Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அந்த”நடிகருக்காக ரஜினி, விஜய், அஜித்தை வம்பு இழுத்த தேவயானியின் "கணவர்”.. காரணம் இதுதானாம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குனர் ராஜகுமாரன் பிரபல நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித் பற்றி பேட்டி ஒன்றில் சொன்ன வார்த்தை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நடிகை தேவயானியின் கணவர் ஆன ராஜகுமாரன் சினிமாவில் அதிகமாக உழைக்கும் நடிகர் என்றால் அது நடிகர் சரத்குமார் ஆகத்தான் இருக்க முடியும் என்று கூறியிருக்கிறார்.

அதோடு அதற்கான காரணம் என்ன என்பது பற்றியும் பேட்டியில் பேசி இருக்கிறார் அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஒரு சில நடிகர்கள் முன்னணி நடிகர்களாக ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து விடுகின்றனர். அதுபோல அந்த காலகட்டத்தில் நடிகர் எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி இருந்தனர். அவர்களை தொடர்ந்து கமல் மற்றும்
ரஜினி இருந்தனர். அவர்களை தொடர்ந்து விஜய், அஜித் என வரிசை கட்டிக் கொண்டிருக்கின்றனர்.

Devayani husband Rajakumaran who made a fuss over Rajini, Vijay and Ajith for actor Sarathkumar

அதுபோல பிளாக் அண்ட் வொயிட் காலத்தில் தொடங்கி இப்ப வரைக்கும் மார்க்கெட் குறையாத நடிகராக ரஜினி மற்றும் கமல் இருக்கின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் இயக்குனர் ராஜகுமாரன் தனது பேட்டியில் அவர்கள் எல்லாம் பெரிய நடிகர்களே கிடையாது என்பது போல பேசி இருக்கிறார்.

நடிகர் ராஜகுமாரன் நடிகை தேவயானியின் காதல் கணவர் தான். ஒரு சில குடும்ப திரைப்படங்களை எடுத்து சூப்பர் டூப்பராக வெற்றி அடைய வைத்து ரசிகர்களின் மத்தியில் பரீட்சையமானவர். ஆனால் சமீப காலமாக எந்த திரைப்படங்களையும் இயக்காமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியில் பேசும் போது தமிழ் சினிமாவில் சரத்குமாருக்கு இணையாக எந்த நடிகரும் கிடையாது என்று பேசி இருக்கிறார்.

அதோடு இல்லாமல் வாரிசு படத்தில் கூட நடிகர் சரத்குமார் தான் சரியாக நடித்திருந்தார். வாரிசு திரைப்படத்தில் விஜய் ஒன்னும் அந்த அளவிற்கு எல்லாம் நடிக்கவில்லை. ஒரு தந்தையிடம் மகன் இப்படியா திமிராக நடந்து கொள்ள வேண்டும்? நிஜத்தில் அவருக்கு தந்தையிடம் இருக்கும் மனநிலையை சினிமாவில் காட்ட வேண்டாம். அதை அவருடைய வீட்டுக்குள் காட்டிக் கொள்ளலாம்.

இந்த சினிமாவை பார்த்து பல பேர் தவறான முன்னுதாரணத்தை எடுத்து கொள்ள கூடும் என்பது கூட விஜய்க்கு தெரியாதா? விஜய் இப்படி தன்னுடைய அப்பா முன்பு டான்ஸ் ஆடி அவமானப்படுத்தும் விதமாக பேசுற மாதிரி அந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார். நான் சரத்குமார் வச்சி சூரிய வம்சம் திரைப்படத்தை எடுத்து வைத்தேன். அந்த திரைப்படத்தில் சரத்குமார் சொல்வார், "நான் சொத்தாக நினைக்கிற தெய்வமே வீட்டுக்குள்ள தான் இருக்குன்னு" அதுதான் ஒரு நல்ல உதாரணம்.

சரத்குமார் நடிப்பு மட்டுமல்ல அவருடைய கேரக்டருமே தன்னை நம்பி வரும் சின்ன நடிகரையும் கூட அதிக முக்கியத்துவம் கொடுப்பார். விண்ணுக்கும் மண்ணுக்கும் திரைப்படத்தில் அவர் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கினார். ஆனால் என்னிடம் ஆறு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குன விக்ரமிற்கு மாலை போட்டு வாங்க இந்த படத்துல நடிங்க நான் உங்களுக்கு சப்போர்ட் பண்றேன்னு வரவேற்றார். அந்த மனசு வேற யாருக்காவது வருமா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இத்தனைக்கும் விண்ணுக்கும் மண்ணுக்கும் திரைப்படம் எடுக்கும்போது தேவயானிக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுப்பதாக நடிகர் சரத்குமாருக்கும் இயக்குனர் ராஜகுமாரனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சூட்டிங் ஸ்பாட்டில் சண்டை ஏற்பட்டது என்ற தகவல்கள் கூட சமீபத்தில் பரவி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+