CWCயில் இருந்து தாமு விலகுகிறேன் என்று சொல்லிட்டு விலகாத காரணம் இதுதான்! வெங்கடேஷ் பட் ஓப்பன் அப்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருந்த செஃப் வெங்கடேஷ் பட் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு தன்னோடு தாமுவும் நிகழ்ச்சியில் இருந்து விலகுகிறேன் என்று சொல்லிட்டு விலகாதது எதற்காக என்பது பற்றி முதல் முறையாக மனம் திறந்து பேசி இருக்கிறார்.
அந்த வகையில் வெங்கடேஷ் பட் நான்கு சீசன்களாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார். ஆனால் ஐந்தாவது சீசன் தொடங்கப்படுவதற்கு முன்பே தான் அதிலிருந்து விலகப் போகிறேன் என்னோடு செஃப் தாமுவும் வந்துவிடுவார் என்று ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதைத்தொடர்ந்து அடுத்த நாளே செஃப் தாமுவும் ஆமாம் நானும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளில் இருந்து விலகப் போகிறேன் என்று சொல்லியிருந்தார்.

பிறகு அந்த வீடியோவை டெலிட் செய்து விட்டார். அதைத்தொடர்ந்து வெங்கடேஷ் பட் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் நண்பனின் வாக்கு மாறினாலும் நட்பு மாறாது என்று பதிவு வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் எதற்காக தாமு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து தன்னோடு விலகி வெளியே வருகிறேன் என்று சொல்லிவிட்டு மீண்டும் விலகாமல் அந்த நிகழ்ச்சியில் தொடர்கிறார் என்பது குறித்து பேட்டி ஒன்றில் வெங்கடேஷ் பட் பேசுகையில், ஆரம்பத்தில் விஜய் டிவியில் நானும் தாமுவும் இணைந்து கிட்சன் சூப்பர் ஸ்டார் என்ற நிகழ்ச்சியை நடத்தி வந்தோம்.
அந்த நிகழ்ச்சி முடிவடைந்ததும் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அதில் மீடியா மேஷன் நிறுவனம் என்னை அணுகி நீங்கள் தான் இந்த நிகழ்ச்சியிலிலும் நடுவராக இருக்க வேண்டும் என்று சொல்லி இருந்தார்கள். அதோடு உங்களுக்கு துணையாக ஒரு பெண் தொகுப்பாளர் மற்றும் ஆண் தொகுப்பாளர் இருப்பார்கள் என்று சொல்லியிருந்தார்கள். விஜய் டிவியில் தரப்பிலிருந்து ஒரு நடுவருக்கு மட்டும்தான் பணம் கொடுக்க முடியும் என்று சொல்லி இருக்கிறார்கள்.
ஆனால் நான் எனக்கு செஃப் தாமு வேண்டும் ஒருவராக இருந்து கொண்டு என்னால் என்டர்டைன்மென்ட் செய்ய முடியாது என்று சொன்னேன். பிறகு மீடியா மெஷன் நிறுவனம் விஜய் டிவியில் பேச்சுவார்த்தை நடத்தி தாமுவை குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கொண்டு வந்திருந்தனர். நான்கு சீசன்களாக நல்லா தான் போய்க்கொண்டிருந்தது. ஐந்தாவது சீசனில் மீடியா மெஷன் நிறுவனம் விஜய் டிவியில் இருந்து விலகும் போது நானும் அவர்களோடு வந்துவிடலாம் என்று முடிவு எடுத்தேன்.
அப்போது தாமுவும் நானும் உன்னோடு வந்துவிடுகிறேன் நாம மீடியா மேஷன் எங்கு இருக்கிறதோ அங்கேயே போய்விடலாம் என்று சொல்லி இருந்தார். ஆனால் பிறகு விஜய் டிவி என்னிடம் பேச்சு வார்த்தை நடத்தியது போல தாமுவிடமும் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். அதில் அவருக்கு உடன்படிக்கை ஏற்பட்டு இருக்கிறது. அதனால் அவர் விஜய் டிவியில் இருக்கிறேன் என்று சொல்லிவிட்டார்.
ஏற்கனவே அவர் வெளியிட்ட வீடியோவும் டெலிட் செய்து விட்டார். எனக்கு அது சரிப்பட்டு வரல. நான் சன் டிவியில் புது நிகழ்ச்சிக்கு வந்து விட்டேன். அவர் அங்கேயே தங்கி விட்டார். நான் எப்போதும் சொல்வது போல தான் இப்போதும் சொல்கிறேன். நண்பனின் வாக்கு மாறலாம் ஆனால் நட்பு எப்போதும் மாறாது. எனக்கு அவர் எப்போதும் அதே நட்போடு தான் இருக்கிறார். ஆனால் நான் அந்த சம்பவத்திற்கு பிறகு இன்னும் தாமுவோடு பேசவில்லை. அதற்கான சந்தர்ப்பம் சரியாக அமையவில்லை அதனால் பேசவில்லை அவ்வளவுதான்... என்று அந்த பேட்டியில் வெங்கடேஷ் பட் கூறி இருக்கிறார்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications