அவங்க என்ன வேணா சொல்லட்டும்.. என் முடிவு இதுதான்.. கெத்து காட்டும் நடிகர் செந்தில்.. காரணம் இதுதானா?
சென்னை: தமிழ் திரையுலகில் கரகாட்டக்காரன் திரைப்படத்தையும் அந்த திரைப்படத்தில் நடித்த நடிகர்களும் அவ்வளவு எளிதாக யாராலும் மறந்து விட முடியாது.
இப்போது எத்தனையோ புதுப்புது காமெடி நடிகர்கள் வந்தாலும் நடிகர் செந்தில் மற்றும் கவுண்டமணி காம்போவுக்கு இணை இல்லை என்று தான் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில் மீண்டும் கரகாட்டக்காரன் 2 திரைப்படம் எடுத்தால் நான் கண்டிப்பாக நடிப்பேன் என்று செந்தில் கூறியிருக்கிறார்.

90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் திரைப்படங்களில் ஒன்றாக கரகாட்டக்காரன் திரைப்படம் இப்ப வரைக்கும் இருந்து வருகிறது. இந்த திரைப்படத்தில் கண்ணழகி கனகா, ராமராஜனின் காதலாக இருந்தாலும் சரி, அவர்கள் கலையின் மீது வைத்திருக்கும் மரியாதையாக இருந்தாலும் சரி, அதை அடிச்சுக்க யாரும் கிடையாது அந்த அளவிற்கு அந்த திரைப்படத்தில் அவர்கள் நடிக்காமல் கதையோடு வாழ்ந்திருக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை அதிகமான ரசிகர்கள் இப்போதும் விரும்பி பார்ப்பதற்கு காரணம் இந்த திரைப்படத்தில் அமைந்த காமெடிகள் தான். இந்த காமெடிகள் இப்ப வரைக்கும் உள்ள 2k கிட்ஸ்களையும் கவர்ந்திருப்பதால் தான் அந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பல காமெடிகளின் அடிப்படையிலேயே பல நிகழ்ச்சிகளும் திரைப்படங்களும் கூட வலம் வருகிறது. குறிப்பாக அந்த "சொப்பன சுந்தரி கார்" பலருக்கும் பரீட்சயனமானது தான்.
அதுபோல "ஒரு வாழைப்பழம் இங்கே இருக்கு இன்னொரு வாழைப்பழம் எங்கே..?" என்ற காமெடிக்கு இப்ப கூட பலருக்கும் விடை தெரியாமல் தான் இருக்கிறது. இந்த திரைப்படத்தில் பாடல்களும் அவ்வளவு அழகாக பலருடைய மனதில் பசை போட்டு ஒட்டியபடி பதிந்துவிட்டது. குறிப்பாக "மாங்குயிலே பூங்குயிலாக" இருந்தாலும் சரி," ஊரு விட்டு ஊரு வந்து காதல் கீதல் பண்ணாதீங்க" என்ற தத்துவ பாடல் ஆக இருந்தாலும் சரி பலரையும் கவர்ந்தது தான் .
அதுபோல "மாரியம்மா மாரியம்மா" இப்போதும் பல கோவில்களில் ஒலிக்கப்படும் பாடல்களாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த கரகாட்டக்காரன் திரைப்படம் வெளியாகி 34 வருடங்கள் ஆகிவிட்டது. இதில் நடித்த பல பிரபலங்கள் இப்போது திரை துறையை விட்டு விலகி இருக்கின்றனர். அதில் கதாநாயகி கனகா எங்கே இருக்கிறார்? என்ன பண்ணுகிறார்? என்ற ஒரு விவரம் கூட வெளியே தெரியாமல் இருக்கிறது.
அதுபோல இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாகம் விரைவில் வரப்போகிறது என்ற செய்திகள் சமீபத்தில் வெளியானது. அதைத் தொடர்ந்து நடிகர் ராமராஜன் நான் இரண்டாவது பாகம் வந்தால் அதில் நடிக்க மாட்டேன் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அந்த திரைப்படத்தில் காமெடியில் பலரையும் சிரிக்க வைத்த நடிகர் செந்தில் இடம் நீங்கள் இந்த திரைப்படத்தில் இரண்டாவது பாகம் எடுத்தால் நடிப்பீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறது.
அது குறித்து அவர் பேசுகையில் கண்டிப்பாக நான் நடிப்பேன். கங்கை அமரன் சார், கரகாட்டக்காரன் 2 படத்திற்காக என்னிடம் வந்து பேசினார். இந்த படத்தில் யார் நடிக்க ஒத்துக்கிட்டாலும், ஒத்துக்கலனாலும் நான் கண்டிப்பா நடிப்பேன். அது காரணத்தை இப்ப சொல்ல மாட்டேன் என்றும் கூறினேன்.., என செந்தில் கூறி பேசியிருக்கிறார்.
-
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்!












Click it and Unblock the Notifications