பிக் பாஸ்: ராணவ்க்கு ஆதரவாக விஜய் சேதுபதி நறுக்குன்னு கேட்ட கேள்வி! மாட்டிக்கிட்ட சௌந்தர்யா, அன்ஷிதா
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் டிசம்பர் 21வது தேதிக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ராணவ் கையில் அடிபட்ட விஷயம் குறித்து விஜய் சேதுபதி விசாரித்திருக்கிறார். அப்போது ராணவ் வலியில் துடித்த போது சிரித்தவர்கள் குறித்து கேள்வி கேட்டது ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டு பெறுகிறது.
இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோ ரசிகர்களை அடடா என்று சொல்ல வைத்திருக்கிறது. காரணம் இந்த வாரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல சம்பவங்கள் நடைபெற்றது. அதில் பெரிய சம்பவமே ராணவ் கை உடைந்தது தான். ராணவ் கை உடைந்த வலியில் துடித்துக் கொண்டிருக்கும் போது கூட அவரோடு விளையாட்டிய சௌந்தர்யா, ஜெஃப்ரி, அன்ஷிதா போன்றோர் அவன் நடிக்கிறார் என்று ஏளனம் செய்தனர்.

இது இணையத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது. ராணவ் தந்தை கராத்தே சந்துரு கூட தன்னுடைய மகன் நிலமை குறித்து வருத்தமாக பேசி இருந்தார். ஒருத்தன் வலியில் துடித்துக் கொண்டிருக்கும் போது எப்படி இவர்களால் சிரிக்க முடிகிறது? அதுவும் நடிக்கிறான் என்று சொல்கிறார்கள். இது எவ்வளவு வேதனையான விஷயம். ஆனால் இதை பிக்பாஸ் தரப்பினரும், விஜய் சேதுபதியும் கேள்வி கேட்க வேண்டும் என்று தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
அதுபோல அதிகமான ரசிகர்களும் இதையே வலியுறுத்தி வந்தனர். இதனாலேயே வாக்குகளின் அடிப்படையில் கடைசி இரண்டு இடத்திற்கு மேலே இருந்த ராணவ் நேற்று வாக்குகளின் முடிவுகளில் இரண்டாவது இடத்தில் இருந்தார். இது இவருக்கு மக்கள் மத்தியில் இருக்கும் அமோகமான வரவேற்பை காட்டுகிறது.
இந்த நிலையில் இன்று விஜய் சேதுபதி இது குறித்து விசாரிப்பாரா? என்பது பலருடைய கேள்வியாக இருந்தது. சிலர் கண்டிப்பாக இது பற்றி விஜய் சேதுபதி பேசியே ஆக வேண்டும் என்றும் கூறி வந்தனர். ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோவில் ராணவ்க்கு ஆதரவாக விஜய் சேதுபதி செம்மையாக பேசியிருக்கிறார்.
அதாவது ராணவிடம் நீங்க வலியில் துடிக்கும்போது நடிக்கிற என்று சொன்னாங்களா அவங்க எல்லாம் யாரு ராணவ் என்று கேட்க, அதற்கு அன்ஷிதா, சௌந்தர்யா, விஜே விஷால் என எல்லோரும் எழுந்து இருக்கிறார்கள். அப்போது சௌந்தர்யா தான் தெரிய வேண்டும் என்பதற்காக ராணவ் நிறைய பண்ணுவான்.. இப்போ அதனால இப்படி பண்ணி கல்லை எரிஞ்சிடலாம்னு இப்படி பண்ணுனான் என்று நினைத்தேன் என்று சொல்கிறார்.
அதற்கு விஜய் சேதுபதி, உண்மையில் அவனுக்கு அடிபட்டு இருந்தால் பரவாயில்லை இல்லாட்டி கேவலமா நடிக்கிறான்னு சொன்னீங்களே அது எப்படி என்று கேட்க, அதற்கு அன்ஷிதா ராணவுக்கு எப்போதும் ஃப்ராங் பண்ணுற பழக்கம் இருக்கு. அதனால இப்படி நடிச்சுட்டு பிறகு கல்லை எடுத்துட்டு ஓடிவிடுவான் என்று சொன்னேன் என்று சமாளிக்க, அதற்கு விஜய் சேதுபதி பேசணும் என்பதற்காக என்ன வேணாலும் பேசலாமா?
தேவதை இப்படியெல்லாம் பண்ணக்கூடாது என்று சொன்னீங்களே இப்போ அந்த தேவதை எங்க போச்சு என்று கேட்கிறார். அதோடு ஜெப்ரிக்குனா எல்லாரும் வந்து இருப்பாங்க, ராணவுக்குனா சந்தேகப்படுறாங்க என்று கேட்டு இருக்கிறார். இந்த ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications