Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இட்லி கடை விழாவில் தனுஷ் பொய் சொன்னாரா? அவர் குடும்ப நிலைமை!- விசுவின் பழைய வீடியோவால் கிடைத்த ஆதாரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் திரையுலகில் ஒரு முன்னணி நடிகராக மட்டுமல்லாமல், இயக்குநர், பாடகர் எனப் பன்முகத் திறமைகளுடன் கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என இந்தியத் திரையுலகின் எல்லைகளைக் கடந்து ஜொலித்து வருபவர் நடிகர் தனுஷ். சமீபத்தில் நடைபெற்ற அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழாவில், அவர் தனது கடந்த காலம் குறித்துப் பேசிய சில வார்த்தைகள், சமூக வலைத்தளங்களில் விவாதத்தைக் கிளப்பி, பின்னர் மறைந்த இயக்குநர் விசுவின் பழைய வீடியோ மூலம் உண்மை என நிரூபணமாகியுள்ளது.

Dhanush Selvaraghavan Kasthuri Raja

சினிமாவுக்குள் தனுஷின் பயணம்

பிரபல இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனான தனுஷின் நிஜப்பெயர் வெங்கடேஷ் பிரபு. கஸ்தூரி ராஜா சில படங்களைத் தயாரித்து நஷ்டத்தைச் சந்தித்து, தனது சொந்த ஊரான தேனிக்குச் சென்றுவிட முடிவெடுத்தபோது, அவரது மூத்த மகன் செல்வராகவன், துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தைத் தொடங்கி, கடைசி முயற்சியாக ஒரு படம் செய்யலாம் என நம்பிக்கை அளித்தார். பட்ஜெட் காரணமாக, அந்தப் படத்தில் கஸ்தூரி ராஜா தனது மகன் வெங்கடேஷ் பிரபுவை ஹீரோவாக நடிக்க வைத்தார். சினிமாவுக்காக அவரின் பெயர் தனுஷாக மாறியது.

துள்ளுவதோ இளமை படத்தில் கவர்ச்சியான காட்சிகள் அதிகம் இருந்ததால், இந்தப் படத்தை தடை செய்ய வேண்டும் எனப் பலரும் போர்க்கொடி தூக்கினார்கள். இதனாலேயே அந்த படம் நல்ல வசூலை பெற்று, கஸ்தூரி ராஜாவின் கடன்களை அடைக்க உதவியது. அதன்பின், செல்வராகவன் இயக்கத்தில் உருவான காதல் கொண்டேன் படத்தின் வெற்றி, கஸ்தூரி ராஜா குடும்பத்தின் சூழ்நிலையையே மாற்றிவிட்டது. இன்று தனுஷ் ஆடுகளம், அசுரன் என இரு தேசிய விருதுகளை வென்று, பொல்லாதவன், வடசென்னை, கர்ணன் எனப் பல ஹிட் திரைப்படங்களில் நடித்து, பா பாண்டி, ராயன் போன்ற படங்களை இயக்கி, கோலிவுட்டில் ஒரு முக்கியமான நட்சத்திரமாக உயர்ந்துள்ளார்.

தனுஷின் நெகிழ்ச்சி உரை

இட்லி கடை இசை வெளியீட்டு விழாவில், தனுஷ் மிகவும் உருக்கமான ஒரு கதையைப் பகிர்ந்து கொண்டார். "சின்ன வயதில் தினமும் இட்லி சாப்பிட வேண்டும் என எனக்கு ஆசையாக இருக்கும். ஆனால் கையில் பணம் இருக்காது. நானும் என் இரண்டு சகோதரிகளும் வயலில் பூ பறிப்போம். இரண்டு ரூபாய் கொடுப்பார்கள். அதை வாங்கிக் கொண்டு போய் அந்த இட்லி கடையில் அந்த காசைக் கொடுத்தால் நாலு இட்லி கிடைக்கும். இந்தப் படத்தில் இட்லி கடைதான் ஹீரோ. அதனால்தான் அந்தத் தலைப்பை இந்தப் படத்திற்கு வைத்திருக்கிறேன்" எனப் பேசி இருந்தார். அவரது இந்த நேர்மையான வார்த்தைகளை, ஒரு சிலர் நம்பாமல், தனுஷ் பொய் சொல்கிறார் என அவரை சமூக வலைத்தளங்களில் கேலி செய்தனர்.

மீம்ஸ்களுக்கு பதிலடி கொடுத்த விசு வீடியோ

இந்நிலையில், தனுஷின் ரசிகர்கள், மறைந்த இயக்குநரும் நடிகருமான விசு பல வருடங்களுக்கு முன்பு பேசிய வீடியோவை இப்போது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, தனுஷின் வார்த்தைகளுக்குச் சாட்சியாக அதை முன்வைத்தனர். அந்த வீடியோவில் விசு, "என்னிடம் 15 படங்களுக்கு மேல் உதவி இயக்குநராக வேலை செய்தவர்தான் கிருஷ்ணமூர்த்தி என்கிற கஸ்தூரி ராஜா. தனுஷ், செல்வராகவன் இருவரையும் சிறுவனாக இருக்கும்போதே பார்த்திருக்கிறேன். ஆரம்பத்தில் கண்ணம்மாபேட்டையில் ஒரு சின்ன சந்து வீட்டில்தான் அவர்கள் இருந்தார்கள். அந்த வீட்டில் ஒரு டிவி கூட இருக்காது; எங்க அண்ணன் வீட்டில் வந்துதான் டிவி பார்ப்பார்கள்" எனப் பேசியிருக்கிறார்.

விசுவின் இந்த வீடியோ, தனுஷின் கடந்த கால வாழ்க்கை குறித்து, அவர் கூறிய வார்த்தைகள் முற்றிலும் உண்மை என நிரூபித்து, அவரை விமர்சித்தவர்களுக்கு ஒரு சரியான பதிலடியைக் கொடுத்துள்ளது. இந்தச் சம்பவம், ஒரு கலைஞனின் வெற்றி, அவரின் போராட்டங்கள் நிறைந்த கடந்த காலத்தைக் கருணையின்றி விமர்சிக்கக் கூடாது என்பதை நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+