நேரத்தில் எல்லோரும் எதிர்பார்த்திருந்த பிரீஸ் டாஸ்க் தொடங்கப்பட்டிருக்கிறது.

television bigg boss tamil 8 bigg boss 8 8

பிக் பாஸ் வீட்டிற்கு இப்போது குறைவான போட்டியாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய குடும்பத்தினர் வரும்போது அவர்களுடைய உணர்வுகள் என்ன மாதிரி இருக்கும் என்று ஒவ்வொரு சீசனிலும் மக்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர். அந்த வகையில் இன்று தொடங்கிய ஃப்ரீஸ் டாஸ்க் முதல் போட்டியாளராக தீபத்தின் குடும்பத்தினர் தான் வந்திருக்கின்றனர்.

காலையிலேயே ஸ்டோர் ரூம் வழியாக பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற தீபக்கின் மனைவியும் மகனும் நேராக பெட்ரூம் அருகே சென்று தீபக்கின் அருகில் படுத்துக்கொண்டனர். பின்னர் தீபக் கண் விழித்து பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனார். அதை தொடர்ந்து தீபக் மனைவி பிக் பாஸ் போட்டியாளர்கள் பற்றிய தனது பார்வையை அனைவரிடமும் பகிர்ந்து கொண்டார்.

இதைத் தொடர்ந்து லிவிங் ஏரியாவில் தீபக் மனைவிக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் எந்த போட்டியாளரின் கருத்தில் உங்களுக்கு முரண்பாடு இருக்கிறது என்பதை தெரிவிக்குமாறு கூறினார்கள். அப்போது சிறிது நேரம் யோசித்த தீபக் மனைவி அருண் பிரசாத் என்று கூறினார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு தீபக் உடன் சண்டையிட்டு வெளியே சென்று சத்யாவிடம் சொன்ன வார்த்தை தன்னை மிகவும் காயப்படுத்தியதாக கூறினார்.

television bigg boss tamil 8 bigg boss 8 8

அதாவது தீபக்குடனான சண்டைக்கு பிறகு கார்டன் ஏரியாவுக்கு சென்று சத்யாவிடம் பேசும்போது நான் இப்போ ட்ரெண்டில் இருக்கிற ஹீரோ, என்கிட்டயே இவர் இப்படி நடந்துக்கிறாரே.. அப்போ அவர் ட்ரெண்டிங்கில் இருக்கும்போது அவருடைய அசிஸ்டன்ட் கிட்ட எப்படி நடந்து இருப்பார்? என்று பேசி இருக்கிறார். அது தன்னை மிகவும் காயப்படுத்தியதாக தீபக் மனைவி கேட்டார்.

அதோடு உங்களுக்கு அவர் பற்றி பர்சனலா என்றும் தெரியாது. அவர் யாரையும் அப்படி தவறாக நடத்தி நீங்கள் பார்த்ததில்லை. நீங்கள் யூகித்து சொன்ன ஒரு விஷயம்தான் அது. எனக்கு அது அவருடைய கேரக்டரை கொச்சைப்படுத்தும் ஒரு செயலாக தான் தெரிந்தது என அவர் சொன்னதை கேட்டு அருண் அதிர்ச்சியில் உறைந்து போனார். இதனால் இன்றைய எபிசோடில் செம சம்பவம் இருக்கிறது என்று மட்டும் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+