Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மனோஜ் சவப்பெட்டி மீது ஏறி.. மோசமான செயல்! இதெல்லாம் தப்புங்க! பிரபலம் கோபம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு நடிகரும் இயக்குனருமான மனோஜ் பாரதிராஜா மாரடைப்பு காரணமாக காலமானார். அவருடைய இறப்புக்கு காரணம் மன அழுத்தம் என்று பலரும் கூறி வந்தனர். ஆனால் அது எல்லாம் காரணம் கிடையாது என்று இயக்குனர் பேரரசு கூறியிருக்கிறார். அதோடு மனோஜ் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் ஏறி சிலர் செய்த செயல் குறித்து பிரபலம் ஒருவரும் வருத்தமாக பேசி இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் பெரும் புரட்சியை செய்த பாரதிராஜாவின் ஒரே மகனான மனோஜ் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு காலமானார். 48 வயதில் மாரடைப்பால் அவர் காலமான செய்தி சின்னத்திரையில் வருத்தத்தில் ஆழ்த்தியது. அவர் குறித்து பல நினைவுகளை அவரோடு பழகிய பலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

Manoj Bharathiraja

எதிர்பாராத சம்பவம்

மதிய உணவு சாப்பிட்டு விட்டு படுத்தவர் வெகுநேரமாகியும் எழவில்லை என்று பார்த்தபோதுதான் மனோஜ் மரணம் அடைந்த செய்தியே குடும்பத்தினருக்கு தெரிய வந்திருக்கிறது. மனோஜ்க்கு கடந்த மூன்று வாரங்களுக்கு முன்புதான் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. அந்த சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டு வீட்டிற்கு வந்து சில நாட்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.

மனோஜின் இறப்பு செய்தி

அதுபோல மனோஜ் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு மருத்துவ செக் அப்புக்கு போயிருந்த போது கூட அவருக்கு எல்லாம் நார்மலாக இருக்கிறது என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனாலும் அவர் திடீரென இறந்தது அவருடைய குடும்பத்தினரை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தி இருந்தது.

மனோஜ் பேசிய கடைசி பேட்டி

அதே நேரத்தில் மனோஜ் சின்ன வயதிலிருந்து இயக்குனராக வேண்டும் என்ற கனவோடு இருந்தார். ஆனால் அவருடைய அப்பாவின் விருப்பத்தால் நடிகராக மாறிவிட்டார். நான் ஒரு படத்தை இயக்க வேண்டும் என்ற கனவோடு பல வருடங்களாக இருப்பதாக பல பேட்டிகளில் பேசி இருந்தார். ஆனால் அவருக்கு இயக்குனராக வெற்றி கிடைக்கவில்லை என்ற வருத்தம் இருந்ததால் தான் அவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டு இதய நோய் வந்த காரணம் என்று சிலர் பேசி வந்தனர்.

இயக்குனர் பேரரசு கருத்து

இதுகுறித்து இயக்குனர் பேரரசு தன்னுடைய கருத்தை தெரிவித்திருக்கிறார். அதில் மனோஜ் பாரதிராஜா மன அழுத்தத்தில் இறந்துட்டாருன்னு பலரும் சொல்றாங்க. அதில் உண்மை இல்லை. மனோஜ் மன உளைச்சலில் இறந்தார் என்று பேசிக் கொண்டிருப்பவர்களிடம் வந்து நான் மன உளைச்சலில் இருக்கிறேன் என்று சொன்னாரா? நான் மனோஜின் அப்பா ஆபிசுக்கு அடிக்கடி போவேன் அங்கு மனோஜ் தான் உட்கார்ந்து இருப்பார். அவர் எப்போதும் சிரித்த முகமாகவே இருப்பார். அவருடைய மறைவுக்கு உடல்நிலை காரணமே தவிர மனநிலை அல்ல. தேவையில்லாமல் பழி சுமத்த கூடாது என்று கூறியிருக்கிறார்.

பிரபலம் வருத்தம்

அதுபோல மனோஜ் இறந்துவிட்டார் என்ற செய்தியை கேட்டதும் அங்கு சூர்யா போயிருந்தார். அப்போது சூர்யா பாரதிராஜாவிடம் ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கும் போது அதை வீடியோ எடுக்க வேண்டும் என்று சிலர் மனோஜ் உடல் வைக்கப்பட்டு இருக்கும் பெட்டியின் மீது படுத்து வீடியோ எடுத்து இருக்கிறார்கள். இதுவெல்லாம் எவ்வளவு மோசமானது தெரியுமா? அடுத்தவர்களின் கஷ்டத்தை கூட காசு பார்க்க வேண்டும் என்று சிலர் அநாகரிகமாக நடந்து கொள்கிறார்கள், மதியம் வரைக்கும் சாப்பிட்டுவிட்டு தூங்கியவர் உயிர் இல்லாமல் இருக்கிறார். அந்த வருத்தத்தில் குடும்பமே அழுது கொண்டிருக்கும் போது சிலர் அங்கு வீடியோ எடுக்கிறேன் என்கிற பெயரில் அநாகரிகமாக நடந்து கொண்டனர் என்று பிரபலம் ஒருவர் வருத்தம் தெரிவித்து இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+