Bigg Boss 8 finale- வில் கோபப்பட்டு திட்டிய விஷால் அப்பா! விஜய் சேதுபதி சொன்ன வார்த்தை.. செம சம்பவம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சியில் டாப் 3 போட்டியாளர்களில் ஒருவராக இருக்கும் விஜே விஷால் மேடையில் நிற்கும் போது அவருடைய அப்பா கோபப்பட்டு திட்டி இருக்கிறார்.
ரசிகர்கள் எதிர்பார்த்தபடி பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் கிராண்ட் ஃபினாலே இன்று ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் டாப் 3 போட்டியாளர்களில் முத்துக்குமரன், சௌந்தர்யா மற்றும் விஜே விஷால் மூன்று பேரும் இடம் பிடித்திருக்கிறார்கள். மூன்று பேரையும் விஜய் சேதுபதி மேடைக்கு அழைத்தபோது விஜே விஷாலிடம் அவருடைய அப்பா உரிமையாக கோபப்பட்டு இருக்கிறார்.

மேடைக்கு வந்த விஜே விஷால் தன்னுடைய குடும்பத்தினரை கவனிக்காமல் தன்னுடைய முன்னாள் போட்டியாளர்கள் எதிரே அமர்ந்திருக்கும் போது அவர்களைப் பார்த்து கை அசைத்து அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது கீழே பார்வையாளர்கள் வரிசையில் இருந்த விஜே விஷாலின் அப்பா உன்னுடைய அப்பா, அம்மா நாங்க இவ்வளவு நேரம் உனக்காக காத்திருக்கிறோம். ஆனால் நீ எங்களைத் தேடவே இல்ல.
இந்த பக்கம் கூட உன் முகம் தெரியல. இத்தனை நாளும் உன் கூடவே இருந்தவர்களோடு தான் வெளியே வந்த பிறகு கூட பேசிக்கிட்டு இருக்கிற.. என்று கோபப்படுகிறார். அதற்கு விஜய் சேதுபதி நல்லா கேளுங்க சார். நான் உங்களை இந்த நிகழ்ச்சியில் தான் பார்த்தேன். நான் கூட இங்கே வந்த பிறகு பேசினேன். உங்க மகன் உங்க கிட்ட பேசவே இல்லை என்று சொல்கிறார்.
அதற்கு விஜே விஷால், அப்பா ஐ லவ் யூ.. என்று சமாளிக்க பார்க்கிறார். அதற்கு அவருடைய அப்பா உன்னுடைய லவ் யூ வை நான் நம்ப மாட்டேன். 27 வருஷமா இப்படித்தான் ஏமாற்றிக்கொண்டு இருக்கிறா என்று சொன்னதும் விஜய் சேதுபதி கவனிச்சீங்களா? விஷால் உடைய லவ் யூவை அவருடைய அப்பாவே நம்ப மாட்டாராம் என்று சொன்னதும் அன்ஷிதாவை கேமரா ஃபோக்கஸ் செய்கிறது.
அதற்கு விஜே விஷால் நான் இத்தனை நாளா அவங்க கூட இருந்தேன்.. அதனாலதான் என்று சொல்ல வந்ததும் அதற்கு அவருடைய அப்பா, உனக்காக நாங்க டிவி முன்னாடியே இருந்தோமடா என்று கேட்கிறார். பிறகு விஜே விஷால் உடைய அப்பா நானும் என்னுடைய மகனும் சில மாதங்களாக பேசாமல் இருந்தோம்.
பிக் பாஸ்க்கு வருவதற்கு மூன்று மாதத்திற்கு முன்னாடியே வீட்டை விட்டு கிளம்பி போயிட்டான். அதற்கு பிறகு அவன் தனியா தான் இருந்தான் என்னுடைய மனைவியிடம் மட்டும் தான் பேசுவான் என்கிட்ட பேசவே மாட்டான். பிறகு பிக்பாஸுக்கு போறேன் என்றதும் தான் என்னிடம் வந்து சொல்ல வந்தான்.
நான் போயிட்டு வா என்று சொன்னேன். ஆனால் அவன் எப்படி எல்லாம் நான் இருக்க வேண்டும் என்று நினைத்தானோ இப்போ அப்படி மாறிவிட்டேன். என்னுடைய மகனுக்காக நான் இனி அவன் எதிர்பார்த்த அப்பாவா இருப்பேன் என்று எமோஷனலாக பேசியிருக்கிறார். அப்போது அன்ஷிதா மற்றும் தர்ஷிகாவை கேமரா போக்கஸ் செய்தது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications